தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

6.9.12

சிவகாசி பட்டாசு ஆலை தீ விபத்து : 54 பேர் பலி : விபத்து நடந்தது ஏன்?


சிவகாசியின் முதலிப்பட்டி கிராமத்தில் நேற்று நண் பகல் நடைபெற்ற பட்டாசு தொழிற்சாலை வெடிவிப த்தில்பலியானோர் எண்ணிக்கை 54 ஆக உயர்வடை ந்துள்ளது. பல பேர் மருத்துவமனை கொண்டு செல் லும் வழியில் உயிரிழந்துள்ளனர். தீ விபத்து  நடந்த போது பல கிலோமீற்றருக்கு புகைமண்டலம் தென் பட்டுள்ளதுடன், ஒரு கிலோ மீற்றர் தூரத்திற்கு சத்த ம் கேட்டுள்ளது. எனினும், தீ முற்றாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும்,
உயிருடன் தீயில் சிக்கியிருந்த அனைவரையும் மீட்டுவிட்டதாகவும் மாலை 8 மணியளவில் மீட்பு குழுவினர் தெரிவித்துள்ள னர்.

இவ்வெடிவிபத்தில் மரணமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ2 இலட்சம் வழங்கப்படுவதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோர் அறிவித்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு தமிழக முதல்வர் தலா 25,000 ரூபாயும், பிரதமர் தலா 50,000 ரூபாயும் அறிவித்துள்ளனர்.  படுகாயமடைந்தவர்கள் பலர் அருகில் சிகிச்சை வசதிகள் எதுவும் இல்லாததால் விபத்து நடந்த இடத்திலிருந்து 70 கி.மீ தொலைவில் உள்ள மதுரை ராஜாஜி அரச மருத்துவமனைக்கே கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.  இதனால் உயிரிழப்புக்கள் அதிகரித்துள்ளன.

மேலும் தீ பரவிட்டது தெரிந்ததும் அக்கம் பக்கம் இருந்தவர்கள் உடனடியாக அங்கு கூடியுள்ளனர். அதன் போது மேலும் பல பட்டாசுக்கள் வெடித்துசிதற, பார்த்துக்கொண்டிருந்தவர்களிலும் சிலர் பலியாகியுள்ளதுடன், பலர் தீக்காயங்களுக்கு உட்பட்டுள்ளனர்.

கடந்த வாரம் தான் இந்த பட்டாசு ஆலையில் வெடிபொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள் ஆய்வு நடத்தியுள்ளனர். அப்போது ஆலையின் உரிமத்தை ஈரத்து செய்ய அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர். ஆனால் இந்த ஆலையை குத்தகைக்கு எடுத்தவர், உரிமத்துக்கான கால அவகாசத்தை நீட்டித்துள்ளார். அந்த உரிமத்திற்கான காலம் இன்றுடன்  முடிவடையும் நிலையில் அவசர அவசரமாக பட்டாசு தயாரிப்பு பணிகள் நடைபெற்றதாகவும் இதுவும் விபத்துக்கு முக்கிய காரணம் எனவ புதிய தலைமுறை ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

வெடி பொதிகளில்  வெடி உப்பு, பொட்டாசியம் உட்பட இராசயன பொருட்கள் மற்றும் மருந்து நிரப்பும் பணி நடைபெற்றுக்கொண்டிருந்த போது ஒரு கட்டத்தில் அதிக அழுத்தத்துடன் வெடிபொருள் நிரப்பப்பட்டதால் இத்தீ ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவில் 90% வீதமான பட்டாசுக்கள் சிவகாசியில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதுவரை அங்கு நடந்த தீ விபத்துக்களில் இம்முறையே அதிகம்பேர் உயிரிழந்த விபத்தாக இது பதிவாகியுள்ளது.

2009 இல் தீபாவளி காலப்பகுதியில், திருவள்ளூர் மாவட்டத்தின் பல்லிபட்டில் நடந்த பட்டாசு வெடிவிபத்தில் 32 பேர் கொல்லப்பட்டதே இவ்வகையனா வெடிவிபத்துக்களில் அதிகமானோர் கொல்லப்பட்ட சம்பவமாக பதிவாகியிருந்தது.

2010ம் ஆண்டு சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலைகளில் நேரிட்ட 22 தீ விபத்துக்களில் மொத்தம் 20 பேரும், 2009 விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு தயாரிப்பில் நேரிட்ட 23 விபத்துக்களில் மொத்தம் 33 பேரும் கொல்லப்பட்டனர்.

இந்தியா முழுவஹ்டும் அங்கீகரிக்கப்பட்ட பட்டாசு ஆலைகளில் 1.2 இலட்சம் மக்கள் பணியாற்றுவதாகவும், அங்கீகாரம் இல்லாத ஆலைகளிலும் வீடுகளிலும் பட்டாசு தயாரிப்பில் சுமார் 1 இலட்சம் பேர் பணியாற்றுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதுவும் குறிப்பாக சிவகாசி பட்டாசு உற்பத்திக்கு பேர் போன நகரம் என்கிற போதும், அங்கு மருத்துவமனைகளில் தீக்காயங்களுக்கு முறையான சிகிச்சைகூடங்கள் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.

0 கருத்துகள்: