தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

11.8.12

டெசோ மாநாட்டிற்கு தடை - காவல்துறை அனுமதி மறுப்பு


நாளை திமுக சார்பில் நடக்கவிருந்த தமிழீழ ஆதரவாளர்கள் மாநாட்டிற்கு சென்னை காவல் துறை அனுமதி மறுத்துள்ளது. மாநாட்டிற்கு அனுமதி கொடுப்பது குறித்து சென்னை மாநாகர காவல் துறை முடிவெடுக்கலாம் என உயர்நீதிமன்றம் கூறியதன் பின்னனியில் நேற்று இரவு சென்னை மாநகர ஆணையர் திரிபாதி தலைமையில் நடந்த கூட்டத்தில் பாதுகாப்பு காரணம் கருதி மாநாட்டிற்கு அனுமதி மறுப்பதாக காவல் துறை அறிவித்துள்ளது.அனுமதி தொடர்பான முடிவு திமுக தலைவர் கருணாநிதிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், இன்று காலை

தனது கோபாலபுரம் வீட்டில் தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அனுமதி மறுப்பு குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்படலாம் என தெரிகிறது. மேலும் வேறு ஏதாவது ஊரில் நடத்துவது குறித்து ஆலோசிக்கபட்டதாகவும், எனினும் ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டுவிட்டதால் மாநாட்டை வேறு ஊரில் நடத்துவது சாத்தியமில்லை என திமுக வட்டாரங்கள் கூறுகின்றன.

0 கருத்துகள்: