
ஸன்ஆ:ஒரு மாதத்திற்கும் மேலாக தொடரும் உள்நாட்டு மோதல்களுக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை நடத்துவதற்கான வளைகுடா நாடுகளிடையேயான ஒத்துழைப்பு கவுன்சில்(ஜி.சி.சி) அழைப்பை யெமன் ஏற்றுக்கொண்டுள்ளது.
அரசு பிரதிநிதிகளும்,எதிர்கட்சியினரும் பங்கேற்கும் பேச்சுவார்த்தை சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாதில் வைத்து நடைபெறும். ஆனால்,தேதி நிச்சயிக்கப்படவில்லை.