டோக்கியோ, பூகம்பம் மற்றும் சுனாமியால் நிலைகுலைந்த ஜப்பானுக்கு உலக நாடுகள் உதவி அளிக்க முன்வந்து உள்ளன.
ஜப்பானில் கடந்த வெள்ளிக்கிழமை பூகம்பம், மற்றும் சுனாமி ஆகியவை ஒருசேர தாக்கின. 33 அடி உயரத்துக்கு எழுந்த ஆழிப்பேரலையால் சென்டாய் நகரமே அடியோடு அழிந்தது. கட்டிடங்களையும், ஓடும் ரயில்களையும் இந்த ஆழிப்பேரலை புரட்டி போட்டது. இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். லட்சக்கணக்கானவர்கள் வீடுகளை இழந்து தவிக்கிறார்கள்.