தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

29.8.11

தனி தனி அறைகளுக்குள் பேரறிவாளன், முருகன், சாந்தன்

தூக்கு தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் பேரறிவாளன், முருகன், சாந்தனை தனித் தனி அறையில் அடைத்துள்ளனர். 24 மணி நேரமும் அவர்களை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு வரும் 9-ம் தேதி் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுகிறது. இந்த செய்தியைக் கேட்ட அந்த மூவரும் அதிர்ச்சியில்
உறைந்தனர். தூக்கு தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து வேலூர் சிறையில் உள்ள அவர்களை தனித் தனி அறையில் அடைத்துள்ளனர்.
அவர்களுக்கு அறையை விட்டு வெளியே வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அவர்களின் அறைகளை 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். வெளியில் இருந்து வரும் உணவு பண்டங்கள் கொடுக்கப்படமாட்டாது.
அவர்களுக்கு 3 வேளையும் சிறை உணவு தான் கொடுக்கப்படுகிறது. அந்த உணவும் தீவிர சோதனைக்குப் பிறகு தான் கொடுக்கப்படடுகிறது.
தூக்கு தண்டனை உறுதியான பிறகு அவர்கள் 3 பேரும் கலக்கத்துடன் காணப்படுவதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

0 கருத்துகள்: