தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

22.11.11

பாலஸ்தீனத்துக்கு 51 கோடி நிதியுதவி வழங்கிய இந்தியா

பாலஸ்தீனத்துக்கு 2011-12-ம் ஆண்டுக்கான வருடாந்திர நிதியுதவியாக ரூ.51 கோடியை இந்தியா அளித்தது. இந்த நிதியுதவிக்கான காசோலையை "ஐக்கிய நாடுகளின் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கான அமைப்பிடம்" இந்திய வெளியுறவுத் துறையின் இணையமைச்சர் இ.அகமது வெள்ளிக்கிழமை அளித்தார். ஐ.நா. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் அமைப்பின் ஆணையர் ஃபிலிப்போ கிராண்டியிடம் இக்காசோலை கையளிக்கப்பட்டது. இந்நிதியுதவி
குறித்துக் கருத்துத் தெரிவித்த அகமது, ஐ.நா.மீட்பு அமைப்பின் சார்பில் நடத்தப்படும் பள்ளிகளில் பயிலும் 76,000 குழந்தைகளின் உணவுத் தேவைக்காக இவ்வுதவி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். 

பாலஸ்தீன அகதிகளின் பாதிப்புகளை நீக்கும் பொருட்டு இத்தகைய நிதியுதவியை வருடந்தோறும் இந்தியா தொடரும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார். இரண்டு நாள் பயணமாக பாலஸ்தீனம் சென்றுள்ள அகமது, இந்தியா, பிரேசில், தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பான இப்ஸரமல்லாவில் கட்டியுள்ள பல்நோக்கு விளையாட்டரங்கத் திறப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.

மேலும் பாலஸ்தீன அதிபர் மகமூத் அப்பாஸயும், வெளியுறவுத்துறை அமைச்சர் ரியாத் மாலிக்கையும் அவர் சந்திக்கிறார். மத்திய கிழக்கு ஆசியாவிலுள்ள 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட பாலஸ்தீன அகதிகளுக்கு, ஐ.நா. மீட்புப் பணிகள் அமைப்பே கல்வி, சுகாதாரம், சமூக மேம்பாடு உள்ளிட்ட விஷயங்களில் உதவி செய்து வருகிறது. 2009-10-ம் ஆண்டிலிருந்து இவ்வமைப்புற்கு அளித்து வந்த நிதியுதவியை இந்தியா தற்போது உயர்த்தியுள்ளது.

0 கருத்துகள்: