தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

27.7.11

சிறிலங்காவின் கொலைக்களம் ஒபாமா, ஹிலாரிக்கும் கிடைத்தது


வன்னியில் இடம்பெற்ற இறுதிப் போரின் போது நிகழ்ந்த போர்க் குற்றங்கள் தொடர்பில், பிரித்தானியாவின் சனல்4 தொலைக்காட்சி வெளியிட்ட சிறிலங்காவின் கொலைக்களம் என்ற ஆவணப்படத்தின் பிரதிகள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிங்ரனுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

26.7.11

அணு விஞ்ஞானியின் படுகொலையின் பின்னணியில் அமெரிக்காவும், இஸ்ரேலும் – ஈரான்


டெஹ்ரான்:சனிக்கிழமை துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்ட ஈரானின் அணு விஞ்ஞானி ரஸாயியின் கொலையின் பின்னணியில் இஸ்ரேலும், அமெரிக்காவும் செயல்பட்டுள்ளதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
இச்சம்பவத்தை ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் அலி லிர்ஜானி ’அமெரிக்க-சியோனிச தீவிரவாதம்’ என குறிப்பிட்டார். இத்தகைய செய்திகளின் எதிர்விளைவுகளை குறித்து அவர்கள் சிந்திக்கவேண்டும் என அவர் கூறினார்.

பெல்ஜியத்தில் முகத்திரைக்கு தடை அமுலுக்கு வந்தது


belgium-niqab
ப்ரஸ்ஸல்ஸ்:ஐரோப்பிய நாடுகளை வாட்டிவரும் இஸ்லாமியஃபோபியா பிரான்சை அடுத்து பெல்ஜியத்தையும் பாதிப்படையச் செய்துள்ளது. இதன் விளைவு அந்நாட்டில் முஸ்லிம் பெண்கள் தங்களது கண்ணியத்தை பாதுகாப்பதற்காக அணியும் முகத்திரைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தடை கடந்த சனிக்கிழமை அமுலுக்கு வந்தது.
இத்தடை மத சுதந்திரம் மற்றும்

பிரதமரின் முன்னிலையிலேயே 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை விற்பனைக்கு அனுமதி வழங்கினேன் – ஆ.ராசா


raja_jpg
புதுடெல்லி:பிரதமரின் முன்னிலையிலேயே 2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனைக்கு அனுமதி வழங்கினேன் என ஆ.ராசா டெல்லியில் சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.நீதிபதி ஷைனி முன்பாக அவர் இதனை தெரிவித்தார்.
2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஊழலில் சிக்கி ஆ.ராசா உள்பட 14 பேர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

யெமனில் குண்டுவெடிப்பு:மூத்த ராணுவ அதிகாரிகள் உள்பட எட்டுபேர் பலி


66-xmc7I_St_55
யெமன்:அதிபர் அலி அப்துல்லாஹ் ஸாலிஹிற்கு எதிராக மக்கள் எழுச்சிப் போராட்டம் வலுப்பெற்று வரும் யெமன் நாட்டில் நடந்த குண்டுவெடிப்பில் மூத்த ராணுவ அதிகாரிகள் உள்பட எட்டுபேர் மரணமடைந்தனர்.
இரண்டு அதிகாரிகள், மேஜர், லெஃப்டினண்ட் ஆகியோர் கொல்லப்பட்டவர்களில் அடங்குவர். யெமனின் கடலோர பிரதேசமான

மாட்டுக்கு பதிலாக மனிதர்களை வைத்து உழவு!


அமராவதி:மகாராஷ்டிராவில் வறுமை மற்றும் கடன் தொல்லை காரணமாக, மாடுகளுக்குப் பதிலாக, தன் இரு மகன்களை வைத்து, நிலத்தை உழுத விவசாயி பற்றி பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள விதர்பா பகுதியில் விவசாயம் தான், முக்கியத் தொழில். போதிய மழை இல்லாததால், இந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், அதிக

25.7.11

சர்ச்சையில் சிக்கிய தேவ்பந்த் துணைவேந்தர் வஸ்தன்வி ராஜினாமா


moulana_gulam
தேவ்பந்த்:குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திர மோடியை பாராட்டியதைத் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய தாருல் உலூம் தேவ்பந்த் இஸ்லாமிய கல்வி கலாசாலையின் துணைவேந்தர் முஹம்மது வஸ்தன்வி தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார்.
குஜராத்தில் முஸ்லிம்கள்

எகிப்தின் ஆயா மெதானி ஆஃப்ரிக்கன் பெண்டாத்லா​ன் விளையாட்டி​ல் தங்கம் வென்றார்


Aya Medani
கெய்ரோ:எகிப்தின் ஆயா மெதானி ஆஃப்ரிக்கன் பெண்டாத்லான் விளையாட்டில் பெண்களுக்கான போட்டியில் தங்கம் வென்றார். இப்போட்டிகள் எகிப்தின் அலெக்ஸான்ட்ரியா நகரில் நடந்து வருகின்றது. இதன் மூலம் இலண்டனில் நடைபெறப்போகும் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்கு தகுதி அடைகிறார் ஆயா.
இதே போன்று ஆண்களுக்கான

பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ உடன் சுப்ரமணிய சுவாமிக்கு தொடர்பு!


புதுடெல்லி: அரசியல் கோமாளியாக முன்பு தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட சுப்ரமணியம் சுவாமி தற்பொழுது தீவிர வலதுசாரி ஹிந்துத்துவா பயங்கரவாத ஆதரவாளராக தன்னை முன்னிலைப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ ஏஜண்ட் என அமெரிக்காவில் எஃப்.பி.ஐ கைதுச்செய்த நபருடன் சுப்ரமணியம் சுவாமி நிகழ்ச்சியொன்றில் கலந்துக்கொண்டது விவாதத்தை கிளப்பியுள்ளது.

மும்பை குண்டுவெடிப்பு:ஊகங்களின் பின்னால் அலையும் போலீஸ் – வேட்டையாடப்படும் முஸ்லிம் இளைஞர்கள்


blastsite-reu_th_0
புதுடெல்லி:22 உயிர்களின் பலிக்கு காரணமான மும்பை தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்து 10 தினங்கள் கழிந்தபிறகு மஹராஷ்ட்ரா தீவிரவாத தடுப்பு படையினர் ஊகங்களின் பின்னால் அலைந்துக் கொண்டிருக்கின்றனர். குண்டுவெடிப்பின் பின்னணியில் யார் செயல்பட்டார் என்பதுக் குறித்து ஆதாரம் ஒன்று கிடைக்காத நிலையில் வதந்திகளை பரப்பி முஸ்லிம் இளைஞர்களை வேட்டையாடத் துவங்கியுள்ளனர்.
மும்பை குண்டுவெடிப்பு வழக்குத்

பாரதிய ஜனதா முதல்வர் எடியூரப்பா ரூ.1 லட்சம் கோடி ஊழல்!


சட்ட விரோத சுரங்கத் தொழில் ஊழல் விவகாரம் தொடர்பான லோக் ஆயுக்த அறிக்கையில் எடியூரப்பா பெயர் இடம் பெற்றுள்ளதால், முதல்வர் பதவியை அவர் ராஜிநாமா செய்யக் வேண்டும் எனக் கோரி காங்கிரஸ் சார்பில் பெங்களூரில் சனிக்கிழமை தர்னா நடைபெற்றது.

சுதந்திரப் பூங்காவில் நடைபெற்ற இப் போராட்டத்தை மாநில

தொடக்கக் கல்வியின் தரமே இந்தியாவின் எதிர்காலம்! கலாம்!


தொடக்கக் கல்வியின் தரத்தைப் பொறுத்தே இந்தியாவின் எதிர்காலம் அமையும் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தெரிவித்தார்.

ஆரம்பக் கல்வியை ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் அடிப்படை உரிமையாக மாற்ற வேண்டும்.  படைப்பாற்றல் திறனை வளர்க்கும் வகையில் ஆரம்பக் கல்வியை மாற்றி அமைப்பதில் ஆசிரியர்களின் பங்கு மிகவும் முக்கியமானது. 

24.7.11

இந்திய ராணுவத்தின் வெறித்தனம்​: கஷ்மீர் முஸ்லிம் இளம்பெண் வன்புணர்வு ​- கடுமையான நடவடிக்கை எடுக்க முதல்வர் உறுதி


23TH_KULGAM_730872f
ஸ்ரீநகர்:ஜம்மு கஷ்மீர் மாநிலத்தில் அங்க சுத்தி(தொழுகைக்காக ஒழு) செய்ய வீட்டிலிருந்து வெளியே வந்த முஸ்லிம் இளம் பெண்ணை கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வு செய்த காம வெறிப்பிடித்த இந்திய ராணுவத்தினர் இருவர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதாக ட்விட்டரில் அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லாஹ் உறுதியளித்துள்ளார். சி்றப்பு ஆயுத அதிகாரச் சட்டம் இதற்கு தடையாக இருக்காது என அவர் தெரிவித்துள்ளார்.

நார்வே இரட்டைக் கு​ண்டுவெடிப்​பு: வலதுசாரி கிறிஸ்தவ தீவிரவாதி கைது


web-oslo23nw2_J_1301006cl-8
ஓஸ்லோ:நார்வேயில் நடந்த இரட்டைக் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 91ஆக உயர்ந்துள்ளது. உட்டோயா தீவில் போலீஸ் வேடத்தில் வந்த நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 84 பேரும் தலைநகரான ஓஸ்லோவில் பிரதமரின் அலுவலகத்திலும், அரசு அலுவலகங்களின் அருகிலும் நடந்த குண்டுவெடிப்பில் எட்டுபேரும் மரணித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக

முதன்மைக்கு முன்னேறிக்கொண்டிருக்கும் துபாய் !!


துபாய் : உலகின் மிகச் சிறந்த வர்த்தக நகரங்களுள் ஒன்றாக துபாய் தேர்வு செய்யப்பட்டுள்ளது.. உலகின் தலைசிறந்த 10 வர்த்தக நகரங்களுள் 9-வது இடத்தில் துபாய் உள்ளது., இது குறித்து சிபி ரிச்சர்ட் எல்லிஸ் நடத்திய ஆய்வறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளதாவது. 

சர்வதேச அளவில் பிரபலமாக உள்ள 56 சதவீத நிறுவனங்கள் துபாயில் செயல்படுகின்றன என்றும், சர்வதேச அளவில் பிரபலமாக விளங்கும் வர்த்தக நகரங்கள் குறித்த ஆய்வை ரிச்சர்ட் எல்லிஸ் நேற்று பட்டியலிட்டு வெளியிட்டது. இதில் உலகளவில் அலுவலகம் அமைத்து செயல்படும்

மனித உரிமை போராளியை எதிர்த்த மனிதகுல விரோதிகள்!


கேரளாவின் கலாச்சார நகரமாக கருதப்படும் திருச்சூரில் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க வருகைத்தந்த பிரபல எழுத்தாளரும், மனித உரிமை ஆர்வலருமான அருந்ததிராய்க்கு எதிராக பா.ஜ.கவை சார்ந்த  ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் போராட்டம் நடத்தினர்.

திருச்சூரில் சாகித்ய அகாடமி அரங்கில் புத்தகம் வெளியீட்டு விழாவிற்கு வருகைத்தந்தார் அருந்ததிராய். அவருக்கு எதிராக பா.ஜ.க பாசிச  ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் கறுத்த முகமூடி அணிந்து கொண்டு வெளியே போ (GO BACK )’ என கோஷம் எழுப்பி கொண்டு அவரை தாக்க முயற்சி செய்தனர்.

அஜ்மீர் குண்டுவெடிப்பிலும் ஆர்.எஸ்.எஸ் மூத்த தலைவர் இந்திரேஷ்குமார் குற்றவாளி – என்.ஐ.ஏ


indresh-kumar_l_1293083073
ஜெய்ப்பூர்:ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கத்தின் தேசிய செயற்குழு உறுப்பினரும், அவ்வமைப்பின் மூத்த தலைவருமான இந்திரேஷ் குமாரும், ஹிந்துத்துவா பெண் தீவிரவாதி பிரக்யாசிங் தாக்கூரும் அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கிலும் குற்றவாளிகள் என தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) நேற்று முன்தினம் ஜெய்ப்பூர் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளது.

ராம்தேவ் உதவியாளரின் சான்றிதழ்கள் போலியானது – சி.பி.ஐ கண்டுபிடிப்பு


81477779-acharya-balkrishna
வாரணாசி:ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கத்தின் யோகா குருவும், ஹைடெக் உண்ணாவிரதப் பேர்வழியுமான பாபா ராம்தேவின் முதன்மை உதவியாளர் பாலகிருஷ்ணாவின் சான்றிதழ்கள் போலியானவை என சி.பி.ஐ கண்டுபிடித்துள்ளது.
11 ஆயிரம் கோடிக்கும் அதிகமான சொத்துக்களை ஆன்மீகத்தின் பெயரால் மக்களை ஏமாற்றி சம்பாதித்துள்ள பாபா ராம்தேவ் ஊழக்கு எதிராக போராடுகிறேன் என்ற பெயரில் ஹைடெக் உண்ணாவிரதப்

23.7.11

நார்வேயில் குண்டுவெடிப்பு:87 பேர் மரணம்


LON816_Norway_E_1300682cl-3
ஓஸ்லோ:நார்வேயின் தலைநகரமான ஓஸ்லோவில் சனிக்கிழமை அதிகாலை நடந்த குண்டுவெடிப்புகளில் 87 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஏராளமானோருக்கு காயமேற்பட்டுள்ளது.
ஓஸ்லோ நகரத்தின் இதய பகுதியில் முதல் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.

உலக மக்கள்தொகை 7 பில்லியனை தாண்டுகிறது


Population_jpg_crop_display
ஐ.நா:உலக மக்கள் தொகை இவ்வாண்டு அக்டோபர் மாதம் இறுதியில் 7 பில்லியனை தாண்டும் என ஐ.நா ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு விநாடியும் உலகில் 5 குழந்தைகள் வீதம் பிறக்கின்றன. இதனால் ஒவ்வொரு ஆண்டும் 7 கோடியே 80 லட்சம் மக்கள் உலகில் அதிகரித்து வருகிறது.
1960 ஆம் ஆண்டு உலக மக்கள் தொகை 3 பில்லியனாக இருந்தது.