தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

1.3.12

மாலேகான் மனித ரத்தம் குடிக்கும் சைவ "சாதுக்கள்"

கடந்த 2008 செப்டம்பர் 29, மாலேகான் மசூதியில், சக்தி வா ய்ந்த குண்டு வெடித்ததில், பலரும் கொல்லப்பட்டனர். வழ க்கம் போல்,ஆரம்பத்தில் போலீசார், முஸ்லிம்களை கைது செய்தனர்.   விசாரணையில், நாட்டில் நடந்த, அஜ்மீர் குண் டு வெடிப்பு, சம்ஜோதா ரயில் குண்டு வெடிப்பு, உள்ளிட்ட ப ல குற்ற செயல்களிலும், "பசுத்தோல் போர்த்திய புலிகளா க" காவி பயங்கரவாதிகள் இருப்பது, வெட்ட வெளிச்சமான து. இருப்பினம், இவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதென்பது, அவ்வளவு சுலபமான
காரியமில்லை. 


முதலில், இவைகளை கண்டு பிடித்த, பயங்கரவாத தடுப்பு பிரிவின் தலைவராக இருந்த "ஹேமந்த் கர்கரே"யை போட்டு தள்ளி விட்டனர். எத்தனை ஆதாரங்கள் கிடைத்த போதிலும், அத்வானி முதல் அன்ன ஹசாரே வரை, இவர்களின் ஆதரவு தளம் பறந்து விரிந்து இருப்பதால், வேறு வழியின்றி அவ்வப்போது கண்துடைப்புக்காக மட்டும், இவர்கள் சம்மன் அளிக்கப்பட்டு, ராஜ உபசரிப்போடு பெயரளவுக்கு விசாரிக்கப்படுவார்கள். இப்போது, கைது நடவடிக்கை வரை போயிருக்கிறார்கள். நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட, லோகேஷ் குமார் என்ற ஆர்.எஸ்.எஸ். தியாகியை, வரும் மார்ச் 9 வரை காவலில் வைக்க, நீதிபதி ஷிண்டே உத்தரவிட்டார். இந்த லோகேஷ் குமார் என்ற தியாகிக்கு, சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பிலும் பெரும் பங்குள்ளது. 


மேற்படி குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் கமல் சௌஹான், சுனில் ஜோஷி போன்றோரின் வாக்குமூலத்தின் காரணமாகவே, இவனும் கைது செய்யப்பட்டுள்ளான். இவர்களை கைது செய்யும் போது கூட, குறைந்தது இரு கைதுகளுக்கு இடை வெளியாக, ஒரு வருட அளவிற்காவது, கால அவகாசம் வழங்குவதை, போலீசார் ஜனநாயக கடமையாக கருதுகின்றனர். 


இவர்களின் கூட்டாளிகளை, 2010 ஜூன் 17 ல் அஜ்மீர் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்த பொலீஸ், ஓராண்டு அவகாசம் கொடுத்து 2011 ஜூன் 18 அன்று தான், சம்ஜோதா ரயில் எரிப்பு (குண்டு வைப்பு) வழக்கில் கைது செய்தனர். இவர்கள் முறையே, ஒவ்வொரு ஆண்டும், ஆர்.எஸ்.எஸ்ஸின் பேருதவியோடு, அஜ்மீர், மாலேகான் மசூதி, ஹைதராபாத் மக்கா மசூதி, உள்ளிட்ட பல குண்டு வெடிப்புகளையும்  நிகழ்த்தி,  மனித ரத்தம் குடிக்கும் சைவ "சாதுக்கள்"

0 கருத்துகள்: