
டெல்லி: குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் நாளை ஐக்கிய அரபு நாடுகளுக்கு 5 நாளம் பயணமாகப் புறப்படுகிறார்.
இதற்காக அவர் நாளை டெல்லி விமான நிலையத்தில் இருந்து புறப்படுகிறார்.
ஐக்கிய அரபு நாடுகளில் 5 நாட்கள் சுற்றுப் பயணம் மெற்கொள்ளும் அவர், வரும் 25-ம் தேதி வரை அபுதாபி, சார்ஜா, துபாய் உள்ளிட்ட நகர்களில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். மேலும், அங்கு நடக்கும் தொழில் அதிபர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.
அபுதாபியில் நடக்கவிருக்கும் இந்திய வர்த்தக கண்காட்சியைத் துவக்கி வைக்கிறார். பிரதீபா அரபு நாடுகளுக்குச் செல்வது இது தான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
வரும் 25-ம் தேதி அவர் சிரியாவுக்குச் செல்கிறார். அங்கு 29-ம் தேதி வரை சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். இந்த தகவலை இந்திய வெளியுறவுத்துறை (கிழக்கு) செயலாளர் லதா ரெட்டி தெரிவித்தார்.
இதற்காக அவர் நாளை டெல்லி விமான நிலையத்தில் இருந்து புறப்படுகிறார்.
ஐக்கிய அரபு நாடுகளில் 5 நாட்கள் சுற்றுப் பயணம் மெற்கொள்ளும் அவர், வரும் 25-ம் தேதி வரை அபுதாபி, சார்ஜா, துபாய் உள்ளிட்ட நகர்களில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். மேலும், அங்கு நடக்கும் தொழில் அதிபர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.
அபுதாபியில் நடக்கவிருக்கும் இந்திய வர்த்தக கண்காட்சியைத் துவக்கி வைக்கிறார். பிரதீபா அரபு நாடுகளுக்குச் செல்வது இது தான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
வரும் 25-ம் தேதி அவர் சிரியாவுக்குச் செல்கிறார். அங்கு 29-ம் தேதி வரை சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். இந்த தகவலை இந்திய வெளியுறவுத்துறை (கிழக்கு) செயலாளர் லதா ரெட்டி தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக