பொதுமக்களின் உயிரிழப்பை தடுப்பதற்குத்தான் நேட்டோ அதிகபட்ச முன்னுரிமை அளிக்கும். இந்த சம்பவத்தை அது மிகவும் கடுமையாக எடுத்துக்கொண்டுள்ளது என ஜெனரல் டேவிட் பீட்ரஸ், லெப்டினன்ட் ஜெனரல் டேவிட் ரோட்ரிகஸ் ஆகியோர் தெரிவித்தனர்.
அமெரிக்க கடற்படை வீரர் ஒருவர் கொல்லப்பட்டதாலும், ஒரு வளாகத்தினுள் 5 பயங்கரவாதிகள் மறைந்திருந்து தாக்குதல் நடத்தியதாலும் விமானத் தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த வளாகம் பொதுமக்கள் வசித்து வந்த வளாகம் என அமெரிக்க கடற்படை மேஜர் ஜெனரல் ஜான் டூலன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். இந்த விமானத் தாக்குதலில் பொதுமக்கள் 9 பேர் உயிரிழந்ததாக டூலன் தெரிவித்தார். எனினும் 12 குழந்தைகளும், 2 பெண்களும் உயிரிழந்ததாக ஆப்கன் அதிகாரிகள் சிலர் தெரிவித்தனர். |
0 கருத்துகள்:
கருத்துரையிடுக