2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைதாகி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மகள் கனிமொழியைப் பார்க்க திமுக தலைவர் கருணாநிதிஇன்று டெல்லி விரைகிறார்.
கனிமொழி கைது செய்யப்பட்டது முதல் அதிர்ச்சியில் இருக்கிறார் கருணாநிதி. இதுகுறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, உங்களது மகள் இப்படி ஒரு வழக்கில், செய்யாத குற்றத்துக்காக கைதாகி சிறையில் அடைத்தால் உங்கள் மனம் என்ன பாடுபடுமோ அதேபோலத்தான் நானும் இருக்கிறேன் என்று கூறியிருந்தார் கருணாநிதி.
கனிமொழியைப் பார்க்க கருணாநிதி டெல்லி செல்வாரா என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இருப்பினும் இப்போது நான் போகவில்லை என்றுகூறியிருந்தார் கருணாநிதி. ராசா கைதாகி இத்தனை மாதங்களாகியும் அவரை கருணாநிதி இதுவரை சந்திக்கவில்லை.
இது திமுகவினர் மத்தியில் உறுத்தலாகவே இருந்தது. இந்த நிலையில் கனிமொழியைப் பார்க்க கருணாநிதி போனால் அது சர்ச்சையை, சலசலப்பை ஏற்படுத்தும் என்று கருணாநிதி தரப்பில் கருதப்பட்டதாக தெரிகிறது. இருப்பினும் தற்போது தனது மனதை மாற்றிக் கொண்டு விட்ட கருணாநிதி, மகளைப் பார்ப்பதற்காக இன்று டெல்லி விரைகிறார்.
முன்னதாக நேற்று கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில், கருணாநிதி, மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு, திமுக மத்திய அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்தப் பின்னணியில் நாளை டெல்லி விரைகிறார் கருணாநிதி. தனது பயணத்தின்போது சோனியா காந்தி உள்ளிட்டோரை சந்திக்க அவர் முயற்சிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
1 கருத்துகள்:
கனிமொழி கைதானது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று நிருபர்கள் கேட்டபோது, உங்கள் வீட்டில் உங்கள் பெண் ஒரு குற்றமும் செய்யாமல் சிறைக்கு அனுப்பப்பட்டால், என்ன மனநிலையில் இருப்பீர்களோ, அதே நிலையில் இருக்கிறேன் என்று முழுப்பூசணிக்காயை எப்படியாவது சோற்றில் மறைப்பதில் உறுதியாக கருணாநிதி இருக்கிறார்
செய்யாத குற்றத்துக்காக கருணாநிதியின் குடும்ப சண்டையில் அப்பாவி 3 பேர் தினகரன் ஆபீசில் எரித்துக்கொல்லப் பட்டதை மறக்க முடியுமா....
கருணாநிதி கல்லூரியையே மிதிக்காமல் டாக்டர் பட்டம் வாங்குவதை எதிர்த்த அண்ணாமலை பல்கலை கழக மாணவர் உதயகுமாரை கொன்றுவிட்டு அவன் போலீசால் நிர்ப்பந்திக்கப்பட்ட தந்தையை விட்டு 'இறந்தது என் மகனே அல்ல ' என்று வாக்குமூலம் கொடுக்க பண்ணியதை மறக்க முடியுமா?
சம்பத், கண்ணதாசனை கட்சியில் இருந்து நீக்க செய்த சதிகளை மறக்க முடியுமா?, சட்ட மன்றத்தில் அனந்தநாயகி பேசும்போது குறுக்கிட்டு பொழிந்த ஆபாச வசைககளை மறக்க முடியுமா?, காமராஜர் மீது கிளப்பிய அவதூறுகளை மறக்க முடியுமா?; நெடுஞ்செழியனை ஓரம் கட்ட செய்த மோசடி முயற்சிகளை மறக்க முடியுமா?, ஜனநாயகம், முற்போக்கு என்று பேசிக்கொண்டு முகம்மது பின் துக்ளக் படம் வெளி வராது செய்ய சம்பந்தப்பட்ட கலைஞர்களை மிரட்டியதை மறக்க முடியுமா? கூலிப்படையை கொண்டு திரை அரங்கங்களில் இருக்கைகளை கிழிக்க வைத்து படம் ஓடாது தடுத்ததை மறக்க முடியுமா?; எம்ஜியாரின் 'உலகம் சுற்றும் வாலிபன்' திரைப்படம் வெளியிடாமல் தடுக்க மறக்க முயன்றதை முடியுமா?, எம்ஜியாரை ராமாவரம் பாலத்துக்கு அருகில் தாக்கிட ரௌடிகளை அமர்த்தியதை மறக்க முடியுமா?
முதன்முறையாக முதல்வர் பதவியில் அமர்ந்திருந்த போது, ஒரு காலத்தில் கலைஞர் கருணாநிதி மேடையேறி பேச உழைத்துக்கொண்டிருந்த என்.கே.டி.சுபிரமணியம் நடத்திய ஜவகரிஸ்ட் பத்திரிக்கையில் ,சென்னையில் உள்ள மருத்துவமனையில் 1968 ஜனவரி 01 ராசாத்தி என்கிற தர்மாம்பாளுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.மருத்துவமனையின் பதிவேட்டில் அந்த பெண் குழந்தைக்கு தகப்பனார் மு.கருணாநிதி என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.யார் அந்த கருணாநிதி..?என்ற ஒரு பெட்டி செய்தியை வெளியிட்டிருந்ததை மறக்க முடியுமா?
ராசாத்தி..தர்மாம்பாள் யார் என்றே தனக்கு தெரியாது. தனக்கு அப்படி எந்த பெண் குழந்தையும் இல்லை’’என்று கூறி கருணாநிதி பரபரக்க வைத்தார். நீதிமன்றத்துக்கும் போனார்…பெண் குழந்தை ..மகள்.ஏன்று யாருமே தெரியாது என்றார்..
எந்த பெண் குழந்தையை தன் மகளே இல்லை என மறுத்தாரோ…எந்த பெண் குழந்தையை வெளியில் சொன்னால்கூட தன் பெயருக்கு இழுக்கு என மூடி மறைத்தாரோ…,அந்த மகள் கனிமொழிக்காகத்தான் இன்று அனைத்தையும் இழந்திருக்கிறார் கருணாநிதி.
நல்லையா தயாபரன்
கருத்துரையிடுக