தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

12.7.12

சிறுநீரை அருந்துவது பாரம்பரிய சிகிச்சை : நியாயப்படுத்தும் ஸ்வாமி அக்னிவேஷ்


சிறுநீரை அருந்துவது ஒரு பாரம்பரிய மருத்துவசி கிச்சை தான். மே.வங்க பள்ளிவிடுதியில் நடந்த சம் பவத்தை அப்படி எடுத்துக்கொள்ளலாம் என விஷ்வ பாரதி அமைப்பின் சமூக சேவகர் ஷ்வாமி அக்னிவே ஷ் தெரிவித்துள்ளார்.அண்மையில் மேற்குவங்க பள் ளி விடுதியில் 10 வயது சிறுமிக்கு,  படுக்கையில் சி றுநீர் கழிக்கும் பழக்கத்தை நிறுத்துவதற்காக, சிறுநீ ரை எடுத்து அருந்தவைத்த விடுதி வார்டன் தொடர் பில் நாடெங்குமிருந்து
கடும் ஆட்சேபணை எழுந்த து.இந்நிலையில் இவ்விவ
காரம் குறித்த பெண்ணின் பெற்றோராலும், ஊடகங் களாலும் திட்டமிடப்பட்டு பெரிது படுத்தப்பட்டுவிட்டதாகவும் அந்த வார்டன் செய்தது ஒரு சிறிய அறிவுரை தான் எனவும் அக்னிவேஷ் கருத்து தெரிவித்துள்ளார்.

நானும் எனது பருவவயது வரை படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கத்தை கொண்டிருந்தேன். அப்போது பாரம்பரிய மருத்துவ சிகிச்சையான ஷிவம்பு அல்லது ஸ்வமூத்ர ஷிகிஷ்டாவை நான் அம்பாலா சிறையிலிருந்த போது மேற்கொண்டுள்ளேன்.

நான் புத்தகத்தில் வாசித்து அதை அறிந்து கொண்டேன். இப்பழக்கத்தை குறைத்துக்கொள்வதற்கு இச் கிச்சை உதவியது. முன்னாள் பிரதமர் மோராஜி தேசை, முன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சர் ஜோர்ஜ் ஃபெர்னாண்டஸ், முன்னாள் ஹரியானா முதல்வர் தேவி லால் ஆகியோரும் இந்த சிகிச்சையை பின்பற்றி நன்மை அடைந்துள்ளனர் என ஸ்வாமி அக்னிவேஷ் தெரிவித்துள்ளார்.

சம்பவம் நடைபெற்ற பாரதா பவான் பள்ளி மீது 10 நாட்களுக்குள் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு மேற்குவங்க அரசுக்கு சிறுவர் உரிமை பாதுகாப்பு தொடர்பான தேசிய கமிஷன் நோட்டிஸ் அனுப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: