அமெரிக்காவின் உள்ள பிரதான சீக்கியர்களின் கோ விலான குருதுவாரில் நேற்று நடைபெற்ற துப்பாக் கிச்சூடு சம்பவத்தில் 7 பேர் பலியாகியுள்ளனர். அ மெரிக்காவின் விஸ்கோன்சின் மாநிலத்தில் உள்ள து சீக்கியர்களின் குருதுவார் கோவில். நேற்று கா லை அங்கு துப்பாக்கியுடன் புகுந்த மர்மநபர் ஒருவர் அங்கிருந்த அனைவரையும் சராமாரியாக சுடத் தொ டங்கியுள்ளார். இதில் 6 பேர் பலியகியுள்ளனர். 20 பேர் காயமடைந்துள்ளனர். நீண்ட நேரத்திற்கு பிஒ றகு துப்பாக்கிச்சூடு நடத்தி
யவரும் காவற்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட் டுள்ளதாக மாறுபட்ட தகவல்கள் வெளிவந்துள்ளன.துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர் கோவிலுக்கு வந்த சிலரை பணயக்கைதிகளாகவும் சிறிதுநேரம் பிடித்து வைத்துள்ளான். இச்சம்பவத்துக்கு இந்திய தரப்பு தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது. சீக்கிய அமைப்புக்களும் இத்தாக்குதலை கண்டித்துள்ளன. கடந்த இரு வாரங்களுக்கு முன்னர், அமெரிக்க திரையரங்கில் நடந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 12 பேர் பலியான கோரச்சம்பவம் நடைபெற்றிருந்தது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக