தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

10.10.11

ஏமன் அதிபர் அலி அப்துல்லாஹ் ஸாலிஹ்உடனடியாக ராஜினாமா முடிவு

ஸன்ஆ:ஒன்பது மாதங்களாக யெமன் நாட்டில் தொடரும் அரசு எதிர்ப்பு ஜனநாயக ரீதியிலான போராட்டம் வெற்றியை நோக்கி நகர்கிறது. இதன் அடையாளமாக பதவி விலகப்போவதாக அந்நாட்டின் சர்வாதிகாரி அலி அப்துல்லாஹ் ஸாலிஹ் அறிவித்துள்ளார்.

யெமனின் போராட்ட நாயகி
தவக்குல் கர்மான் சமாதானத்திற்கான நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு 24 மணிநேரங்கள் கழியும் முன்பே அலி அப்துல்லாஹ் ஸாலிஹ் தேசிய தொலைக்காட்சியில் ஆற்றிய உரையில் தான் பதவியிலிருந்து விலகப்போவதாக அறிவித்துள்ளார். “அதிகாரத்தை நான் தவிர்க்கிறேன். வரும் நாட்களில் பதவியிலிருந்து விலகுவேன்” என ஸாலிஹ் கூறினார்.
33 ஆண்டுகளாக யெமனில் சர்வாதிகார ஆட்சியை புரிந்துவரும் ஸாலிஹ் எதிர்ப்பாளர்களின் தாக்குதலில் காயமடைந்து சவூதியில் அரேபியாவில் சிகிட்சை பெற்றுவந்தார். மூன்றுமாதம் நீண்ட சிகிட்சைக்கு பிறகு யெமனுக்கு திரும்பிய ஸாலிஹிற்கு எதிராக போராட்டம் தீவிரமடைந்தது. எதிர்ப்பாளர்களை அடக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். வளைகுடா நாடுகள் மத்தியஸ்தம் வகிக்க தயாரானபோதும் ஸாலிஹ் பதவி விலக தயாராகவில்லை.
அதேவேளையில், ஸாலிஹின் ராஜினாமாவை எதிர்ப்பாளர்கள் சந்தேகத்தோடு பார்க்கின்றனர் என நோபல் விருது பெற்ற தவக்குல் கர்மான் அல்ஜஸீரா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். ஸாலிஹ் அதிகாரத்தை ஒப்படைக்கும் வரை போராட்டத்திலிருந்து வாபஸ் பெறப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

0 கருத்துகள்: