தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

31.3.12

கர்நாடக காவல்துறை தலைவர் கடாஃபியை விட மோசமானவர் : உயர்நீதிமன்றம்


கர்நாடக மாநில காவல்துறையின் தலைவராக (DGP) சங்கர் பிதரி என்பவர் மாநில அரசால் நியமிக்கப்பட்டதை எதிர்த்து, தீயணைப்பு மற்றும் அவசர சேவைப் பிரிவின் தலைவர் (DGP)அப்துல் ரஹ்மான் இன்பேன்ட் என்பவர் மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் (CAT) வழக்கு தொடர்ந்திருந்தார்.இவ்வழக்கில் அப்துர்ரஹ்மானுக்குச் சாதகமாக, நிர்வாகத் தீர்ப்பாயம் (CAT) தீர்ப்பு வழங்கியது. அத்தீர்ப்பை எதிர்த்து, நடப்பு காவல்துறைத் தலைவரான சங்கர் பிதரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில்,  மனுச்
செய்து வழக்காடினார். சங்கரின் மனு மீது,உயர்நீதிமன்றத் தீர்ப்பில் மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பில், எவ்வித குறைபாடும் இல்லை என்று கூறியுள்ளது.

மேலும்  வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது, கர்நாடகாவும், தமிழகமும்  இணைந்து நடத்திய சிறப்பு அதிரடிப்படை வேட்டையில், சங்கர் பிதரி ஏராளமான  அத்துமீறலில் ஈடுபட்டவர் என்பது, பலரது வாக்குமூலத்திலிருந்து  நன்கு  தெரிய வந்ததாகவும்  14 ஆதிவாசி பெண்களுக்கு, பல கோடி ரூபாய் இழப்பீட்டுத்  தொகையை, அரசு வழங்கியுள்ளது. இதெல்லாம், சங்கர் பிதரியின்  அத்துமீறல்களால் நிகழ்ந்தவை என்றும் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

நீதிபதி குமார் தன் கருத்தாக சதாம் உசேன், கடாஃபியின் செயல்பாடுகளை விட,  சங்கர் பிதாரியின் செயல்பாடு குறைந்ததல்ல என்று, இந்த நீதிமன்றம் கருதுகிறது. எனவே, உடனடியாக அவரை பதவியிலிருந்து அரசு விடுவிக்க வேண்டும். இல்லாவிடில், மாநில மக்களுக்கு பதிலளிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

0 கருத்துகள்: