ஜெயேந்திரர், விஜயேந்திரர் ஆகிய காஞ்சி மடாதிபதிகளை கைதுசெய்து பிரபலம் பெற்ற காவல்துறை கண்காணிப்பாளார் பிரேம்குமார் காலமானார்.காஞ்சி சங்கரராமன் கொலைவழக்கு என்கிற அந்த வழக்கில் ஜெயேந்திரரின் வாக்குமூலத்தை செய்தி ஓடைகளில் காணொளியாக வெளியிட்டவரும் இவரே.
கண்காணிப்பாளராவதற்கு முன்பு ஆய்வாளராகப் பணியாற்றிய போது இராணுவ வீரர் ஒருவரை கை காப்பிட்டு அழைத்துச் சென்று பரபரப்பூட்டியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.அந்த வழக்கில் தான் அண்மையில் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார் பிரேம்குமார்.
.
சிறுநீரகக் கோளாறால் அவதிப்பட்டுவந்த பிரேம்குமார் வடபழனி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிர்நீத்த பிரேம்குமாருக்கு 57 வயது ஆகிறது.முகப்பேரில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்களும் துறை சார்ந்த அலுவலர்களும் அவரது உடலை பார்வையிட்டு, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக