தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

20.11.10

நக்சல் தாக்குதலில் பலியான 2 போலீசாருக்கு முதல்வர் நிதி

சென்னை : சத்திஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்களின் தாக்குதலில் மரணமடைந்த தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு காவலர்களின் குடும்பங்களுக்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் வீதம் 10 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்க, முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசின் செய்திக் குறிப்பு: சத்திஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்கள் நடத்திய தாக்குதலில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த 10 காவலர்கள் உயிரிழந்தனர். அவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த, மத்திய பாதுகாப்புப் படையில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்த சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம், கல்பகனூர் கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகனும் ஒருவர்.

இதுதவிர, விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம், கான்சாபுரம் கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்ற காவலர் மற்றொருவர். வீர மரணம் அடைந்த இரண்டு காவலர்களின் தியாகத்தைப் போற்றி அவர்களது குடும்பத்தினருக்கு, முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ஐந்து லட்சம் ரூபாய் வீதம் 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

0 கருத்துகள்: