தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

2.11.12

இஸ்ரேலில் மனநோயாளிகளை கட்டிலில் படுக்கு வைத்து செக்ஸ் கொடுமை. டாக்டர்கள் உள்பட 70 பேர் அதிரடி கைது.

இஸ்ரேல் நாட்டில் மனநோயாளிகளை செக்ஸ் கொ டுமைக்கு ஆளாக்கியதாக டாக்டர்கள் உள்பட 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இஸ்ரேலின் பெட்டா திக்வா நகரில் மனநல மையம் உள்ளது. இதில் 160 ம னநோயாளிகள் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வரு கின்றனர். இந்த மையத்தில் உள்ள நோயாளிக ளை கட்டிலில் கட்டி வைத்து செக்ஸ் கொடுமைக்கு உள் ளாக்குவதாகவும், அடித்து
துன்புறுத்துவதாகவும் சு காதார துறைக்கு கடந்த ஆண்டு புகார்கள் வந்தன.

புகார்கள் குறித்து போலீஸ் விசாரணை நடத்த அமைச்சகம் உத்தரவிட்டது. அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். மனநல மையத்தில் இருந்த கண்காணிப்பு கேமராக்களின் உதவியுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மன நோயாளிகளிடம் டாக்டர்கள், ஊழியர்கள் முறைகேடாக நடந்து செக்ஸ் சித்ரவதை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, டாக்டர்கள், ஊழியர்கள் உள்பட 70 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

0 கருத்துகள்: