வீட்டில் புகுந்து நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற கொள்ளையர்களை ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டிய பெண்ணின் தீர சாகசம் சிதம்பரம் அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சிதம்பரம் அருகே உடையூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜலட்சுமி. நேற்று இரவு ராஜலட்சுமி தன் குடும்பத்தினருடன் வீட்டில் இருந்த நேரத்தில் இருவர் தீடீரென அவர் வீட்டினுள் புகுந்துள்ளனர். பின்னர், ராஜலட்சுமியின் கழுத்தில் கிடந்த நகைகளையும் வீட்டிலிருந்த ரூ. 10,000 ஐயும் கத்தி முனையில் மிரட்டி பறித்துக்கொண்டு ஓடியுள்ளனர்.
