தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

24.11.11

ரத்த கண்ணீர் வடிக்கும் ஆண்கள்


சென்னையில் உலக ஆண்கள் தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஆண்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கான கருத்தரங்கம் நடந்தது. இதில் சென்னையை சேர்ந்த சுமார் 100 பேர் கலந்து கொண்டனர். இவர்களில் பலரும் வரதட்சணை கேட்டு மிரட்டிய வழக்கு, குடும்ப வன்முறை சட்டப்பிரிவின் கீழ் வழக்கு உள்ளிட்ட வழக்குகளில் சிக்கி சிதைந்து கொண்டிருப்பவர்கள், வாழவும் முடியாமல் வேலைக்கும் போகவும் முடியாமல் தினமும் அவதிப்படுவதாக குமுறினார்கள்.

ஆண்கள் பாதுகாப்பு இயக்க தலைவர் அருந்துமிலன் கூறும்போது, பெண்கள் ஜோடித்த பொய்யான வழக்குகளில் சிக்கி பல ஆண்கள் பாதித்துள்ளனர். குடும்ப வன்முறை சட்டங்கள் ஆண்களுக்கு எதிராகவும், அடிமைப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.

பெண்களின் பொய்யான குற்றச்சாட்டுகளால் பாதிக்கப்படும் ஆண்களுக்கு சட்டரீதியாக உதவுவதற்கு தனி அறக்கட்டளை தொடங்கப்படும் என்றார்., பெண்களை பார்த்து இறக்கப்படும் ஆண்கள், ஆண்களை பார்த்து இறக்கம் வருமா?

0 கருத்துகள்: