தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

18.1.11

இராக்கில் தற்கொலைப்படை தாக்குதல்: 60 பேர் பலி

திக்ரித் (இராக்), ஜன. 18: இராக் முன்னாள் சர்வாதிகாரி சதாம் ஹுசைன் சொந்த ஊரான திக்ரித்தில் செவ்வாய்க்கிழமை தற்கொலைப் படையைச் சேர்ந்த மனித குண்டு நடத்திய தாக்குதலில் 60 பேர் பலியாகினர். 150 பேர் காயம் அடைந்தனர்.
 போலீஸ் பணிக்கு ஆட்களை தேர்வு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முகாமுக்கு வந்திருந்தவர்களுக்கு நடுவில் புகுந்த மனித குண்டு இந்த தாக்குதலை நடத்தினார்.
 இறந்தவர்களில் பலர் போலீஸ் வேலைக்கு சேருவதற்காக வந்திருந்தவர்கள்
 
 இராக் தலைநகர் பாக்தாதுக்கு வடக்கே 150 கிமீ தொலைவில் உள்ளது திக்ரித் நகரம். காலை சுமார் 10.15 மணி அளவில் நடந்த இந்த பயங்கரவாத தாக்குதலில் காயம் அடைந்தவர்கள் திக்ரித்தில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
 போலீஸ் வேலைக்கான முகாமுக்கு வந்திருந்தவர்கள் சுமார் 300 பேர் வரிசையாக நின்றிருந்தனர். அப்போது தற்கொலைப்படைத் தீவிரவாதி இந்த தாக்குதலை நடத்தியுள்ளார் என காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சதாம் ஹுசைன் குடும்பத்தாரின் சொந்த பகுதி திக்ரித். இது சன்னி பிரிவினர் நிறைந்த பகுதி. எனினும் ஷியா பிரிவினர்தான் ஆட்சி நிர்வாகத்தில் அமர்ந்துள்ளனர். அவர்களுக்கு எதிராகவே அவ்வப்போது பயங்கரவாத தாக்குதல் நடக்கிறது.
இராக்கை விட்டு இந்த ஆண்டில் முழுமையாக வெளியேற உள்ள அமெரிக்க படைகள், தீவிரவாத எதிர்ப்பு வேட்டையை நிறுத்திக்கொண்டுள்ளன. இந்த நிலையில் இராக் போலீஸ் மற்றும் பாதுகாப்புப் படைகள் மீதான தாக்குதலை தீவிரவாதிகள் முடுக்கிவிட்டுள்ளனர் என கூறப்படுகிறதுஇந்த இடுகை தங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள இன் ட்லியில் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்களேன்.நன்றி

0 கருத்துகள்: