ரிசானா நபீக் சவுதி அரேபியாவில் கழுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டு மரண தண்டனைநிறை வேற்றப்பட்டமைக்கு ஐரோப்பிய ஒன்றியம் கண்டம் வெளியிட்டுள்ளது. ரிசானாவை விடுதலை செய்யு மாறு பல தரப்பில் இருந்து கோரிக்கைகள் முன்வை க்கப்பட்ட போதும் சவுதி அரசு மரண தண்டனை நி றைவேற்றியதாக ஐரோப்பிய ஒன்றியம் கண்டித்து ள்ளது. ரிசானாவுக்கு மரண தண்டனை நிறைவேற் றப்பட்ட செய்தியை கேட்டு
தான் உண்மையில் கலக்கமுற்றதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார பொறுப்பு தலைமை அதிகாரி கெத்தரின் ஏஸ்ட ன் தெரிவித்துள்ளார்.ரிசானாவை மரண தண்டனையில் இருந்து விடுவிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியம் பல தடவைகள் சவுதி அரசிடம் கோரிக்கை முன்வைத்ததாக கெத்தரின் ஏஸ்டன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலை குற்றம் இடம்பெற்ற வேளையில் ரிசானா ஒரு சிறிய பெண் என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ரிசானாவின் மரணத்திற்காக அவரது குடும்பத்தினருக்கு, குழந்தையை இழந்த குடும்பத்தினருக்கும் அனுதாபங்களை தெரிவிப்பதாகவும் ரிசானாவின் மரணத்தால் குழந்தையின் பெற்றோரின் இழப்பு குறைக்கப்படும் என தான் நம்பவில்லை எனவும் கெத்தரின் ஏஸ்டன் குறிப்பிட்டுள்ளார்.
மரண தண்டனை விதிக்கப்படுவதை ஐரோப்பிய ஒன்றியம் உலகளாவிய ரீதியில் எதிர்ப்பதோடு, மரண தண்டனை மனித வாழ்வின் ஒரு முடியாத இழப்பை பிரதிபலிப்பதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார பொறுப்பு தலைமை அதிகாரி கெத்தரின் ஏஸ்டன் சுட்டிக்காட்டியுள்ளார்.
(அத தெரண - தமிழ்)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக