தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

11.12.11

அமெரிக்காவே வன்முறையை தூண்டுகிறது - விளாடிமிர் புடின்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை எதிர்த்து மாஸ்கோவில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. ஆர்ப்பாட்டத்தில் ஈடுப ட்ட 250 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதாக டெலிகி ராப் தெரிவித்திருந்த நிலையில்,ரஷ்யாவில் வன்முறைக ள் ஏற்பட அமெரிக்காவின் அயலுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன் தான் காரணம் என ரஷ்ய பிரதமர் புடின் குற்றம் சுமத்தியுள்ளார்.அவர் மேலும் அணுசக்தி பலத்துடன்
ரஷ்யா இருக்கிறது. அதை பலவீனப்படுத்தும் நோக்கில் செயற்படும் அமெரிக்கா 

ரஷ்ய தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக  ஹிலாரி கூறியுள்ள கருத்துக்கள் எதிர்க்கட்சிகளை வன்முறையில் ஈடுபட தூண்டிவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் வன்முறையை தூண்டிவிட கோடிக்கணக்கான அமெரிக்க டாலர்களையும் அமெரிக்கா செலவிட்டு வருகிறது.  எனவும் கூறியுள்ளார் புடின்.

12 வருடங்களாக ஆட்சி புரிந்து வருகின்ற விளாடிமிர் புட்டினுக்கு எதிராக நாடுதழுவிய ரீதியில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளமை இதுவே முதல் முறையாகும் எனவும் 36000 பேர் வரை புடின் ஆட்சிக்கு எதிராக திரண்டு எழுவோம் என பேஸ்புக் பக்கமொன்றில் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

0 கருத்துகள்: