தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

1.5.11

வெளிவாழ் இந்தியர்களுக்காக தலைமையகம் கட்டும்பணி துவக்கம்: அமைச்சர் வயலார் ரவி

 புதுடெல்லி, வெளிநாடு வாழ் இந்தியர்கள் நல அமைச்சகத்திற்கான தலைமை அலுவலகத்தின் கட்டுமானப் பணியை மத்திய வெளிநாடுவாழ் இந்தியர் நலத்துறை அமைச்சர் வயலார் ரவி நேற்று டெல்லியில் துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது,
இந்த தலைமை அலுவலகம் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு ஒரு இணைப்புப் பாலமாக இருக்கும். இந்த அலுவலகத்தின் கட்டுமானப் பணிகள் 2013-ம் ஆண்டு ஏப்ரல் மாத இறுதிக்குள் முடிவடையும். இதற்கு நிதி ஒரு பிரச்சனை இல்லை. இந்த அலுவலகம் வெளிவாழ் இந்தியர்களுக்கு பயனளிக்கும் வகையில் அனைத்து வசதிகள் கொண்டதாக இருக்கும். இதில் நூலகம், கருத்தரங்குக் கூடங்கள், விருந்தினர் விடுதி, நிரந்தர கண்காட்சிக் கூடம், விற்பனை மையங்கள் போன்றவை மிக நவீனமான முறையில் அமைக்கப்படும்.

இந்த கட்டடத்தைக் கட்டும்பணி தேசிய கட்டுமான நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த தலைமைக் கட்டிடம் கட்டப்படும் என்று கடந்த 2004-ம் ஆண்டே அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த தலைமையகம் சுமார் ரூ. 80 கோடி செலவில் கட்டப்படவிருக்கிறது. கடந்த ஜனவரி மாதம் பிரதமர் மன்மோகன் சிங் இதற்கான அடிக்கல்லை நாட்டினார். தற்போது கட்டுமானப் பணி துவக்கிவைக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இந்த தலைமையகம் வெளிநாடு வாழ் இந்தியர்களின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடியதாக இருக்கும் என்றார்.

0 கருத்துகள்: