சென்னை வர்த்தக கண்காட்சியில் இலங்கை பொருட்களை வைக்கக் கூடாது. மீறி வைத்தால் போராட்டம் நடத்தப்படும் என்று சீமான் எச்சரித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைவர் செந்தமிழன் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னை வர்த்தக மையத்தில்
வருகிற 23-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை இல்ல உள்வடிவமைப்பு மற்றும் அலங்காரப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள் பங்கேற்கும் கண்காட்சி நடைபெறவுள்ளது. ஜாக் கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் எனும் நிறுவனம் இந்த கண்காட்சியை ஏற்பாடு செய்கிறது. 21-வது ஆண்டாக நடைபெறும் இந்த பன்னாட்டு கண்காட்சியில் கிழக்காசிய நாடுகளான சிங்கப்பூர், மலேசியா, இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன என்று கண்காட்சியின் ஏற்பாட்டாளர்கள் விநியோகித்த துண்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.சென்னை வர்த்தக மையத்தில்
இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலைப் போரில் 1.5 லட்சம் மக்களை கொன்று குவித்த அந்நாட்டு அரசு தலைவர்களை போர்க் குற்றவாளிகளாக அறிவிக்க வேண்டும் என்றும், ஈழத் தமிழர்களுக்கு சம உரிமை அளிக்க மறுத்து வரும் அந்நாட்டிற்கு எதிராக பொருளாதார தடையை கடைபிடிக்க வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப் பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில், தமிழ் மண்ணில் நடைபெறும் கண்காட்சியில் இலங்கை நிறுவனங்களின் பங்கேற்பை அனுமதிப்பது என்பது தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றிய தீர்மானத்தையும், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையும் அவமதிப்பதாகும்.
எனவே சென்னை கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் இலங்கையில் இருந்து வரும் எந்த நிறுவனத்தையும் சென்னைக் கண்காட்சியில் பங்கு பெற அனுமதிக்கக் கூடாது. இலங்கையில் தயாரிக்கப்பட்ட எந்த பொருட்களும் இந்த கண் காட்சியில் இடம்பெற செய்யவும் அனுமதிக்கக் கூடாது என்று நாம் தமிழர் கட்சி கேட்டுக் கொள்கிறது. எங்களின் வேண்டுகோளையும் மீறி, இக்கண்காட்சியில் இலங்கை நிறுவனங்களோ அல்லது பொருட்களோ பங்கு பெற அனுமதிக்கப்பட்டால் அதனை எதிர்த்து நாம் தமிழர் கட்சி போராடும். இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக