தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

16.4.11

கடலோர நகரங்கள் தண்ணீரில் மூழ்கும் அபாயம்!!

எப்ரல் , உலகம் வெப்பமாகி விட்டதால் வழக்கத்தை விட பனிப்பாறைகள் அதிக அளவில் உருகத் தொடங்கி விட்டன.

அவை கடந்த 350 ஆண்டுகளை விட தற்போது கூடுதலாக உருகி வருகிறது. தென் அமெரிக்காவின் படகோனியாவில் உள்ள பனிப்பாறைகள் மிகப் பெரியவை. அவற்றில் உள்ள 270 பனிப்பாறைகள் தற்போது உருகத் தொடங்கி உள்ளன.

 இதனால் அங்கு கடந்த 30 ஆண்டுகளில் ஐஸ்கட்டிகளின் அளவு மிகவும் குறைந்துள்ளது. இது படிப்படியாக குறைந்து பனிப்பாறைகள் இல்லாத நிலை உருவாகும்.

அதே போன்று ஆல்ப்ஸ் மலையில் உள்ள பனிப்பாறையும் உருகி வருகிறது. இவ்வாறு உருகி வருவதால் பனிப்பாறைகள் இல்லாத நிலை உருவாகி ஆறுகள் வற்றும் சூழ்நிலை ஏற்படும்.

அதே நேரத்தில் கடலில் நீர்மட்டம் உயர்ந்து பெரும்பாலான தீவுகள் மற்றும் கடலோர நகரங்கள் தண்ணீரில் மூழ்கும் அபாயம் உருவாகும். இந்த ஆய்வை இங்கிலாந்தில் உள்ள ஆபெர்ட்வித் பல்கலைக்கழக நிபுணர்கள் மேற்கொண்டனர்.

இந்த பனிப்பாறைகள் வழக்கத்தை விட 100 மடங்கு அதிகமாக உருகுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

0 கருத்துகள்: