தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

30.7.11

அன்னா ஹசாரே உண்ணாவிரதம் அறிவிப்பு: டெல்லியில் 144 தடையுத்தரவு

புதுடெல்லி, ஜூலை. 30-   காந்தியவாதி அன்னா ஹசாரே அறிவித்துள்ள உண்ணாவிரதப் போராட்டத்தை முறியடிப்பதற்காக டெல்லியில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வரும் ஆகஸ்ட் 16ம் தேதி டெல்லி, ஜந்தர்மந்தர் பகுதியில் அன்னா ஹசாரே அறிவித்துள்ள உண்ணாவிரதப் போராட்டத்தை முறியடிக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதனால், ஜந்தர் மந்தர் உள்ளிட்ட பாராளுமன்றப் பகுதிகளில் 144 பிரிவின்
கீழ் தடை உத்தரவு அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. வரும் பருவகாலக் கூட்டத்தொடரின்போது, இந்தத் தடையுத்தரவு அமல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அரசின் இந்தச் செயலைத் தொடர்ந்து, அன்னா ஹசாரே தான் மேற்கொள்ளப்போகும் உண்ணாவிரதத்துக்கு நீதிமன்றத்தை அணுகவுள்ளார். நீதிமன்றத்தின் வழிகாட்டுதல் அடிப்படையில் உண்ணாவிரதத்தை மேற்கொள்வது குறித்து திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 கருத்துகள்: