தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

1.2.11

முஸ்லிம்களிடையே நீதி கிடைக்கவில்லை என்ற எண்ணம் அதிகரித்து வருகிறது - திக் விஜய்சிங்

போபால்,ஜன.31:பல்வேறு காரணங்களால் முஸ்லிம்களிடையே நீதி கிடைக்கவில்லை என்ற எண்ணம் அதிகரித்து வருவதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் திக்விஜய்சிங் தெரிவித்துள்ளார்.

ஹிந்துக்கள் பெரும்பான்மையினராக வாழும் இந்தியா முஸ்லிம்களுக்கும் சொந்தமானதுதான் என்ற நம்பிக்கையை முஸ்லிம்களுக்கு வலுப்படுத்தும் பொறுப்பு ஹிந்துக்களுக்கு உள்ளது.

இந்தியாவில் தங்களுக்கு நீதி கிடைக்கும் என்ற உணர்வை முஸ்லிம்களிடையே உருவாக்க வேண்டுமென திக் விஜய் சிங் தெரிவித்தார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்


0 கருத்துகள்: