தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

4.8.11

ஈராக்கில் தேவாலயம் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு மரண தண்டனை

பாக்தாத், ஆக. 4-  ஈராக்கில் தேவாலயம் மீது தாக்குதல் நடத்திய மூன்று பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தில் துப்பாக்கியுடன் புகுந்த மர்ம நபர்கள் சரமாரியாக சுட்டனர். இந்த தாக்குதலில், பாதிரியார் மற்றும் பொது மக்கள் உள்பட 68 பேர் கொல்லப்பட்டனர். இது குறித்து
காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து 4 பேரை கைது செய்தனர். அவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றவாளிகள் 3 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும் ஒருவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

0 கருத்துகள்: