தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

7.1.11

ஸ்ரீகிருஷ்ணா அறிக்கை சிபாரிசால் கருத்து வேறுபாடு: தனித்தெலுங்கானா உருவாக கட்சிகள் மும்முரம்


புதுடில்லி : "ஒன்றுபட்ட ஆந்திர மாநிலமே நீடிக்கலாம் என்றும், ஆந்திராவை இரண்டாக பிரிக்கலாம் என்ற பரிந்துரைகளை ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி தெரிவித்துள்ளதால், தனி தெலுங்கானா விவகாரத்தில் அரசியல் கட்சிகள் இடையே கருத்து ஒற்றுமை இல்லை. வேறுபாடு துவங்கியுள்ளது. இதனால், மேலும் குழப்பமான நிலைமையே உருவாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

"ஆந்திராவை இரண்டாக பிரித்து, தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க வேண்டும்'என்பது, தெலுங்கானா பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கை. இதை வலியுறுத்தி, அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த பிரச்னைக்கு தீர்வு காண, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் ஐந்து பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி, ஆந்திராவுக்கு 28 முறை சுற்றுப் பயணம் செய்து, அரசியல் கட்சிகள், அமைப்புகள், பொதுமக்களிடம் கருத்தை கேட்டது. அதன் அடிப்படையில் அறிக்கையை தயார் செய்து, கடந்த மாதம் 30ம் தேதி, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்திடம் அறிக்கை அளிக்கப்பட்டது. இந்நிலையில், உள்துறை அமைச்சர் சிதம்பரம், உள்துறை செயலர் ஜி.கே.பிள்ளை உள்ளிட்டோருடன் ஆந்திர அரசியல் கட்சிகள் நேற்று ஆலோசனை நடத்தின. தெலுங்கு தேசம், டி.ஆர்.எஸ்., - பா.ஜ., ஆகிய கட்சிகள் இதில் பங்கேற்கவில்லை. காங்கிரஸ், பிரஜா ராஜ்யம், இடதுசாரி கட்சிகள் ஆகியவை மட்டுமே பங்கேற்றன. இதன்பின், ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி அளித்த 461 பக்க அறிக்கையின் நகலை, உள்துறை அமைச்சர் சிதம்பரம் வெளியிட்டார். அதில் கீழ்கண்ட ஆறு முக்கிய பரிந்துரைகள் இடம் பெற்றுள்ளன.

1. தற்போது இருப்பதை போலவே, ஆந்திரா ஒரே மாநிலமாக இருக்கலாம். தெலுங்கானா பகுதியைச் சேர்ந்தவருக்கு முதல்வர் அல்லது துணை முதல்வர் பதவி தரலாம். தெலுங்கானா பகுதியை மேம்படுத்துவதற்காக, சட்ட ரீதியான சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை கணக்கில் கொண்டு பார்க்கும்போது, ஒருங்கிணைந்த ஆந்திராவே சிறந்ததாக உள்ளது.

2. ஆந்திராவை சீமாந்தரா, தெலுங்கானா என, இரண்டு மாநிலங்களாக பிரிக்கலாம்.

3. தெலுங்கானா பிராந்திய கவுன்சிலை உருவாக்க அதிகாரம் அளிக்கும் வகையிலான சட்டத்தை அரசு இயற்றலாம்.

4. ஆந்திராவை இரண்டாக பிரிக்கும்போது, ஐதராபாத்தை யூனியன் பிரதேசமாக்கலாம். இரண்டு புதிய மாநிலங்களுக்கும், தனித், தனி தலைநகரங்களை உருவாக்கலாம்.

5. ஆந்திரா, தெலுங்கானா என, இரண்டு மாநிலங்கள் உருவாக்கும்போது, ஐதராபாத்தை தெலுங்கானாவின் தலைநகராக அறிவிக்கலாம்.

6. ஆந்திராவை ராயல் - தெலுங்கானா, கடலோர ஆந்திரா என இரண்டு மாநிலங்களாக பிரிக்கலாம். அப்போது, ஐதராபாத்தை ராயல் தெலுங்கானாவின் தலைநகராக அறிவிக்கலாம்.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறியதாவது: ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி, ஆறு பரிந்துரைகளை தெரிவித்துள்ளது. இவற்றில் முதல் மூன்று பரிந்துரைகளை செயல்படுத்துவது நடைமுறைக்கு சாத்தியமற்றது என, கமிட்டியே அவற்றை நிராகரித்துள்ளது. கமிட்டியின் இந்த அறிக்கையை அனைத்து அரசியல் கட்சிகளும் கவனமுடன் ஆய்வு செய்ய வேண்டும். உடனடியாக எந்த முடிவுக்கும் வந்து விடக் கூடாது. நான் அழைப்பு விடுத்த கூட்டத்துக்கு, சில அரசியல் கட்சிகள் பங்கேற்கவில்லை. இது வருத்தம் அளிக்கிறது. தெலுங்கானா விவகாரம் தொடர்பாக இந்த மாதத்திற்குள் மீண்டும் அனைத்து கட்சிக் கூட்டம் நடத்தி, ஆலோசிக்கப்படும். இவ்வாறு சிதம்பரம் கூறினார்.

ஸ்ரீகிருஷ்ணா கமிட்டியின் பரிந்துரையால், பரவலாக கருத்து வேறுபாடு எழுந்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஒருங்கிணைந்த ஆந்திராவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், தெலுங்கு தேசம், பா.ஜ., - தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி ஆகிய கட்சிகள், தனித் தெலுங்கானா மாநிலம் அமைய வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளன. தனித் தெலுங்கானாவை வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப் போவதாக சந்திரசேகர ராவ் நேற்று அறிவித்தார். இந்த அறிக்கை குழப்பமானது, ஏற்கமுடியாதது என்று பா.ஜ., கூறியிருக்கிறது. ஏற்கனவே மத்திய அரசு உறுதி கூறியபடி தனித் தெலுங்கானா அமைக்க சட்டம் இயற்றாமல் தாமதப்படுத்தும் முயற்சி என்று கூட்டு நடவடிக்கை குழு அறிவித்திருக்கிறது. தெலுங்கானா மோதல் மீண்டும் ஆந்திராவில் துவங்கிவிட்டது.

6.1.11

லால்செளக்கில் கொடியேற்றும் திட்டத்தை பாஜக ஒத்திவைக்க கோரிக்கை

புதுதில்லி, ஜன.6: குடியரசு தினத்தன்று ஸ்ரீநகரின் லால்செளக் பகுதியில் தேசியக் கொடியேற்றும் பாரதிய ஜனதா கட்சியின் திட்டத்துக்கு அதன் கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதாதளம் ஆட்சேபம் தெரிவித்துள்ளது. 
 லால்செளக்கில் தேசியக் கொடியேற்றும் திட்டத்தை பாஜக ஒத்திவைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன். இப்போது அங்கு அமைதியை நிலைநாட்டும் வகையிலான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமே தவிர அதை சீர்குலைக்கும் எதையும் செய்யக்கூடாது என ஐக்கிய ஜனதாதளத் தலைவர் சரத்யாதவ் தெரிவித்தார்
ஜனவரி 12-ம் தேதி பாஜகவின் இளைஞர் பிரிவினர் கொல்கத்தாவில் இருந்து ஸ்ரீநகருக்கு யாத்திரை மேற்கொள்வார்கள் என்றும், அதன் முடிவில் குடியரசு தினத்தன்று லால்செளக்கில் தேசியக் கொடியை ஏற்றிவைப்பார்கள் என்றும் பாஜக முன்னதாக அறிவித்திருந்தது

தமிழர்கள் விசயத்தில் மிக தெளிவாக இருக்கும் இலங்கை சிங்களவர்கள்…


Tamil,Tamil News,Tamil News paper,Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily,newspaper,Tamilnadupolitics,kollywood,Tamil Cinema
இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் அல்ல. அவர்கள் சிறு மக்கள் பகுதியினர் மட்டுமேயாவர். அதாவது ஜப்பானில் உள்ள கொரியர்கள் போன்ற மற்றும் தாய்லாந்தில் உள்ள சீனர்கள் போன்றவர்களே இலங்கையில் உள்ள தமிழர்கள். அவர்களினால் சுய நிர்ணய உரிமையையோ சுயாட்சியையோ கோர முடியாது.
ஆனால் தமிழகத்தில் உள்ள தமிழர்கள் அந்நாட்டில் தேசிய இனமாகும் என்று ஜாதிக ஹெல உறுமயவின் சட்ட ஆலோசகரும் மேல் மாகாண சபையின் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
எதிர்காலத்தில் மூன்று முக்கிய இடங்களில் தமிழ் பிரிவினைவாதத்தின் தலைமைத்துவம் உருவாகலாம். கொழும்பில் எனது நண்பர் சுமந்திரன் அவ்வாறு உருவாகலாம். வடக்கு கிழக்கில் அரச சார்பற்ற நிறுவனங்கள் அவ்வாறு உருவாகலாம். புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் அலி ஜின்னா போன்றதொரு கதாபாத்திரத்தைக் கொண்ட ஒரு தலைவர் உருவாகலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அமர்வில் கலந்து கொண்டு சாட்சியமளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வு நேற்று நடைபெற்றபோது அதில் ஆணைக்குழுவின் தலைவர் சி. ஆர். டி. சில்வா கலந்து கொண்டிருக்கவில்லை. ஆணைக்குழுவின் ஐந்து உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
உதய கம்மன்பில அங்கு தொடர்ந்து கூறியதாவது
இலங்கையை பொறுத்தமட்டில் சிங்கள மக்களை மட்டுமே ஒரு இனமாக கருத முடியும். அந்த வகையிலேயே எமது வரலாறு மற்றும் கலாசாரம் அமைந்துள்ளது. ஆனால் இந்தியாவின் தமிழகத்தில் உள்ள தமிழ் மக்கள் அங்கு தம்மை ஒரு தேசிய இனமாக பார்க்கலாம். அதாவது தாய் மக்களின் நாடு தாய்லாந்து போன்று ஜப்பானியர்களின் நாடு ஜப்பான் இலங்கையின் தேசிய இனமாக சிங்கள மக்களை மட்டுமே பார்க்கலாம்.
தமிழ்நாட்டு தமிழர்கள்
அதன்படி தமிழ்நாட்டில் உள்ள தமிழ் மக்கள் அங்கு தேசிய இனமாகின்ற அதேவேளை ஏனைய நாடுகளான இலங்கை, சிங்கப்பூர், மலேஷியா, மடகஸ்கார், கென்யா போன்ற நாடுகளில் தமிழ் மக்கள் ஒரு சிறு மக்கள் பிரிவினர் மட்டுமேயாகும். அதாவது ஜப்பானில் உள்ள கொரியர்கள் போன்றும் தாய்லாந்தில் உள்ள சீனர்கள் போன்றவர்களே இலங்கையில் உள்ள தமிழர்கள்.
அதிகம் செய்துள்ளோம்
எனவே அவர்களினால் சுயாட்சியையோ சுய நிர்ணய உரிமையையோ கோர முடியாது. சிறு மக்கள் பிரிவினருக்கு உரிய உரிமைகளை மட்டுமே அனுபவிக்க முடியும். சிறிய மக்கள் பிரிவினர்களுக்கான உரிமைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடனத்தில் கூறப்பட்டுள்ளதை விட அதிகளவில் எமது நாட்டில் நாங்கள் செய்துள்ளோம்.
தமிழ் மக்களின் தாயகமான இந்தியாவில் கூட தமிழ் மொழி அரச கரும மொழியாக இல்லை. ஆனால் இலங்கையில் உள்ளது. அந்த வகையில் நாங்கள் இந்தியாவைவிட முன் சென்றுள்ளோம். செல்வநாயகம் உள்ளிட்ட எந்த தலைவரும் வடக்கு கிழக்கு எவ்வாறு தமிழ் மக்களின் தாயகமாக இருக்கும் என்பதனை நிரூபிக்கவில்லை. தமிழ் மக்கள் எவ்வாறு தேசிய இனமாக வருவார்கள் என்பதனை நிரூபிக்கவில்லை.
செல்வநாயகம் அகிம்சைவாதியா?
செல்வநாயகம் அகிம்சைவாதி என்று குறிப்பிடப்படுகின்றார். ஆனால் அவரின் உண்மையான விடயத்தை பார்க்கும்போது அவர் அந்தளவுக்கு அகிம்சைவாதி அல்ல என்பது புரியும்.
ஒரு சந்தர்ப்பத்தில் செல்வநாயகத்தின் கொள்கைகளுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் சிதம்பரம் கனகசிங்கம் மற்றும் நேசைய்யா உள்ளிட்ட பலர் கூட்டம் ஒன்றை நடத்தினர். அந்த கூட்டத்துக்கு குண்டர்களை அனுப்பி செல்வநாயகம் குழப்பியிருந்தார். செல்வநாயகத்தின் அகிம்சை போராட்டங்களில் பங்கெடுக்காதவர்களை குண்டர்களை கொண்டு தாக்கியிருந்தார்.
இற்றைக்கு 12 வருடங்களுக்கு முன்னர் புலிகளை தோற்கடிக்க முடியும் என்று எமது கட்சி கூறியது. அதாவது புலிகள் தோற்கடிக்கப்படவேண்டும் என்பதனை அனைவரும் ஏற்றுக்கொண்டாலும் அது முடியாத காரியம் என்றே நம்பினர். நாங்கள் அதனை உடைத்தோம். விளைவாக புலிகள் தோற்கடிக்கப்பட்டனர். நாங்கள் சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவில் தெரிவித்த விடயம் ஒன்று உள்ளது.
தமிழீழம் சரியானது என நிரூபித்தால் ஏற்போம்
அதாவது நாங்கள் செல்வநாயகத்தின் அகிம்சை ரீதியான அச்சுறுத்தலுக்கு பிரபாகரனின் அச்சுறுத்தலுக்கோ ஒரு போதும் அடி பணிந்ததில்லை. மாறாக தர்க்கங்களை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கின்றோம். நாங்கள் பௌத்தர்கள். தர்க்கவியல் ரீதியில் நிரூபிக்கப்படும் விடயங்களை ஏற்றுக்கொள்வோம். தமிழீழம் சரியான கோரிக்கை நிரூபித்ததால் அதற்காக முன்னிற்க தயார் என்று நாங்கள் கூறிவந்தோம். ஆனால் யாரும் அதனை நிரூபிக்க முன்வரவில்லை. மாறாக அச்சுறுத்தல் மட்டுமே இருந்தது.
வால் மட்டுமே இலங்கையில் இருந்தது
தற்போது மக்களுக்கு ஒரு விடயத்தை கூறவேண்டும். அதாவது புலிகளை தோற்கடித்த வெற்றிக்களிப்பில் தொடர்ந்து இருக்க வேண்டாம். அதற்கடுத்த பிரிவினைவாத சவாலை எதிர்கொள்ள முன்வாருங்கள். நவீன முறையில் எதிர்காலத்தில் பிரிவினைவாதம் உருவாகலாம். புலியின் வால் மட்டுமே இலங்கையில் இருந்தது. அதனை வெட்டியுள்ள நாங்கள் புலிகள் தோற்கடிப்பட்டுள்ளதாக கூறுகின்றோம்.
கால்கள் வெளிநாடுகளில்
ஆனால் அந்த புலியின் வாய் நோர்டிக் நாடுகளில் உள்ளது. முன் கால்கள் கனடாவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் உள்ளன. பின் கால்கள் தென்னாபிரிக்காவிலும் அவுஸ்திரேலியாவிலும் உள்ளன. எனவே தற்போது எமக்கு ஒரு இடைவெளி மட்டுமே கிடைத்துள்ளது.
இஸ்ரேல் எப்படி உருவானது?
இற்றைக்கு 100 வருடங்களுக்கு முன்னர் இஸ்ரேல் என்று ஒரு நாடு இருக்கவில்லை. 86 நாடுகளில் யூதர்கள் பரந்து காணப்பட்டனர். எனினும் ஒரு கட்டத்தில் 86 நாடுகளிலும் இருந்த யூதர்கள் ஒன்று கூடி இயக்கம் ஒன்றை ஆரம்பத்து பலஸ்தீனத்துக்குள் இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்கினர்.
இந்தியாவில் முதலில் ஏற்பட்ட பிரிவு முஸ்லிம் அல்ல. மாறாக 1919 ஆம் ஆண்டில் சுயநிர்ணய அரச>யலமைப்பு வந்ததும் கன்னடம் மலையாளம் தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய பகுதிகள் ஒரு வலயமாக இருக்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. பின்னர் 1935 ஆம் ஆண்டு அரசியலமைப்பின்போது அந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது. பின்னர் நாம் தமிழர்கள் இயக்கம் உருவானது. ஆனால் 1962 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தின் இராணுவத்தினால் அந்த இயக்கம் அழிக்கப்பட்டது.
லண்டன் மாநாடு
இதனையடுத்து 1962 ஆம் ஆண்டு லண்டனில் உலக தமிழ் சங்கத்தினால் மாநாடு ஒன்று நடத்தப்பட்டது. இலங்கையில் சிறைப்படுத்தப்பட்டிருந்த செல்வநாயகம் சிகிச்சை பெறுவதற்காக லண்டன் சென்றிருந்தபோது அந்த மாநாட்டில் கலந்துகொண்டார். அப்போது அவர் அந்த மாநாட்டில் என்ன கூறினார்? இந்தியா பெரிய நாடு. அதனுடன் மோதி நாட்டை பெற முடியாது என்றார். அதனையடுத்து இலங்கை தெரிவு செய்யப்பட்டது. செல்வநாயகம் மலேஷியாவில் இருந்து இலங்கைக்கு குடி பெயர்ந்தவர்.
தமிழ் அலி ஜின்னா வரலாம்
அன்று சர்வதேச நாடுகள் பிரிவினைவாத போராட்டத்துக்கு இரகசியமாக ஆதரவு வழங்கின. இன்று வெளிப்படையாக ஆதரவு வழங்குகின்றன. எதிர்காலத்தில் மூன்று முக்கிய இடங்களில் தமிழ் பிரிவினைவாதத்தின் தலைமைத்துவம் உருவாகலாம். கொழும்பில் எனது நண்பர் சுமந்திரன் அவ்வாறு உருவாகலாம். வடக்கு கிழக்கில் அரச சார்பற்ற நிறுவனங்கள் அவ்வாறு உருவாகலாம். புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் அலி ஜின்னா போன்றதொரு கதாபாத்திரத்தைக் கொண்ட ஒரு தலைவர் உருவாகலாம்.
எனவே தற்போதைய நிலைமையில் தமிழ் அலி ஜின்னா ஒருவரை எதிர்கொள்ள நாம் தயாராகவேண்டும். இதற்காக சட்டம் அறிவு தொல்பொருள் உள்ளிட்ட விடயங்கள் சார்ந்த அறிவுடைய இராஜதந்திர படை ஒன்றை நாங்கள் உருவாக்கவேண்டும்

மு.க அழகிரியின் ராஜினாமா கடிதம்…திமுகவுக்கே ஆப்பா


Tamil,Tamil News,Tamil News paper,Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily,newspaper,Tamilnadupolitics,kollywood,Tamil Cinema
மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, புத்தாண்டு அன்று தன்னை சந்திக்க வந்த பத்திரிக்கை நிருபர்களிடம், “நான் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டேன் என செய்தி போடுங்கள்” என்று கூறியதாக தகவல் பரவியுள்ளது.
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பிரச்சனைகளில் முக்கியமான ஒன்று 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் பிரச்சனை. சட்டசபை தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் வேளையில், தொடரும் ஊழல் பிரச்சனைகளால் கட்சியின் மதிப்பு மிகவும் பாதிக்கப்பட்டு வருவதாக தி.மு.க., வினர் இடையே குமுறல்கள் எழுந்துள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவின் ஸ்பெக்ட்ரம் ஊழல் பிரச்சனையால், தி.மு.க., வின் சாதனைகள் அனைத்தும் அழிந்து வருகிறது. அதனால் ராஜாவின் அமைச்சர் பதவியை பறித்தது போலவே, கட்சியின் கொள்கை பரப்புச் செயலர் பதவியையும் பறித்து, அவரை கட்சியின் நடவடிக்கைகளில் இருந்து ஒதுக்கி வைக்க வேண்டும்.
மேலும், தமிழக அமைச்சர் பூங்கோதையின் பதவியையும் பறிக்க வேண்டும். கனிமொழிக்கு கட்சியில் கொடுத்து வரும் முக்கியத்துவத்தினை குறைக்க வேண்டும். சென்னையில் நடைபெறுவதாக இருந்த சென்னை சங்கமம் நிகழ்ச்சியை நடத்தக் கூடாது போன்ற பல கோரிக்கைகளையும் மத்திய அமைச்சர் அழகிரி, முதல்வரிடம் வந்ததாக கூறப்படுகிறது.
தற்போது, ராஜாவின் கட்சிப் பதவியை நாமாக பறித்தால் அவர் செய்த ஊழலினை நாமே முன்வந்து ஒப்புக் கொண்டது போல் ஆகிவிடும். அதனால், பார்லிமென்ட் கூட்டுக்குழு விசாரணை, சி.பி.ஐ., விசாரணை, உச்ச நீதிமன்ற முடிவு இதையெல்லாம் பார்த்து விட்டு நாம் முடிவெடுப்போம். என தி.மு.க., கட்சித் தலைமை அழகிரியை சமாதானப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், புத்தாண்டு தினத்தன்று தன்னை சந்திக்க வந்த நிருபர்களிடம், நான் அமைச்சர் பதவியை ராஜிமானா செய்து விட்டேன் என செய்தி போடுங்கள் என்று கூறியதாகவும், இது குறித்த கடிதத்தை முதல்வர் கருணாநிதிக்கும், அன்பழகனுக்கும் அவர் அனுப்பியதாக வதந்தி பரவியுள்ளது.
பரபரப்பான சூழ்நிலையில் கடந்த 3ம் திகதி பின் நேரப்பொழுதின் போது, மதுரையில் இருந்து சென்னை சென்ற அழகிரி முதல்வரைச் சந்தித்தார். அப்போது, தன் மூன்று கோரிக்கைகளையும் அவர் வலியுறுத்தினார். இதை கட்சியின் உயர் மட்டக்குழுவினை கூட்டித் தான் முடிவு எடுக்க முடியும் என்று கூறிய முதல்வர், அவசர அவசரமாக உயர் மட்டக்குழுவினை கூட்டியதாக தி.மு.க. வட்டாரங்கள் செய்தி தெரிவித்துள்ளன.
முதல்வரின் பதிலால் சமாதானமடையாத அழகிரி உயர் மட்டக்குழுவை புறக்கணித்து விட்டு மதுரைக்குச் சென்றுவிட்டார். இருப்பினும், உயர் மட்டக்குழு தொடர்ந்தது. அதில், அழகிரியின் கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்த விடயத்தில் உடனடியாக எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என்றும், அதற்கு பதிலாக பொதுக்குழுவினை கூட்டலாம் என்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் கூறியுள்ளனர். இதனால், பிப்ரவரி 3ம் திகதி தி.மு.க., பொதுக்குழு கூடுவது குறித்த தகவல் வெளியாகியுள்ளது என்று செய்தி வட்டாரங்கள் தெரிவித்துள்ளது

ரேடார் கண்ணில் மண்ணைத் தூவும் போர் விமானத்தைத் தயாரித்தது சீனா

பெய்ஜிங்: ஸ்டெல்த் எனப்படும் ரேடார் உள்ளிட்ட எந்த கழுகுப் பார்வையிலும் சிக்காமல் பறக்கக் கூடிய அதி நவீன போர்விமானத்தை உருவாக்கியுள்ளதாம் சீனா. இந்த விமானம் குறித்த படங்கள் சீன இணையதளங்களில் வெளியாகியுள்ளது. இது தற்போது சோதனைக் கட்டத்திற்குத் தயாராகி வருவதாகவும் அச்செய்தி கூறுகிறது.

stealth எனப்படும் யார் கண்ணிலும் (ரேடார், சோனார், அகச்சிவப்பு கதிர்) படாமல் செயல்படும் தொழில்நுட்பம், 2வது உலகப் போரின்போதுதான் முதல் முறையாக நடைமுறைக்கு வந்தது. இத்தகைய தொழில்நுட்பத்தில் இயங்கும் போர் விமானங்களை எதிரிகளால் கண்டுபிடிக்கவே முடியாது. இதனால் இவற்றுக்கு மாயாவி விமானங்கள் என்றும் செல்லப் பெயர் உண்டு.

இத்தகைய விமானத்தைத்தான் இப்போது சீனா உருவாக்கியுள்ளதாம். இந்த செய்தி இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. இருப்பினும் தற்போது வெளியாகியுள்ள படங்களைப் பார்க்கும்போது அது சோதனை ரீதியான விமானமாக இருக்கும் என கருதப்படுகிறது.

இதுகுறித்து வால்ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்டுள்ள முதல் பக்கச் செய்தியில், ஜே20 என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த போர் விமானம், சோதனைக் கட்டத்திற்கு முந்தைய கட்டமான ஹை ஸ்பீட் டாக்சி டெஸ்ட் நிலையில் இருப்பதாக தெரிகிறது.

இந்த போர் விமானத் தயாரிப்பு உண்மையாக இருக்குமானால், சீனாவின் அதிவேக வளர்ச்சியை இது நிரூபிப்பதாக அமையு்ம். ஏற்கனவே விண்வெளித்துறையிலும், ரயில்வே துறையிலும் மிகப் பெரிய வளர்ச்சியை சந்தித்து வருகிறது சீனா. இந்த நிலையில் மாயாவி போர்விமானங்களை அது வெற்றிகரமாக தயாரித்து விட்டால் மிகப் பெரிய வல்லரசாக அது உயரும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகிலேயே இப்போதைக்கு ஒரே ஒரு மாயாவி போர்விமானம்தான் செயல்பாட்டில் உள்ளது. அது அமெரிக்காவின் எப்-22 போர் விமானமாகும். அந்த விமானத்துக்குப் போட்டியாக சீனாவின் ஜே20 உருவாகுமா என்ற எதிர்பார்ப்பு இதன் மூலம் அதிகரித்துள்ளது.

ஆனால் இதை மறுக்கிறார் சீன பாதுகாப்புத் துறை நிபுணர் ஒருவர். இதுகுறித்து சீனாவின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக நிபுணர் லி டகுவாங் கூறுகையில், இந்த செய்திகள் வெறும் யூகச் செய்திகளே. எப்22 விமானத்தைப் பொறுத்தவரை அது ஒரு ஆக்கிரமிப்பு போர் விமானம். உலகத்தை தனது கையில் வைத்துக் கொள்ள நினைக்கும் ஒரு சக்தியின் கையில் இருக்கும் அபாயகரமான ஆயுதம்.

ஆக்கிரமிப்பு மனோபாவத்தில் வளர்ந்தது அமெரிக்காவின் ஆயுத பலம். ஆனால் சீனாவின் ராணுவ வளர்ச்சி என்பது இயற்கையானது, சுய பாதுகாப்பை மட்டுமே கருத்தில் கொண்டது. எனவே எங்களுக்கு மிகப் பெரிய அளவிலான போர் விமானங்கள் தேவை இல்லை என்கிறார் அவர்.

இவர் இப்படிச் சொன்னாலும் கூட ஸ்டெல்த் போர் விமானத் தயாரிப்பில் சீனா படு மும்முரமாக இருப்பது உண்மைதான் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. பல சீன இணையதளங்களில் ஜே20 போர் விமானம் ரன்வேயில் செல்வது போன்றும், அதன் முன்பக்கத்தில் பாராசூட்கள் விரிவது போன்றும் உள்ள செல்போன் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

சீனாவின் இந்த மாயாவி விமானத்தால் அமெரிக்கா பயப்படுகிறதோ இல்லையோ நிச்சயம் இந்தியா கவனமுடன் இருந்தாக வேண்டும் என்பதில் சந்தேகமில்லை.

5.1.11

ஈரானின் அணுசக்தி நிலையங்களை பார்வையிட வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு அழைப்பு

தெஹ்ரான்,ஜன.5:ஈரானின் அணுசக்தி நிலையங்களை பார்வையிட வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு அந்நாடு அழைப்பு விடுத்துள்ளது.

தங்களின் அணுசக்தித் திட்டங்களைக் குறித்து உலக வல்லரசுகளுடன் பேச்சுவார்த்தைகளுக்கு முன்னோடியாக இந்நடவடிக்கையை ஈரான் மேற்கொண்டுள்ளது.

ரஷ்யா, சீனா, ஐரோப்பிய நாடுகளில் சில, அணிசேரா நாடுகள் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்குத்தான் ஈரான் அழைப்பு விடுத்துள்ளது.

அமெரிக்காவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டதா? என்பதுக் குறித்து தெரியவில்லை. ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ராமின் மெஹ்மான் பரஸ்த் இதனை பத்திரிகையாளர்களுக்கு தெரிவித்தார்.

இம்மாதம் துருக்கியின் தலைநகரான இஸ்தான்புல்லில் ஈரான் பிரதிநிதிகளுக்கும் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்களுடன் ஜெர்மனியின் பிரதிநிதிகளுடனும் நடைபெறவிருக்கும் பேச்சுவார்த்தையின் முன்னோடியாக இவ்வழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் ஜெனீவாவிலும் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறவுள்ளது. ஏற்கனவே ஈரானின் அணுசக்தி குறித்து சர்வதேச அணுசக்தி நிலையம் பரிசோதனை நடத்தியிருந்தது. ஆனால், இம்முறை தூதரக ரீதியிலான வருகைதான் எனவும், பரிசோதனை அல்ல எனவும் பி.பி.சியின் ஈரான் செய்தியாளர் ஜெயிம்ஸ் ரினோல்ட் தெரிவிக்கிறார்.

அணுசக்தித் திட்டங்களை நிறுத்தவேண்டுமெனக் கோரி ஈரானின் மீது ஐ.நா நான்கு முறை தடை ஏற்படுத்தியிருந்தது. புஷ்ஹர், நதான்ஸ் ஆகிய இடங்கலிலுள்ள அணுசக்தி நிலையங்களை வெளிநாட்டு பிரதிநிதிக்குழு பார்வையிடும்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

4.1.11

இங்கிலாந்தில் இஸ்லாமைத் தழுவுபவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு: ஆண்டிற்கு 5000 பேர் மாறுகிறார்கள்

லண்டன்: கடந்த 10 ஆண்டுகளில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஏராளமானோர் இஸ்லாம் மதத்தை தழுவியுள்ளனர். ஆண்டுக்கு 5000 பேர் வீதம் இஸ்லாமு மாறி வருகின்றனராம்.

இங்கிலாந்தில் 14 ஆயிரம் முதல் 25,000 பேர் வரை இஸ்லாத்திற்கு வந்துள்ளனர் என்று முந்தைய கணக்கெடுப்பில் தெரிய வந்தது. ஆனால் பெய்த் மேட்டர்ஸ் நடத்திய ஆய்வு ஒவ்வொரு ஆண்டும் சுமார் 5 ஆயிரம் பேர் இஸ்லாம் மதத்தில் சேர்வதால் மதம் மாறியவர்களின் எண்ணிக்கை 1 லட்சம் இருக்கும் என்று கூறுகிறது.

செப்டம்பர் 11 மற்றும் லண்டனில் ஜூலை 7ல் நடந்தத தாக்குதல்களால் இங்கிலாந்தில் இஸ்லாமோபோபியா பரவியது. எனினும் இதனால் இஸ்லாமிற்கு வருபவர்களின் எண்ணிக்கை குறையவில்லை

கர்கரே தன்னுடன் பேசியதற்கான ஆதாரத்தை வெளியிட்டார் திக்விஜய் சிங்


புதுடெல்லி,ஜன.5:மும்பைத் தாக்குதலின்போது மர்மமான முறையில் கொல்லப்பட்ட மஹாராஷ்ட்ரா தீவிரவாத எதிர்ப்புப் படைத் தலைவர் ஹேமந்த் கர்காரே தான் கொல்லப்படுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு தீவிர ஹிந்துத்துவாக்களிடமிருந்து தனது உயிருக்கு மிரட்டல் விடப்பட்டுள்ளதாக தொலைபேசியில் தன்னிடம் தெரிவித்தார் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய்சிங் தகவலை வெளியிட்டிருந்தார்.

இதுத் தொடர்பான ஆதாரங்களை நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் வெளியிட்டார் அவர்.

கடந்த 2008 ஆம் ஆண்டு நவம்பர் மாலை 5.44 மணிக்கு மும்பையில் தீவிரவாத எதிர்ப்புப் படையின் தலைமையகமத்திலிருந்து 022308733 என்ற தொலைபேசி எண்ணிலிருந்து தனது மொபைல் எண்ணான 09425015451க்கு கர்காரே அழைத்ததன் ஆவணங்களை திக்விஜய் வெளியிட்டுள்ளார். அதே நாளில் மாலை 8 மணிக்கு மும்பையில் தாக்குதல் நடைபெறுகிறது. சில மணிநேரங்களில் கர்காரே கொல்லப்படுகிறார்.

நான் பொய்க் கூறினேன் என செய்தி வெளியிட்ட ஊடகங்கள் மன்னிப்புக் கோரவேண்டும் எனக் கூறிய திக்விஜய்சிங், கர்காரேயும், நானும் தொலைபேசியில் உரையாடியதற்கு ஆதாரமில்லை எனத் தெரிவித்த மஹாராஷ்ட்ரா மாநில உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீலும் மன்னிப்புக் கோரவேண்டுமென அவருக்கு கடிதம் எழுதியுள்ளதாக தெரிவித்தார்.

தொலைபேசி பதிவின் படி 6.21 நிமிடங்கள் இருவரும் உரையாடியுள்ளனர். மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் ஹிந்துத்துவவாதிகளின் பங்கினை வெளிப்படுத்தியதற்காக தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகவும், ஹிந்துத்துவ அமைப்புகளின் எதிர்ப்பை எதிர்கொண்டுதான் தான் இவ்வழக்கினைக் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளதாகவும் கர்காரே தன்னிடம் தொலைபேசியில் தெரிவித்ததாக திக்விஜய்சிங் தெரிவித்தார்.

உரையாடல்களின் ஆவணங்களை ஒரு வருடத்திற்கு மேலாக பாதுகாப்பதில்லை என பி.எஸ்.என்.எல் அதிகாரிகள் தெரிவித்ததாக திக்விஜய் சிங் கூறியிருந்தார்.

தனக்கு விடுக்கப்பட்ட மிரட்டலால் தான் நிம்மதி இழந்திருப்பதாகவும், தொலைபேசியில் மிரட்டல் விடுத்தவரை அடையாளங் காண முயற்சிப்பதாகவும் கர்காரே தெரிவித்ததை திக்விஜய்சிங் வெளியிட்டார்.

சிவசேனாவின் அதிகாரப்பூர்வ ஏடான சாம்னாவில் தனக்கெதிராக வெளியிடப்பட்ட தலையங்கம் வேதனை ஏற்படுத்தியது என கர்காரே தெரிவித்துள்ளார்.

துபாயில் கர்காரேயின் மகன் தவறான வழியில் பணம் சம்பாதிப்பதாக சாம்னாவில் எழுதப்பட்டிருந்தது. ஆனால், உண்மையில் கர்காரேயின் மகன் துபாயில் ஒரு பள்ளிக்கூடத்தில் படித்து வருகிறான்.

புனே பேக்கரி குண்டுவெடிப்பு மற்றும் வாரணாசி குண்டு வெடிப்புகளைத் தவிர இந்தியாவில் குண்டுவெடிப்புகள் குறைந்துள்ளதாக திக்விஜய்சிங் பத்திரிகையாளர் சந்திப்பில் சுட்டிக்காட்டினார்.

"இந்தியாவில் தீவிரவாதத் தாக்குதல்களுக்கு பின்னணியில் ஒரு தனிக்குழு செயல்பட்டு வருகிறது. சபரி கும்பமேளாவில் வைத்துதான் மலேகான் குண்டு வெடிப்பிற்கு சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இது மலேகான் குண்டுவெடிப்பு வழக்கு குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

போலீஸ் காவலில் உள்ள சுவாமி அஸிமானந்தாவை விசாரித்தால் எல்லா உண்மைகளும் வெளியாகும். தீவிரவாதத் தாக்குதல்களின் பெயரால் இவர்களை கைதுச் செய்யும்பொழுது பா.ஜ.கவுக்கு ஏன் வேதனையாக இருக்கிறது? ஏன் அவர்களுக்காக இவர்கள் களமிறங்குகிறார்கள்? இந்திரேஷ் குமாரின் நேராக விரல் சுட்டிக் காட்டப்படும் பொழுது ஏன் இவர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள்?இந்தியாவில் நடந்த அனைத்து குண்டு வெடிப்புகளையும் என்.ஐ.ஏ விசாரிக்கவேண்டும்.

சுனில் ஜோஷியின் கொலை உட்பட தீவிரவாத தாக்குதல் வழக்குகளில் மத்தியபிரதேச அரசு உண்மைகளை மறைத்துவிட்டது. சுனில் ஜோஷியை ரகசியம் வெளியே கசியாமலிருக்க ஆர்.எஸ்.எஸ்தான் கொலைச் செய்துள்ளது. இவ்வகையில் வேறு சிலரும் அச்சுறுத்தப்படுகின்றனர்." என திக்விஜய்சிங் தெரிவித்தார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளித

இந்​தி​யா​வில் 100 தீவி​ர​வா​த இயக்கங்களுக்குத் தடை

டெல்லி: சர்வதேச அளவில் செயல்பட்டு வரும் 100க்கு மேற்பட்ட தீவிரவாத இயக்கங்களுக்கு, மத்திய அரசு தடை விதித்து உள்ளது.

இதில் விடு​த​லைப் புலி​கள் அமைப்பு ​(எல்​டி​டிஈ)​,​​ இஸ்லாமிய மாணவர் இயக்கம் (சிமி),

தனி காலிஸ்​தான் மாநி​லம் கோரும் பப்​பர் கல்சா இன்​டர்​நே​ஷ​னல் ​(பிகேஐ)​,​​ காலிஸ்​தான் கமாண்டோ படை ​(கேசி​எப்)​,​​ சர்​வ​தேச சீக்​கிய இளை​ஞர்​கள் சங்​கம் ​(ஐஎஸ்​ஒய்​எப்)​,

காஷ்மீர் தீவிரவாத இயக்கங்களான லஷ்​கர் இ-​தொய்பா,​​ ஜெய்ஷ்-​இ-​முக​மது,​​ தெஹ்​ரிக்-​இ-​பர்​கான்,​​ ஜமியத்-​உல்-​முஜா​கி​தீன்,​​ அல்-​காய்தா,​​ ஹர்​கத்-​உல்-​முஜா​கி​தீன்,​​ ஹர்​கத்-​உல்-​அன்​சர்,​​ஹர்​கத்-​உல்-​ஜிகாத்-​இ-​இஸ்​லாமி,​​ ஹிஸ்​புல் முஜா​கி​தீன்,​​ அல்-​உமர்-​முஜா​கி​தீன், ஜம்மு-​காஷ்​மீர் இஸ்​லா​மிய முன்​னணி, அஸ்ஸாம் தீவிரவாத அமைப்புகளான​​ உல்பா,​​ என்​டி​எப்பி,​​ தீந்தர் அஞ்சுமன், இந்திய கம்யூனிஸ்டு (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் மக்கள் போர்ப்படை), மாவோயிஸ்டுகள் உள்​ளிட்​ட​வை இடம்​ பெற்​றுள்​ளன.​

தீவி​ர​வாத நட​வ​டிக்​கை​யில் ஈடு​ப​டு​வோ​ருக்கு எதி​ராக கடும் நட​வ​டிக்கை எடுக்​கும் விதத்​தில் சட்​ட​வி​ரோத செயல்​களை தடுக்​கும் சட்​டத்தை மத்​திய அரசு சமீ​பத்​தில் திருத்தி அமைத்​தது.​ இந்த சட்​டத்​தின் கீழ் இப்போது இந்​தக் குழுக்​க​ளுக்கு தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது

பாகிஸ்தானில் பயங்கரம்-பஞ்சாப் மாகாண ஆளுநர் சுட்டுக் கொலை

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில், பஞ்சாப் மாகாண ஆளுநர் சல்மான் சயீர், மாலிக் மும்தாஜ் ஹூசேன் காத்ரி என்ற தனது மெய்க்காப்பாளரால் இன்று சுட்டுக் கொல்லப்பட்டார். 

பெனாசிர் பூட்டோ 2007ம் ஆண்டு கொல்லப்பட்ட சம்பவத்திற்குப் பிறகு பாகிஸ்தானில் நடந்துள்ள மிகப் பரபரப்பான அரசியல்படுகொலையாக இது வர்ணிக்கப்படுகிறது.

46 வயதேயாகும் சல்மான், பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சியைச் சேர்ந்த செல்வாக்கு மிகுந்த தலைவர்களில் ஒருவர் ஆவார். அதிபர் சர்தாரிக்கு மிகவும் நெருக்கமானவர்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறை தரப்பி்ல கூறுகையில், இஸ்லாமாபாத்தின் முக்கிய வணிகப் பகுதியான கோசர் மார்க்கெட்டை சல்மான் வந்தடைந்தவுடன் அவரது மெய்க்காவல் படையில் இருந்த ஒருவர் சரமாரியாக சுட்டுத் தள்ளி விட்டார். அதில், சம்பவ இடத்திலேயே ஆளுநர் உயிரிழந்தார். இச்சம்பவத்தில் 5 பேர் காயமடைந்தனர் என்றார்
.

கற்பழித்த பாரதீய ஜனதா எம்.எல்.ஏவைக் குத்திக் கொன்ற ஆசிரியை


பீகார் மாநிலம் பூர்னியா தொகுதி பாரதீய ஜனதா எம்.எல்.ஏ. ராஜ் கிஷோர் கேசரி (வயது51). இவர் பூர்னியாவில் உள்ள தனது அலுவலகத்தில் இன்று காலை பொதுமக்கள் குறைகேட்டார். ஏராளமானோர் கியூவில் நின்று மனு கொடுத்தனர்.
 
அவர்களிடம் ராஜ் கிஷோர் மனுக்களை பெற்றுக்கொண்டு குறைகளை கேட்டறிந்தார். அப்போது ரூபம் பதக் என்ற பெண்ணும் பார்வையாளர் போல் நின்றிருந்தார். அவர் எம்.எல்.ஏ. அருகில் வந்ததும் திடீர் என்று தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து எம்.எல்.ஏ.வின் விலா பகுதியில் குத்தினார். இதில் எம்.எல்.ஏ. ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார்.
 
உடனே அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் இறந்தார்.   அங்கு கூடியிருந்த எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் அந்தப் பெண்ணை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். பின்னர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.
 
ஆதரவாளர்கள் தாக்கியதில் அந்தப் பெண்ணும் படுகாயம் அடைந்தார். அவர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது.   எம்.எல்.ஏ.வை குத்திக்கொன்ற ரூபம் பதக் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.
 
அவரை எம்.எல்.ஏ. தனது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து 3 ஆண்டுகளாக மிரட்டி கற்பழித்து வந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக எம்.எல்.ஏ. ராஜ்கிஷோர் கேசரி மீது ரூபம்பதக் 6 மாதத்துக்கு முன் போலீசில் புகார் செய்தார். ஆனால் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்யாமல் தாமதம் செய்து வந்தனர்.
 
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தன் மீது கற்பழிப்பு புகார் கூறப்படுவதாக எம்.எல்.ஏ. கூறி வந்தார். இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன் பூர்னியாவில் நடந்த நிகழ்ச்சியில் முதல்- மந்திரி நிதிஷ்குமார் கலந்து கொண்டார்.
 
அப்போது எம்.எல்.ஏ. மீதான கற்பழிப்பு புகார் குறித்து நிதிஷ்குமார் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த நிலையில் 3 நாட்களுக்கு முன்பு எம்.எல்.ஏ. மீது முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) பதிவு செய்யப்பட்டது. ஆனால் அரசியல் பின்னணி காரணமாக அவர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதையடுத்து பாதிக்கப்பட்ட ஆசிரியை பார்வையாளர் போல் வந்து எம்.எல்.ஏ.வை தீர்த்து கட்டிவிட்டார்.
 
ஏற்கனவே ராஜ்கிஷோர் கேசரி மீது 2008-ல் ஒரு பெண்ணை கற்பழித்ததாக புகார் கூறப்பட்டது. ஆனால் புகாரில் உண்மை இல்லை என்று போலீசார் வழக்கை கைவிட்டனர்.  கொலை செய்யப்பட்ட ராஜ்கிஷோர் கேசரி பூர்னியா தொகுதியில் இருந்து பாரதீய ஜனதா சார்பில் 4 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்து எடுக்கப்பட்டார்.
 
எம்.எல்.ஏ. கொலை செய்யப்பட்ட தகவல் கேட்டதும் முதல்- மந்திரி நிதிஷ் குமார் அதிர்ச்சி அடைந்தார். எம்.எல்.ஏ. மறைவுக்கு இரங்கல் தெரிவித்ததுடன் அவரது ஆதரவாளர்கள் அமைதி காக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இந்த கொலையை தொடர்ந்து மாநிலம் முழுவதும் எம்.எல்.ஏ.க்களுக்கு பாதுகாப்பை பலப்படுத்த முதல்- மந்திரி நிதிஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
 
எம்.எல்.ஏ.வின் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக துணை முதல்- மந்திரி சுஷில்குமார் மோடி பூர்னியா நகருக்கு விரைந்துள்ளார். எம்.எல்.ஏ. கொலை குறித்து முழு அளவிலான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மாநில பாரதீய ஜனதா தலைவர் சி.பி. தாகூர் கூறியுள்ளார்.

இலங்கையில் புதிய தடை உத்தரவு வருகிறது

இலங்கையில் மினி ஸ்கர்ட் (குட்டைப் பாவாடை) அணிவதற்கு தடைவிதிப்பது குறித்து தீவிர ஆலோசனை நடந்து வருகிறது. 

பாரம்பரியமான நாட்டில் பொது இடங்களில் எத்தகைய ஆடைகள் அணியலாம் என்பது குறித்து ஒரு குழு அமைத்து அறிக்கை வெளியிடுமாறு ஏராளமானோர் வலியுறுத்தி வந்தனர்.

இதையடுத்து அந்நாட்டின் கலாச்சாரத்துறை அமைச்சகம் மினி ஸ்கர்ட் அணிய தடை விதிக்க வேண்டும் என்ற மக்களின் புகார்களை பரிசீலனை செய்தது. இந்த பரிசீலனையை ஒரு கமிட்டிக்கு அனுப்பி பொது இடங்களில் எப்படிபட்ட ஆடைகள் அணியலாம் என்று ஒரு பட்டியல் தயாரித்து தருமாறு கேட்டுக் கொண்டதாக அமைச்சக அதிகாரி ஒருவர் பிடிஐக்கு தெரிவித்தார்.

பெண்கள் ஆடைகள் குறித்து அரசு இன்னும் எந்த இறுதி முடிவும் எடுக்கவில்லை. ஆனால் லக்பிமா என்னும் செய்தித்தாள் மினி ஸ்கர்டுக்கு தடைவிதிப்பது குறித்து அரசு எண்ணுவதாகத் தெரிவித்துள்ளது என்று அமைச்சக செயலாளர் நிமல் ரூபாசிங்கே கூறினார்.

இது குறி்த்து அமைச்சர் டி.பி. ஏகநாயகே கூறியதாக லக்பிமா வெளியிட்டுள்ள செய்தி வருமாறு,

மதம் மற்றும் சலாச்சார பிரநிதிகளும், குழுக்களும் பெண்கள் மினி ஸ்கர்ட் அணிவது நமது கலாச்சாரத்தை சீரழித்துவிடும் என்று வருத்தம் தெரிவித்து எனக்கு எழுதியுள்ளனர்.

இந்நிலையில் சுற்றுலாப் பயணிகளின் வருகையால் நிலைமை மேலும் மோசம் அடைவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இலங்கையில் பெண்கள் ஆபாசமாக போஸ் கொடுத்திருக்கும் விளம்பரப் பலகைகளை அகற்ற ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்க பாப் பாடகர் அகானின் இசை வெளியீடு ஒன்றில் பிகினி அணிந்த பெண்கள் புத்தர் சிலையைச் சுற்றி நடனமாடுவது போல் படமாக்கப்பட்டதற்கு இலங்கை கண்டனம் தெரிவித்துள்ளது. இதனால் அவருக்கு இலங்கையில் கச்சேரி நடத்த விசா மறுக்கப்பட்டுள்ளது.

200 உள்நாட்டு ஆபாச இணையதளங்களை தடை செய்ய இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டு மக்கள் தெரிவித்தனர்.


3.1.11

மலையாளிகளால் அரபுகளுக்கு ஆபத்து : துபாய் காவல் துறை தலைவர் அதிரடி பேட்டி


துபாய் : வளைகுடாவில் நாள் தோறும் வேலை வாய்ப்புக்காக வரும் வெளிநாட்டவர்களால் வளைகுடாவின் மண்ணின் மைந்தர்களான அரபு மக்கள் ஒதுக்கப்படும் அபாயம் உள்ளதாக சொல்லப்படுவதை தாம் ஆதரிப்பதாக துபாய் காவல் துறை தலைவர் தெரிவித்தார்.


வெளிநாட்டவர்களை கட்டுபடுத்த சட்டம் கொண்டு வரப்படவில்லையெனில் அரபு மக்கள் தங்கள் மண்ணில் சிறுபான்மையினராக வாழும் நிலை ஏற்படுவதை தவிர்க்க முடியாது என்று துபை காவல்துறை தலைவர் தஹி கல்பான் கத்தார் தொலைக்கட்சியில் பிரபலமான லகும் அல் கரார் (உங்கள் முடிவு என்ன?) எனும் நிகழ்ச்சியில் மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது கூறினார்.
“அதிகரித்து வரும் வெளிநாட்டவர்களால் வளைகுடாவின் அடையாளத்திற்கும் கலாச்சாரத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்றும் அப்படி ஏற்படாமல் தடுக்க அரசாங்கங்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்” எனும் தலைப்பில் தன் கருத்துகளை பதிவு செய்யுமாறு கேட்டு கொண்ட போது வளைகுடாவில் உள்ள அரசாங்கங்கள் வெளிநாட்டவர்களை கட்டுப்படுத்த துணிச்சலான முடிவுகளை மேற்கொள்ளாவிடில் அமெரிக்காவில் சிவப்பிந்தியர்கள் வெள்ளையர்களால் ஒடுக்கப்பட்டதை போல் அரபுகள் தங்கள் மண்ணில் ஒடுக்கப்பட்டு அடையாளம் தெரியாமல் போகும் அபாயம் உள்ளது என்று கூறினார்.
தஹி கல்ஹான் மேலும் கூறும் போது குறிப்பாக அரபுகள் மலபாரிகளையும் (மலையாளிகளை குறிக்க அரபுலகில் பயன்படுத்தப்படும் வார்த்தை) ஈரானிகளையும் உற்று நோக்க வேண்டும். அவர்கள் அரபு நாடுகளில் வந்து சிறு கடைகளை திறந்து காலப்போக்கில் அரபுகளை விட வசதியான மில்லியனர்களாக மாறிவிடுகிறார்கள் என்று சொன்னார். மேலும் தஹி கல்ஹான் கூறும் போது அடிப்படையில் அரபுகளுக்கு சொந்தமான இக்கடைகளை அரபுகளே நடத்தலாமே என்று கேள்வி எழுப்பியவர் ஆனால் அரபுகள் வேலை செய்ய விரும்பவில்லை என்றும் கூறினார்.
வளைகுடாவிற்கு வேலைக்கு வரும் ஒரு இந்திய டிரைவர் சிறிது காலத்திலேயே தன் சொந்தக்காரர் ஒருவரை வேலை இல்லையென்றாலும் வளைகுடாவிற்கு அழைத்து கொள்கிறார். பின் அவருக்காக எப்படியோ அலைந்து வேலை வாங்கி கொடுத்து விடுகிறார். அவர் இன்னொரு ஆளுக்கு என்று வரையறையின்றி தொடர்ந்து கொண்டே இருக்கிறது என்று கூறிய தஹி கல்ஹான் அமைச்சகங்கள் ஆட்சியாளர்களுக்கு இவ்வபாயங்களை எடுத்து கூறி வெளிநாட்டவர்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். இது போன்ற கருத்துக்கள் புதியது அல்ல என்றாலும் உயர் அரசு பொறுப்பில் இருப்பவர் இப்படி பேசியுள்ளது வளைகுடாவில் வாழும் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்.எஸ்.எஸ்ஸின் நிகழ்ச்சியில் கம்யூனிஸ்ட் அமைச்சர்

பெங்களூர்,ஜன.3:கேரள மாநிலத்தில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக பணியாற்றிவரும் பி.கே.ஸ்ரீமதி ஆர்.எஸ்.எஸ்ஸின் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்றது சர்ச்சையை கிளப்பியுள்ளது.ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் விஞ்ஞான் பாரதி கடந்த டிசம்பர் மாதம் பெங்களூரில் நடத்திய நான்காவது ஆயுர்வேத மாநாட்டின் ஒருபகுதியாக நடந்த கண்காட்சியை கர்நாடக மாநில பா.ஜ.க அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் எஸ்.எ.ராம்தாஸுடன் இணைந்து கம்யூனிஸ்ட் கட்சி அமைச்சரான ஸ்ரீமதி திறந்துவைத்தார்.

கர்நாடகா மாநில பா.ஜ.க முதல்வர் எடியூரப்பா மற்றும் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஆகியோரும் கம்யூனிஸ்ட் அமைச்சருடன் மேடையில் வீற்றிருந்தனர்.

இந்தியாவில் விஞ்ஞான, தொழில்நுட்ப வளர்ச்சி என்ற பெயரில் பயங்கரவாத இயக்கமான ஆர்.எஸ்.எஸ்ஸின் விஞ்ஞான் பாரதி அமைப்பு ஆரோக்கிய எக்ஸ்போ என்ற நிகழ்ச்சியை நடத்தியது.

கடந்த டிசம்பர் 9-ஆம் தேதி இந்நிகழ்ச்சி நடந்துள்ளது. ஆனால், இச்செய்தியை வெளியிட்டால் சர்ச்சையாகும் எனக்கருதி கேரள மாநிலங்கள் மூடி மறைத்துள்ளன.

ஏகற்கனவே ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கத்தின் பிராந்திய சங்கிக் நிகழ்ச்சியில் பங்கேற்ற கொல்லம் மேயரை கேரள மாநில கம்யூனிஸ்ட் கட்சி வெளியேற்றியிருந்தது.

இந்தியாவில் நடந்தேறிய பல்வேறு குண்டுவெடிப்புகள் மற்றும் நாசவேலைகளில் ஆர்.எஸ்.எஸ்ஸின் தேசிய தலைமையிலிருந்து அதன் தொண்டர்கள் வரை ஈடுபட்டதை புலனாய்வு ஏஜன்சிகள் கண்டறிந்துவரும் வேளையில் அவ்வமைப்பின் சார்பாக நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் ஒரு கம்யூனிஸ்ட் அமைச்சர் பங்கேற்றது அக்கட்சிக்குள் சர்ச்சையை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத அமைப்பின் மாணவர் பிரிவான ஏ.பி.வி.பியின் அகில இந்திய நிகழ்ச்சி பெங்களூரில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆஸ்கர் விருதுப் பெற்றவரும், இடதுசாரி சிந்தனையுடையவருமான ரசூல் பூக்குட்டி பங்கேற்றதும் சர்ச்சையை கிளப்பியிருந்தது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

இந்தியா ஃபெடர்னிடி ஃபாரம் நடத்திய "நீதியைத் தேடும் பாப்ரி மஸ்ஜித்" கலந்தாய்வு அமர்வு

ஜுபைல்(சவூதிஅரேபியா),ஜன.3: வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் நலனுக்காக சவூதி அரேபியாவில் செயல்பட்டுவரும் அமைப்பு இந்தியா ஃபெடர்னிடி ஃபாரம்(IIF). இவ்வமைப்பின் தமிழ் பிரிவு சார்பாக ஜுபைல் நகரில் "நீதியைத்தேடும் பாப்ரி மஸ்ஜித்" என்ற தலைப்பில் கலந்தாய்வு அமர்வு நடந்தேறியது.

ஜுபைல் இண்டர்நேசனல் ரெஸ்ட்டாரெண்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு ஜுபைல் ஏரியா தலைவர் அஹ்மத் சிராஜ் தலைமை வகித்தார். ஹஸன் முஹம்மது IIF ஆற்றிவரும் பணிகளைக் குறித்து உரை நிகழ்த்தினார். பொறியாளர் நாகூர்மீரான் சிறப்புரையாற்றினார்.

அவர் தனது உரையில் குறிப்பிட்டதாவது: "நான்கு நூற்றாண்டுகளாக இந்திய முஸ்லிம்கள் தொழுகை நடத்திய பாப்ரி மஸ்ஜித் முஸ்லிம்களுக்கே சொந்தமானதாகும். இந்தியாவில் பெரும்பாலான அரசியல் கட்சிகளும், ஊடகங்களும், நீதிபீடங்களும் சங்க்பரிவார்களுக்கு அனுகூலமான நிலைப்பாட்டை மேற்கொண்டுள்ளனர்.

பாப்ரி மஸ்ஜித் ஒரு இந்து-முஸ்லிம் பிரச்சனையல்ல. இந்தியாவின் மானப் பிரச்சனையாகும். பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட அதே இடத்தில் மீண்டும் கட்டப்பட்டால் மட்டுமே இந்நாட்டை ஆள்பவர்கள் தேசத்தோடும், முஸ்லிம்களோடும் நீதியோடு நடந்தார்கள் என்று கூறவியலும். அதற்காக தேசத்தின் அனைத்து ஜனநாயக அமைப்புகளும், முஸ்லிம்களும் களமிறங்க வேண்டும்." இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியின் இறுதியாக நன்றியுரையை பிலால் முஹம்மது தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் சவூதி வாழ் தமிழ் மக்கள் நூற்றுக்கும் அதிகமானோர் கலந்துக்கொண்டனர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

ஆஸி. கிரிக்கெட் அணியில் முதல் முஸ்லிம் வீரர் உஸ்மான் காஜா

சிட்னி,ஜன.3:ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு வீரர் இடம் பிடித்துள்ளார். இவர் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்தவர். இஸ்லாமாபாத்தில் பிறந்தவர்.24 வயதேயாகும் அந்த இளம் வீரரின் பெயர் உஸ்மான் காஜா. இவர் இஸ்லாமாபாத்தில் பிறந்தவர். இவரது குடும்பம் ஆஸ்திரேலியாவில் செட்டிலாகி அந்த நாட்டு குடியுரிமைப் பெற்றதாகும்.

வளரும் கிரிக்கெட் வீரராக இருந்து வந்த காஜா ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடிக்கும் வேகத்துடன் தீவிரமாக கிரிக்கெட் ஆடி வந்தார். தற்போது அவருக்கு ஆஸ்திரேலிய அணியில் இடம் கிடைத்துள்ளது, அதுவும் டெஸ்ட் அணியில். அதை விட முக்கியமாக இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் பெருமையைப் பெற்றுள்ளார் காஜா.

இரு நாடுகளுக்கும் இடையிலான 5வது டெஸ்ட்போட்டி இன்று சிட்னியில் தொடங்கியது. இதில் காஜாவும் இடம் பெற்றுள்ளார்.

இங்கிலாந்து பந்து வீச்சு குறித்து சற்றும் பயமில்லாமல் மிகவும் தைரியமாக ஆடி வருகிறார் காஜா. தேநீர் இடைவேளையின் போது அவர் ஆட்டமிழக்காமல் 24 ரன்கள் எடுத்திருந்தார்

இணையத் தமிழை சமஸ்கிருதமயமாக்க முயற்சி

ஆரிய நரிகள் மீண்டும் வாலாட்டம் கணினித்துறை, இணையம் இவற்றில் இந்திய மொழிகளிலேயே அதிக அளவில் வளர்ச்சி கண்டு வருவது தமிழ்தான். அதிலும் ஒருங்குறி எனப்படும் யூனிகோட் முறையில் தமிழ் எழுத்துகள் வந்தபிறகு எண்ணற்ற இணையதளங்கள் பழந்தமிழ் இலக்கியங்களை யும், புதிய படைப்புகளையும் கொண்டும் அறிவியல் கருத்துகளை எளிய தமிழில் தந்து வருகின்றன. இதை எவ்விதத் தடங்கலுமின்றி, உலகின் எந்த மூலையிலிருந்தும் எழுத்துரு (குடிவே) தடையின்றி படிக்கலாம்; எழுதலாம். கூகிள், விண்டோஸ் உள்ளிட்ட அனைத்து நிறுவனங் களும் யூனிகோட் தமிழை அங்கீகரித்து தங்களது மென்பொருள்களிலும் இவற்றை பயன்படுத்திவருகின்றனர். ஏற்கெனவே தமிழுக்கென உலக அளவி லான யூனிகோட் ஒதுக்கீட்டில் 128 இடங்கள் மட்டுமே கிடைத்திருந்தன. இதை அதிகப் படுத்தி தமிழ் எழுத்துகள் அனைத்துக்கும் இடம் கிடைத்தால் தான் எளிமையாகவும், வேகமாகவும் பணிகள் நடைபெறும் . இதற்காக யூனிகோட் சேர்த்தியத்திடம் (Unicode Consortium) கணினித் தமிழ் ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஏற்கெனவே தமிழ் எழுத்துகளுடன், வழக்கத்தில் இருக்கும் கிரந்த எழுத்துகளான ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ ஆகியன சேர்க்கப்பட்டுள்ளன. தமிழ் அறிஞர்களின் வேண்டுகோளுக்கேற்ப தமிழக அரசும் யூனிகோடு முறையை அங்கிகரித்துள்ளது. இந்நிலையில் தமிழ் எழுத்துகளுடன் புதிதாக சில கிரந்த எழுத்துகளையும் சேர்க்கும் முயற்சியை தமிழ் அறிஞர்களுக்கும், தமிழக அரசுக்கும் தெரியாமல் பார்ப்பனக் கும்பல் மேற்கொண்டுள்ளது. இவர்கள் சேர்க்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள 26 கிரந்த எழுத்துகளை இதுவரை நாம் பார்த்திருக்க வாய்ப்பேயில்லை. தமிழுக்கு சற்றும் தொடர்-பில்லாத, தமிழ் எழுத்துகளுக்கும், தமிழ் எழுத்து முறைக்கும், இலக்கணத்திற்கும் எந்தத் தொடர்புமில்லாத சமஸ்கிருத (கிரந்த) எழுத்துகளைத் தமிழில் சேர்க்க வேண்டும் என்று கோரியிருப்பவர் யார் தெரியுமா? ஸ்ரீ ரமண சர்மா என்ற பச்சைப் பார்ப்பனர். அதற்கு அவர் எடுத்துக்காட்டியிருக்கும் ஆதாரம் எது தெரியுமா? காமகோடி கோஷாஸ்தனத்திலிருந்து சில வரிகள் மற்றும் டி.எஸ். நாராயண சாஸ்திரியின் போஜ சரிதம்'. இப்போது புரிந்திருக்குமே இந்தச் சூழ்ச்சி வலையின் சூத்திரதாரிகள் யாரென்று! சந்தேகமேயில்லாமல் சங்கரமடத்தின் கைகள் தான் இதன் பின்னால் ஒளிந்திருக்கின்றன. காமகோடி பீடத்தைச் சேர்ந்த ஆயுர்வேதக் கல்லூரியும், சமஸ்கிருதக் கல்லூரியும் ஸ்ரீரமண சர்மாவின் பின்னணியில் இருந்து கிரந்த எழுத் துகளை தமிழ் என்று இணைக்க முயற்சிக் கின்றன. தமிழ் மொழிக்குடும்பம் வேறு! ஆரிய சமஸ் கிருத மொழிக்குடும்பம் வேறு! இரண்டின் எழுத்துகளும், அதற்கான முறைகளும், ஒலிப்புகளும் வேறானவை. ஆனால் இப்போது எடுக்கப்பட்டிருக்கும் இந்த முயற்சி வெற்றி பெற்றால் இனி வரும் காலத்தில் தமிழுடன் இந்த 26 கிரந்த எழுத்துகளும் இணைந்தே இருக்கும். வளர்ந்துவரும் இணையத் தமிழ் தான் அடுத்துவரும் அத்தனை தலைமுறைக்கும் தமிழின் அடிப்படையாக இருக்கப்போகிறது.
"இது நீண்டகாலச் சதி. இந்த யூனிகோட் சேர்த்தியம் என்பது பன்னாட்டு நிறுவனம். அதன் சட்ட திட்டங்கள் ஓட்டை உடைசல் களைக் கொண்டன. யார் வேண்டுமானாலும் எந்த மொழியிலும் இன்னின்ன மாற்றங்கள் வேண்டும் என்று சொல்லி எழுதிக் கொடுக்கலாம். அதற்கு உள்ளேயும் தொடர்பிலேயும் சற்று வேண்டியவர்கள் இருந்தால் ஒரு மொழிக்கு என்ன கேடுகளை வேண்டுமானா லும் செய்யலாம். இதைப் பயன்படுத்தி ஆரிய நரிகள் சமஸ்கிருத எழுத்துகளை உள்நுழைக்கப் பார்க்கின்றனர். இதற்கு தமிழ்ப்பற்றாளர்களும், மிக முக்கியமாக தமிழக அரசும் கடுமையான கண்டனத்தையும், மறுப்பையும் உடனடியாகப் பதிவு செய்யவேண்டும். அக்டோபர் 25-ஆம் தேதி யூனிகோடு சேர்த்தியம் சர்மாவின் முன்வைப்பைப் பரிசீலனைக்கு எடுக்கிறது, கடந்த இரண்டுநாட்களில் உலகெங்கும் உள்ள தமிழர்கள் இது குறித்து யூனிகோடு நிறுவனத் திற்கு தொடர்ந்து எழுதி முடிவு எடுப்பதை சில நாட்கள் தள்ளிப் போடும்படி செய்துள்ளனர். அதற்குள்ளாக போர்க்கால வேகத்தோடு இதனைக் கவனத்தில் எடுத்து தமிழக அரசு செயல்பட வேண்டும்" என்கிறார் தமிழ் கணினி வல்லுநரும், இப்பிரச்சினையை உலகறியத் தந்துள்ளவருமான நாக.இளங்கோவன். இது குறித்து உத்தமம் (INFITT) அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், இப்பிரச்சினை குறித்து அறிந்து செயல்பட்டுவருபவருமான நா.கணேசன் அவர்களின் தொடர்பு கொண்ட-போது, "இச்சிக்கலை உத்தமம் சார்பில் எடுத்துவைத்து எங்களது பரிந்துரையையும் அனுப்பியுள்ளோம்" என்றார். தமிழ்க் கணினித்-துறையில் முக்கியமானவரும், கணித்தமிழ் சங்கத்தில் பங்காற்றுபவருமான மா.ஆண்டோ-பீட்டர் அவர்களிடம் கேட்டபோது, "இது கண்டிப்பாக கண்டனத்திற்குரியது." என்று கருத்து தெரிவித்தார். மேலும், சங்கரமடத்தின் இந்தச் சதிக்கு எதிராக தமிழ்க்கணினித் துறை இளைஞர்களும், தமிழார்வலர்களும் கடும் போராட்டங்களில் ஈடுபட எண்ணியிருப்பதாக வும் தகவல்கள் வெளிவந்த வண்ணமிருக்கின்றன. இப்படி தமிழ் அறிஞர்களின் கடும் எதிர்ப்புக்கிடையில் காஞ்சி காம'கேடி'களும், பார்ப்பனர்களும் தமிழைச் சிதைக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியிருப்பது கவனத்திற்குரியதாகும். இது குறித்து எச்சரிக்கையுடன் இருந்து தமிழைக் காக்க வேண்டியது மிக அவசரமாகும். தமிழை அழிப்பதில் ஆரியம் எவ்வளவு முனைப்பு காட்டுகிறது என்பதை தமிழர்கள் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது. இந்தப் பிரச்சினையை திராவிடர் கழகம் கவனத்துடன் நோக்கி வருகிறது. வடமொழித் திணிப்பிற்கெதிரான மொழிப்போராட்டத்தின் அடுத்த கட்டமாக அது அமையலாம்.
- ஜூனியர் சர்ச்லைட
நன்றி: உண்மை ஆன்லைன் .காம்