குவைத் சிட்டி:ஈரானில் குவைத் தூதரை அந்நாடு திரும்ப அழைத்துள்ளது. இந்நடவடிக்கை ஈரான் அரசிற்கு தெரிந்தே மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குவைத்தில் உளவு வேலைப்பார்த்த விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவித்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதேவேளையில், உளவு வேலைத் தொடர்பாக குவைத்தில் ஈரான் தூதரகத்தில் ஷெர்ஷே தஃபேயை குவைத் அரசு அழைத்து கண்டனத்தை தெரிவித்துள்ளது.
உளவு வேலை காரணமாக ஈரானின் தூதரை குவைத்திலிருந்து வெளியேற்றவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.