மேலும் 90 நாட்களுக்கு லிபியா மீதான தாக்குதல் நீடிக்கும்: நேட்டோ
திரிபோலி, ஜூன்.2- லிபியா அதிபர் கடாபியை தென்னாப்பிரிக்கா அதிபர் ஜூமா சந்தித்தபோது கடாபி பதவி விலக மறுத்து விட்டார். இதை தொடர்ந்து லிபியா தலைநகரான திரிபோலி மீது நேட்டோ ராணுவம் விமான தாக்குதலை தீவிரப்படுத்தியது.
நேட்டோவின் விமானத்தாக்குதலில் 718 அப்பாவிகள் பலியானதாக லிபியா அரசாங்கம் அறிவித்தது. இதற்கிடையில்
லிபியா மீதான தாக்குதலை மேலும் 90 நாட்களுக்கு நீடிக்க நேட்டோ நாடுகள் சம்மதித்து உள்ளன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக