புதுடெல்லி,பிப்:ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை ஆட்டிப்படைத்து வரும் ஸ்பெக்ட்ரம் ஊழல் பா.ஜ.கவையும் தொற்றிக்கொண்டது.வாஜ்பாய் அமைச்சரவையில் தகவல் தொடர்பு அமைச்சராக பதவி வகித்த அருண் சோரிக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு சி.பி.ஐ சம்மன் அனுப்பியுள்ளது.விசாரணை நடத்துவதற்கு வருகிற 21-ஆம்தேதி டெல்லியில் சி.பி.ஐ தலைமையகத்தில் ஆஜராக அருண்சோரிக்கு
சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.


