தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

6.1.11

லால்செளக்கில் கொடியேற்றும் திட்டத்தை பாஜக ஒத்திவைக்க கோரிக்கை

புதுதில்லி, ஜன.6: குடியரசு தினத்தன்று ஸ்ரீநகரின் லால்செளக் பகுதியில் தேசியக் கொடியேற்றும் பாரதிய ஜனதா கட்சியின் திட்டத்துக்கு அதன் கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதாதளம் ஆட்சேபம் தெரிவித்துள்ளது. 
 லால்செளக்கில் தேசியக் கொடியேற்றும் திட்டத்தை பாஜக ஒத்திவைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன். இப்போது அங்கு அமைதியை நிலைநாட்டும் வகையிலான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமே தவிர அதை சீர்குலைக்கும் எதையும் செய்யக்கூடாது என ஐக்கிய ஜனதாதளத் தலைவர் சரத்யாதவ் தெரிவித்தார்
ஜனவரி 12-ம் தேதி பாஜகவின் இளைஞர் பிரிவினர் கொல்கத்தாவில் இருந்து ஸ்ரீநகருக்கு யாத்திரை மேற்கொள்வார்கள் என்றும், அதன் முடிவில் குடியரசு தினத்தன்று லால்செளக்கில் தேசியக் கொடியை ஏற்றிவைப்பார்கள் என்றும் பாஜக முன்னதாக அறிவித்திருந்தது

0 கருத்துகள்: