இதேவேளை தொப்பிகலை பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்குவதில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளதுடன், வாழைச்சேனையை சேர்ந்த கர்ப்பிணித் தாய் ஒருவரும் பெல்212 ஹெலிகொப்டர் மூலம் காப்பாற்றப்பட்டு பொலன்னறுவை வைத்தயசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
எந்தவொரு நிலைமைகளுக்கும் முகம் கொடுக்கும் வகையில் பாதுகாப்புப் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், தேவை ஏற்படின் உடனடியாக அனுப்பி வைக்கவென அம்பாறை, ஹிங்குராங்கொடை, கட்டுநாயக்க மற்றும் இரத்மலானை ஆகிய விமானப் படைத் தளத்திலுள்ள ஹெலிகொப்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக