தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

4.1.11

பாகிஸ்தானில் பயங்கரம்-பஞ்சாப் மாகாண ஆளுநர் சுட்டுக் கொலை

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில், பஞ்சாப் மாகாண ஆளுநர் சல்மான் சயீர், மாலிக் மும்தாஜ் ஹூசேன் காத்ரி என்ற தனது மெய்க்காப்பாளரால் இன்று சுட்டுக் கொல்லப்பட்டார். 

பெனாசிர் பூட்டோ 2007ம் ஆண்டு கொல்லப்பட்ட சம்பவத்திற்குப் பிறகு பாகிஸ்தானில் நடந்துள்ள மிகப் பரபரப்பான அரசியல்படுகொலையாக இது வர்ணிக்கப்படுகிறது.

46 வயதேயாகும் சல்மான், பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சியைச் சேர்ந்த செல்வாக்கு மிகுந்த தலைவர்களில் ஒருவர் ஆவார். அதிபர் சர்தாரிக்கு மிகவும் நெருக்கமானவர்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறை தரப்பி்ல கூறுகையில், இஸ்லாமாபாத்தின் முக்கிய வணிகப் பகுதியான கோசர் மார்க்கெட்டை சல்மான் வந்தடைந்தவுடன் அவரது மெய்க்காவல் படையில் இருந்த ஒருவர் சரமாரியாக சுட்டுத் தள்ளி விட்டார். அதில், சம்பவ இடத்திலேயே ஆளுநர் உயிரிழந்தார். இச்சம்பவத்தில் 5 பேர் காயமடைந்தனர் என்றார்
.

0 கருத்துகள்: