தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

5.8.11

துபாய்:இந்த ஆண்டின் சிறந்த ஆளுமைக்கான விருது ஷேக் கலீஃபாவிற்கு


3756206763
அபுதாபி:இவ்வாண்டிற்கான மிகச்சிறந்த இஸ்லாமிய ஆளுமைக்கான விருது ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் கலீஃபா பின் ஸாயித் அல் நஹ்யானுக்கு துபாய் சர்வதேச புனித திருக்குர்ஆன் விருது கமிட்டி தேர்வுச்செய்துள்ளது.
துபாயில் நடைபெற்றுவரும் 15-வது சர்வதேச புனித திருக்குர்ஆன் விருது நிகழ்ச்சியில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
நாட்டிற்கும், குடிமக்களுக்கும்,
இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும், மனித சமூகத்திற்கும் நன்மைக்காகவும், வளர்ச்சிக்காகவும், அர்ப்பணிப்பு தன்மையுடன் நடத்திய முயற்சிகளையும், சேவைகளையும் கருத்தில்கொண்டு ஷேக் கலீஃபாவை இஸ்லாமிய ஆளுமையாக தேர்வுச் செய்ததாக புனித திருக்குர்ஆன் விருது கமிட்டியின் தலைவர் இப்ராஹீம் பூமெல்ஹா பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
கமிட்டி உறுப்பினர்கள் ஏகமனதாக ஷேக் கலீஃபாவை தேர்ந்தெடுத்தனர்.
கடந்த 1999-ஆம் ஆண்டு  ஷேக் கலீஃபாவின் தலைவரும் ஐக்கிய அரபு அமீரகத்தின் தந்தையாக கருதப்படுபவருமான ஷேக் ஸாயித் பின் சுல்தான் அல் நஹ்யான் இஸ்லாமிய ஆளுமையாக தேர்வுச் செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: