
அதில், காஷ்மீர் தொடர்பாக ஈரான் வெளியிடும் கருத்துகள் இந்தியாவின் பிராந்திய ஒற்றுமைக்கு எதிராக உள்ளன. ஈரானின் நடவடிக்கைகள் இந்திய அரசுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. ஈரான் இதுபோன்ற செயல்களைத் தவிர்க்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த ஜூலை மாதம் முதல் ஈரான் அரசு காஷ்மீர் விஷயத்தில் இந்தியாவுக்கு எதிராக மூன்று முறை கருத்துத் தெரிவித்துள்ளது. காஷ்மீரில் நடைபெறும் போராட்டத்தை ஆதரிக்கிறோம் என்றும் பாலஸ்தீன், ஆப்கானிஸ்தானில் நிலவுவது போன்ற சூழ்நிலை காஷ்மீரிலும் நிலவுகிறது என்றும் ஈரான் தெரிவித்திருந்தது.
ஈரானின் இந்த நடவடிக்கைக்கு ஐ.நா. அவையில் இந்தியா உடனடியாக பதிலடி கொடுத்துள்ளது. வியாழக்கிழமை இரவு நடைபெற்ற ஐ.நா. கூட்டத்தில் ஈரானில் மனித உரிமை மீறல்கள் நடைபெறுகிறது என்பது தொடர்பான வாக்கெடுப்பில் இந்தியா கலந்து கொள்ளாமல் புறக்கணித்து விட்டது. இதற்கு முன்னர் இதேபோன்ற வாக்கெடுப்பு வந்தபோது ஈரானை ஆதரித்தும், தீர்மானத்தை எதிர்த்தும் இந்தியா வாக்களித்தது என்பது குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக