
அன்பு, பரிவு ஆகியவற்றை நிலைநிறுத்தும் பண்டிகையாக தியாகப்பெருநாள் கொண்டாடப்படுகிறது. இந்த திருநாள் இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி சிறப்பு தொழுகைகள் நாடு முழுவதும் நடைபெற்றன.
தமிழகத்திலும் ஈதுல் அழ்ஹா எனப்படும் தியாகப்பெருநாள் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. மசூதிகள், ஈத்காக்களில் காலையில் சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன. பின்னர் குர்பானி கொடுத்து பண்டிகையை முஸ்லீம்கள் கொண்டாடினர்.
தலைநகர் சென்னையிலும், தமிழகத்தின் பிற பகுதிகளிலும் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.
சில இடங்களில் குர்பானிக்காக ஒட்டகங்களும் வரவழைக்கப்பட்டு அவை குர்பானி கொடுக்கப்பட்டன. நாளை தவ்ஹீத் ஜமாத்தினர் ஹஜ் பெருநாளை கொண்டாயிருப்பதாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினரும்,இந்திய தவ்ஹீத் ஜமாத்தினரும் அறிவித்துள்ளனர்.