தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

27.1.11

தீவிரவாதிகள் தாக்குதல்: ரஷியாவில் மீண்டும் குண்டு வெடித்தது; 4 பேர் பலி


மாஸ்கோ, ஜன 27-
 
ரஷியாவில் உள்ள டோமோதேவ் டோவோ விமான நிலையத்தில் கடந்த திங்கட்கிழமை தீவரவாதிகள் மனித குண்டு தாக்குதல் நடத்தினார்கள். இதில் 35 பேர் கொல்லப்பட்டனர்.இந்த நிலையில் இன்று மீண்டும் குண்டு வெடித்து உள்ளது.
 
டாஜெய்டன் மாநிலத்தில் உள்ள கேசவ்பர்ட் நகரில் இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. அங்குள்ள ஓட்டல் முன்பு நிறுத்தப்பட்டிருந்த காரில் குண்டை வைத்து வெடிக்க செய்தனர். இதில் 4 பேர் உயிர் இழந்தனர். 7 பேர் காயம் அடைந்தனர்.
 
இதே நகரில் கடந்த மாதம் 1-ந்தேதியும் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. அதில் 4 பேர் பலியானார்கள்.இந்த பகுதியில் செசன்ய தீவிரவாதிகள் ஆதிக்கம் உண்டு. எனவே அவர்கள் தான் தாக்குதலை நடத்தி இருக்க வேண்டும் என கருதப்படுகிறது. ரஷியாவில் அடுத்தடுத்து நடந்து வரும் குண்டு வெடிப்பு மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

0 கருத்துகள்: