அவருடன் மத்திய இணையமைச்சர் சோலங்கி மற்றும் 3 எம்.பி.,க்களும் உடன் சென்றுள்ளனர். பத்திரிக்கையாளர்களிடம் பேசிய ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சிரியா உடனான நமது உறவில் எந்தவித பிரச்சனைகள் எதுவும் இல்லை. இந்த பயணத்தின் மூலம் மேலும் உறவு வலுப்பெறும் என்று கூறினார்.
ஜனாதிபதி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பயணத்தை முடித்துக் கொண்டு சிரியா செல்கிறார். காஷ்மீர் விவகாரம் மற்றும் ஐ.நா., பாதுகாப்பு சபையில் நிரந்தர இடம் பெறுவதற்கு இருநாடுகளும் இந்தியாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக