தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

15.6.11

நாளை பெட்ரோல் விலை மீண்டும் உயர்த்தப்படுகிறது. டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையும் உயரும்?


நாளை பெட்ரோல் விலை மீண்டும்  உயர்த்தப்படலாம் என்று கூறப்படுகிறது. மேலும் டீசல் விலையையும் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையும், சமையல் எரிவாயுவின் விலையையும் உயர்த்த மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்த பிறகு தொடர்ந்து பெட்ரோல் விலை ஏற்றப்பட்டு வருகிறது. கடந்த சில வாரங்களுக்குப் முன்னர் நடந்த ஐந்து மாநில தேர்தல்களுக்காக மட்டும் பெட்ரோல் விலை உயர்த்தப்படாமல் இருந்தது. எனினும், அதற்குப் பின்னர் இருமுறை உயர்த்தப்பட்டு உள்ளது.  மேலும் மத்திய அரசு பெட்ரோல் விலையை உயர்த்தும் உரிமையை எண்ணை நிறுவனங்களுக்கே கொடுத்து விட்டது.  இதனால் உலக சந்தையில் எண்ணை விலை ஏற்றத்தை காரணம் காட்டி, இந்த நிறுவனங்கள் பெட்ரோல் விலையை ஏற்றி வருகின்றன.

இந்நிலையில் நாளை முதல் மேலும் பெட்ரோல் விலை ஏற்றப்படும் என்று கூறப்படுகிறது. கடந்த முறை பெட்ரோல் உயர்வின் பொழுது டீசல் மற்றும் சமையல் எரிவாயுவின் விலை ஏற்றபடவில்லை. எனினும், இம்முறை இவற்றின் விலையும் உயர்த்தப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் டீசல் விலையை உயர்த்த மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஜெய்ப்பால் ரெட்டி, மன்மோகன் சிங்கிடம் கோரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: