தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

4.11.12

அமெரிக்காவில் சாண்டி புயல் பாதித்த பகுதிகளில் பெட்ரோல் வாங்க 1 கி.மீ தூரத்திற்கு வரிசை.


அமெரிக்காவில், புயல் பாதித்த பகுதிகளில், பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.அமெரிக்காவில், கடந்த வாரம் மையம் கொண்ட, "சாண்டி' புயல், 15 மாகாணங்களை தாக்கியது. இந்த புயலால், 80க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். விமானப் போக்குவரத்து மட்டும் தான் சகஜ நிலைக்கு திரும்பியுள்ளது.சாலைகள் மற்றும் சுரங்க ரயில்பாதைகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால், முழு வீச்சில் போக்குவரத்து துவங்கவில்லை.நியூயார்க்

மற்றும் நியூஜெர்சி உள்ளிட்ட பகுதிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாலைகளில் விழுந்து கிடப்பதால், அத்தியாவசிய பொருட்களின் சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது.
இன்னும் பல நகரங்கள் இருளில் தான் மூழ்கியுள்ளன. அமெரிக்காவின் பல நகரங்களில் 40 லட்சம் பேர், மின்சாரம் இன்றி அவதிக்குள்ளாகியுள்ளனர். மன்ஹாட்டன் நகரில், மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால், இப்பகுதியில் மின்சாரம் தொடர்ந்து துண்டிக்கப்பட்டுள்ளது.

போலீஸ் நிலையங்கள் உள்பட, அலுவலகங்களும், வர்த்தக நிறுவனங்களும், ப்ருக்ளின் நகரில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.மின்சாரம் துண்டிக்கப்பட்டு, வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில், போதிய ஆட்கள் நடமாட்டம் இல்லாததால், கடைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக நியூயார்க் போலீசார், 19 பேரை கைது செய்துள்ளனர்.சாலைகள் பழுது பட்டுள்ளதால், நியூயார்க் மற்றும் நியூஜெர்சி உள்ளிட்ட இடங்களுக்கு, கடந்த சில நாட்களாக, பெட்ரோல் சப்ளை செய்யப்படவில்லை.இதனால், இந்த பகுதிகளில், கடும் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு பெட்ரோல் நிலையங்களிலும், 1கி.மீ.,தூரத்துக்கு மக்கள் வரிசையில் காத்திருந்து, கேன்களில் பெட்ரோல் வாங்கி செல்கின்றனர்.சில இடங்களில், இது தொடர்பாக சண்டை மூண்டதால், அங்கெல்லாம், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

0 கருத்துகள்: