தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

4.2.11

பதவி விலக வேண்டிய நேரம் வந்துவிட்டது! : ஹுஸேனி முபாரக்


தான் பதவிவிலக வேண்டியதற்கான நேரம் வந்துவிட்டதாக எகிப்தின்
அதிபர் ஹுஸேனி முபாரக் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் ABC செய்தி சேவைக்கு அவர் அளித்துள்ள பேட்டியில்,

எனது 62 வருட பொதுச்சேவையிலிருந்து நான் விலகத்தயாராக இருக்கிறேன். நான் ஓய்வு பெறவேண்டிய நேரம் வந்துவிட்டது. எனினும் உடனடியாகை இது நடைபெறுவது தற்போதைய சூழ்நிலையை மேலும் ஆபத்தாக்கி விடும்.

கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டங்களுக்கு எனது அரசு பொறுப்பல்ல. எனினும் இருகுழுவினருக்கு இடையில் ஏற்பட்ட வன்முறைக்கு வருந்துகிறேன். எகிப்திய மக்கள் தங்களுக்குள்ளேயே அடிபட்டுக்கொள்வது அழகல்ல. இது எனக்கு மிகுந்த் கவலை அளிக்கிறது.

வன்முறையை தூண்டிவிட்ட முஸ்லீம் சகோதரத்துவ கட்சிக்கும் எனது கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். என கூறினார். கெய்ரோவில் முபாரக்கின் அதிபர் மாளிகையை சுற்றி கடுமையான பாதுகாப்பு போடப்பட்டிருக்கும் நிலையில், 82 வயதாகும் முபாரக்கை பதவி விலக கோரும் அழுத்தத்தை அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமவும் விடுவிப்பார் என கருதப்படுகிறது

கூட்டணி தொடர்பாக பா.ம.க நிலை அந்தோ பரிதாபம்!!!

"வரும் சட்டசபை தேர்தலில் பா.ம.க.,வுக்கு, 18 தொகுதிகள் மட்டுமே வழங்க முடியும்' என, தி.மு.க., தலைமை திட்டவட்டமாக தெரிவித்துள்ளதால், பா.ம.க., தலைமை மீண்டும் அ.தி.மு.க.,வுக்கு தூது விட்டுள்ளது. தேர்தலுக்கு தேர்தல் அணி மாறும் பா.ம.க., வரும் சட்டசபை தேர்தலிலும், அணி மாறும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. கடந்த லோக்சபா தேர்தலில், மரண அடி வாங்கிய பா.ம.க., வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றால் மட்டுமே, கட்சியை தொடர்ந்து நடத்த முடியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. சட்டசபை தேர்தலுக்காக, தி.மு.க., - அ.தி.மு.க., தலைமைக்கு தூது விட்டு சீட் பேரம் நடத்தி வந்தது. அ.தி.மு.க.,விடம் பேச பா.ம.க., தூதராக குருவும், தி.மு.க.,விடம் பேச்சு நடத்த தலைவர் மணியும் களம் இறக்கப்பட்டனர். அ.தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க.,வுக்கு முதல் வாய்ப்பு வழங்க திட்டமிட்டுள்ளதால், பா.ம.க.,வுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட வில்லை. அதனால், தி.மு.க., கூட்டணிக்காக, பா.ம.க., தலைமை காய் நகர்த்தி வருகிறது. தொண்டர்கள் மத்தியில் தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்க, ஆதரவு இல்லை.

இந்நிலையில், டில்லி சென்று திரும்பிய முதல்வர் கருணாநிதி, "பா.ம.க., எங்கள் கூட்டணியில் இல்லை' என, அறிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், இடைவெளியை சரி செய்யும் நோக்கில், மணியை தூது அனுப்பினார். மணி, முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின் ஆகியோரை சந்தித்து நடத்திய பேச்சு, பா.ம.க.,வுக்கு சாதகமாக அமையவில்லை. பா.ம.க., சார்பில் கேட்கப்பட்ட, 35 சட்டசபை தொகுதி, ஒரு ராஜ்யசபா சீட் ஆகியவற்றுக்கு, அவர்கள் சம்மதிக்கவில்லை. அத்துடன், குறிப்பிட்டு எந்த தொகுதியையும் பா.ம.க., கேட்கக் கூடாது' என, தி.மு.க., தரப்பில் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு பா.ம.க., சம்மதிக்கவில்லை. பா.ம.க., விரும்பும் தொகுதி வேண்டும் எனில், 18 தொகுதி மட்டுமே தர முடியும் என, தி.மு.க., தலைமை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

எகிப்து, துனிசியா கலவரம் எதிரொலி: ஏமன் அதிபரும் பதவி விலகுகிறார்!!

பிப். 3-துனிசியா நாட்டில் மக்கள் புரட்சியால் அதிபர் நாட்டை விட்டு ஓடி விட்டார். இதை தொடர்ந்து இப்போது எகிப்தில் அதிபரை எதிர்த்து மக்கள் போராடி வருகின்றனர். இரு நாடுகளில் நடக்கும் போராட்டம் நீண்ட காலமாக சர்வாதிகார ஆட்சி நடத்தி வரும் பல நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அரபு நாடான ஜோர்டானில் அதிபருக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் குதித்து விட்டனர். இப்போது இன்னொரு அரபு நாடான ஏமன் நாட்டிலும் மக்கள் போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.

இந்த நாட்டில் அதிபராக இருப்பவர் அலி அப்துல்லா சலே இவர் 32 ஆண்டுகளாக அதிபராக இருக்கிறார். துனிசியா நாட்டில் கலவரம் நடந்ததுமே கடந்த மாதம் இங்கும் பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அடுத்த கட்டமாக எகிப்து போல பெரிய அளவில் போராட்டம் நடத்த எதிர் கட்சிகள் தயாராகி வருகின்றன.இதையடுத்து நேற்று பாராளுமன்ற அவசர கூட்டம் நடத்தப்பட்டது. இதில் பேசிய அதிபர் அலி அப்துல்லா எனது பதவி காலம் 2013-ம் ஆண்டு முடிகிறது. அத்துடன் பதவி விலகி விடுவேன். நாட்டு வளர்ச்சியை மட்டுமே கருத்தில் கொண்டு நான் செயல்படுகிறேன். என்று கூறினார். ஆனாலும் அதிபருக்கு எதிராக திட்டமிட்டபடி பெரிய போராட்டத்தை நடத்த போவதாக எதிர்க் கட்சிகள் அறிவித்து உள்ளன.

இஸ்லாமிய வங்கிக்கு எதிரான அரசியல் கோமாளி சு.சாமியின் வழக்கு தள்ளுபடி!

கேரள அரசு இஸ்லாமிய ஷரியா  அடிப்படையில் அமைக்கவிருந்த இஸ்லாமிய வங்கிக்கெதிராக ஜனதா கட்சித் தலைவர் அரசியல் கோமாளி சுப்ரமணிய சாமி தொடுத்த வழக்கை கேரள உயர்நீதிமன்றம் இன்று, சில மணி நேரங்களுக்கு முன்  தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது. இதன் மூலம் நாட்டிலேயே முதன்முறையாக இஸ்லாமிய வங்கி ஒன்று தொடங்கப்படுவதற்கு வழி வகுக்கப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே. ஷலமேஷ்வர்  மற்றும் நீதிபதி P.R. ராமச்சந்திரன் மேனன் அடங்கிய அமர்வு முன் இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.  மனுதாரர் "மதச் சார்பற்ற" நாட்டில் 'மத அடிப்படையில்' வங்கிகள் தொடங்கப்படக்கூடாது என்று வாதிட்டதை நீதிமன்றம் நிராகரித்தது. மத அடிப்படையில் அல்லாமல் ஒரு வட்டியில்லா வங்கி நெறி என்ற அடிப்படையிலேயே இதை அணுகுவதாக அரசுத் தரப்பு தெரிவித்திருந்தது.

இந்த வங்கிக்கு முன்னோட்டமாக 'அல் பரகா நிதி நிறுவனம்' ஒன்றை கடந்த இரண்டாயிரத்து  ஒன்பது முதல் கேரள அரசு நடத்தி வருகிறது என்பதும் அதில் 'ஷரியா' சரியாகப் பின்பற்றப்படுகிறதா என்று ஆராய அறிஞர் குழு அமைக்கப்பட்டுள்ளதும் குறிக்கத்தக்கது.

தீர்ப்புக்குப் பின் நிருபர்களிடம் பேசிய சுப்ரமணிய சாமி "தாம் மேற்கொண்டு உச்ச நீதிமன்றத்தை அணுக உள்ளதாக" தெரிவித்தார்.

இதோ வருகிறது ஜனநாயகப் புரட்சி !! அரேபியா எங்கும் கலகம் !! தப்பி ஓடும் சர்வாதிகாரிகள் !! அஞ்சி நடுங்கும் ஆளும் வர்க்கங்கள்!! தொடை நடுங்கும் ஏகாதிபத்தியங்கள் !! – பவானி


இந்தக் கட்டுரையின் நோக்கம் டுனிசியா, ஏமன், எகிப்து போன்ற அரபு நாடுகளில் நடக்கும் ஜனநாயகப் போராட்டங்களைப் பற்றிய செய்திகளைத் தருவது மட்டும் அல்ல. மாறாக, அரபு மக்களைப் பற்றிய பொய்ப் பிரச்சாரங்களை தொடர்ந்து மேற்கொண்டு வரும் மேற்கு உலக நாடுகளின் செயல்களை மீறி அரபு மக்களின் போராட்டம் முன்னேறியிருப்பதையும் அது சீனா, இலங்கை, பர்மா, போன்ற சர்வாதிகார நாடுகளில் வாழும் மக்களுக்கு விடுக்கும் செய்தியை வாசகர்களுக்  தொடர்ந்து படிக்க தலைப்பை கிலிக் செய்யவுன்

ஈரானுடன் சிறீலங்கா அரசு நெருக்கம் - அமெரிக்கா எச்சரிக்கை – விக்கிலீக்ஸ் தகவல்

சிறீலங்கா அரசு  சர்ச்சைக்குரிய ஈரானிய அரசு டன் நெருங்கிய உறவு பேணி வந்தமைக்கு அமெரிக்கா சிறீலங்காவிற்கு எச்சரிக்கை செய்திருப்பதாக, விக்கலீக்ஸ் இணையத்தளம் வெளிப்படுத்தியுள்ள  தகவல்களை  ஆதாரம் காட்டி, த ரெலிகிறாஃப் (The Telegraph) பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக விக்கிலீஸ் இணையம் வெளியிட்டுள்ள தகவலில், 2007ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11ஆம் நாள் அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட விபரங்களில், சிறீலங்காவிற்கான அமெரிக்க தூதருக்கும் சிறீலங்காவின் அப்போதைய வெளிவிவகாரச் செயலர் பாலித கோஹென மற்றும் மத்திய வைப்பகத்தின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோருடன் இடம்பெற்ற தனித்தனியான சந்திப்புக்களின் உரையாடல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

ஈரானுடன் நெருங்கிய வர்த்தக உறவைப் பேணுவது மற்றும் ஆயுதக் கொள்வனை மேற்கொள்ள இருப்பது பற்றியும், அவ்வாறு ஆயுதக் கொள்வனவு இடம்பெற்றால் அது ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் தீர்மானம் 1747ஐ மீறுவதாக அமையும் எனவும், அமெரிக்க - இலங்கை உறவில் பாரிய எதிர்விளைவைத் தோற்றுவிக்கும் என்றும், அமெரிக்க தூதுவரும், துதரக அதிகாரியும் பாலித கோஹென, அஜித் நிவாட் கப்ரால் ஆகியோருக்கு எச்சரிக்கை செய்தனர்.

இதனை மறுத்த அவர்கள் இருவரும் ஈரானிடம் தமது அரசாங்கம் ஆயுதக் கொள்வனவை மேற்கொள்ள எத்தனிக்கவில்லை எனத் தெரிவித்தனர். அதுமட்டுமன்றி 2007ஆம் ஆண்டு நவம்பரில் அரச அதிபர் மகிந்த ராஜகப்ச ஈரானிற்கு மேற்கொள்ள இருக்கும் பயணம் வர்த்தகத்தை அடிப்படையாகக் கொண்டது எனவும் அவர்கள் இருவரும் பதலளித்துள்ளனர்.

ஆனால் சிறீலங்காவின் மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க தூதரக அதிகாரி ஒருவருக்கு கூறிய இரகசிய தகவலின் அடிப்படையில் 200 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான எண்ணையை சந்தை விலையைவிடக் குறைவான விலைவில் ஈரானிடம் இருந்து கொள்வனவு செய்யவும், முக்கிய ஆயுதங்களை ஈரானிடம் கொள்வனவு செய்யவுமே மகிந்த ராஜபக்சவின் பயணம் அமைவது மட்டுமன்றி, இதன் ஊடாக அமெரிக்காவிற்கு ஒரு செய்தியையும் சொல்ல மகிந்த அரசாங்கம் நினைக்கின்றது என சமரசிங்க கூறியிருக்கின்றார்.

ஈரானின் அணுவாயுதத்திட்டம் மற்றும் பயங்கரவாத செயற்பாடுகளுடான தொடர்புகளைக் கண்டித்து ஐக்கிய நாடுகள் சபையும், அமெரிக்காவும் அதன் மீது தடைகளை விதித்திருந்த காலத்தில் மகிந்த ராஜபக்சவின் பயணம் அமைவது வொசிங்கரனை எதிர்மறையான நிலைப்பாட்டுக்கு தள்ளும் என தூதரக அதிகாரிகள் இந்த சந்திப்பில் சுட்டிக்காட்டியுள்ளனர். ஈரானுடன் மேலதிக வர்த்தக உறவுகளை ஏற்படுத்த வேண்டாம் எனவும், அவதானமாகச் செயற்படுமாறும் நட்பு ரீதியாக சிறீலங்காவிற்கு இந்த சந்திப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Financial Action Task Force (FATF) அமைப்பு ஈரானின் நிதிக் கையாளுகை பற்றி அண்மையில் வெளியிட்ட அறிக்கை மற்றும் பயங்கரவாத அமைப்புகளிற்கான ஈரானின் இரகசிய நிதி வழங்கல் பற்றி எச்சரிக்கை செய்த அமெரிக்க தூதரக அதிகாரிகள், ஈரானுடனான நிதி மற்றும் வைப்பக உறவுகள் பற்றியும் எச்சரிக்கை செய்திருக்கின்றனர்.

இந்த விடயங்கள் தொடர்பாக அரச அதிபர் மகிந்த ராஜபக்சவிற்கு தெரியப்படுத்துவதாக இவர்கள் இருவரும் தனித்தனியாக உறுதியளித்துச் சென்றிருப்பதாகவும் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்துள்ள இரகசியத் தகவல் மேலும் தெரிவிக்கின்றது.
ஈரான் தமது தேயிலையைக் கொள்வனவு செய்யும் முக்கிய நாடு என்பதால், அதனுடனான தமது வர்த்தக உறவு தொடரும் எனவும், தனக்குத் தெரிந்தளவில் அந்த நாட்டிடம் ஆயுதம் வாங்கும் எண்ணம் தமது அரசாங்கத்திற்கு இல்லை எனவும் கோஹொன இதன்போது பதிலளித்திருப்பதாகவும் விக்கலீக்ஸ் வெளியிட்ட தகவலில் மேலும் கூறப்பட்டுள்ளது

3.2.11

இந்தியாவில் புதிய பயங்கரவாத இயக்கங்கள் - ப.சிதம்பரம்


இந்தியாவில் புதிய பயங்கரவாத இயக்கங்கள் தலைத் தூக்கியுள்ளன என மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் பல பகுதிகளில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களில் இவ்வமைப்புகளின் பங்கினைக் குறித்து சந்தேகிக்கப்படுவதாக அவர் கூறினார்.

மலேகான், சம்ஜோதா, மக்கா மஸ்ஜித், அஜ்மீர் உள்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடந்த குண்டுவெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ் உள்பட பல்வேறு ஹிந்துத்துவா பயங்கரவாத இயக்கங்களின் பங்கு வெட்ட வெளிச்சமான சூழலில் உள்நாட்டு பாதுகாப்பைக் குறித்து விவாதிக்க அழைக்கப்பட்ட மாநில
முதல்வர்கள் கூட்டத்தில் உரைநிகழ்த்தினார் அவர்.

இந்த அமைப்புகளின் பெயர்களை குறிப்பிடுவதிலும், அவற்றின் சதித்திட்டங்களை வெளிப்படுத்துவதிலும் தங்களுக்கு எவ்வித தயக்கமுமில்லை என ஹிந்துத்துவா பயங்கரவாத இயக்கங்களை மறைமுகமாக சுட்டிக்காட்டினார். அவர்கள் எந்த மதப்பிரிவைச் சார்ந்தவர்களாகயிருந்தாலும், அனைத்து பயங்கரவாத இயக்கங்களையும் சட்டத்தின் முன்னால் நிறுத்தி போதுமான தண்டனையை வாங்கிக் கொடுப்போம்.

பயங்கரவாதம் தொடர்பாக நமது தேசிய புலனாய்வு அமைப்பினரும் (என்ஐஏ), மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) அதிகாரிகளும்
ஒவ்வொரு நாளும் புதிதாக ஆதாரங்களைத் திரட்டி வருகின்றனர். நமது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கும் பயங்கரவாதத்தின் புதிய பரிமாணங்கள் தொடர்பாக நம்மைத் தட்டி எழுப்புவதாக இந்த ஆதாரங்களை நாம் கருத வேண்டும்.

கடந்த இரண்டு வருடங்களாக உள்நாட்டு பாதுகாப்பு மேம்பட்டுள்ளது. புனே குண்டுவெடிப்பு மட்டுமே கடந்த ஆண்டு இந்தியாவில் நடந்த ஒரேயொரு பயங்கரவாத தாக்குதலாகும் என ப.சிதம்பரம் தெரிவித்தா
ர்

ராசாவை 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி!

டெல்லி: ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நேற்று கைது செய்யப்பட்ட முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா இன்று சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 5 நாள் தனது காவலில் வைத்து விசாரிக்க சிபிஐ அனுமதி கோரியது. இதை நீதிமன்றம் ஏற்று அவரை சிபிஐ காவலுக்கு அனுப்பியது.

அதே போல முன்னாள் தொலைத் தொடர்புத்துறைச் செயலாளர் சித்தார்த் பெகுரியா, ராசாவின் முன்னாள் தனிச் செயலாளர் சந்தோலியா ஆகியோரையும் 5 நாள் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தது நீதிமன்றம்.

நேற்று கைதான ராசா, சித்தார்த் பெகுரியா, சந்தோலியா ஆகியோர் இரவு முழுவதும் சிபிஐ அலுவலகத்திலேயே தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

ராசா உள்ளிட்ட 3 பேர் மீதும் 8 நிறுவனங்களுக்கு விதிகளை மீறி 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ததாக சி.பி.ஐ. குற்றம் சாட்டியுள்ளது. மேலும் ஆ.ராசாவின் வீடு, அலுவலகங்களில் நடந்த சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள், விசாரணை தகவல்களையும் கைது நடவடிக்கைக்கு ஆதாரமாக சி.பி.ஐ.காட்டியுள்ளது.

இவை தவிர குற்றம் சாட்டப்பட்டவர்களின் பணப் பறிமாற்றமும் முக்கிய ஆதாரமாக கருதப்படுகிறது.

மேலும் அப்ரூவராக மாறிவிட்ட ஒருவர் கொடுத்துள்ள வாக்குமூலம், ஸ்பெக்ட்ரம் முறைகேட்டை வெளிப்படுத்தும் மிக முக்கிய ஆதாரமான சி.பி.ஐ. வசம் உள்ளது. ராசாவுக்கு நெருங்கிய வட்டாரங்கள் அடைந்த பண லாபங்கள் குறித்த தகவலை அவர் விவரமாகத் தெரிவித்துள்ளார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடங்கிய 2007ம் ஆண்டு முதல் அவை வழங்கப்பட்ட 2008ம் ஆண்டு ஜனவரி வரையிலான காலத்தில் ராசாவுடன் தொடர்புள்ளவர்களின் பணப் பரிமாற்றங்கள் சி.பி.ஐ. வசம் சிக்கியுள்ளன.

மேலும் நிரா ராடியாவின் தொலைபேசி உரையாடல்கள் மூலம் கிடைத்த தகவல்களும் கைதுக்குக் காரணமாகியுள்ளன.

இந் நிலையில் இன்று பிற்பகலில் ராசா, சித்தார்த்த பெகுரியா, சந்தோலியா ஆகிய மூவரும் டெல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றமான பாட்டியாலா ஹவுஸ் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அப்போது மூவரிடமும் ஒரே நேரத்தில் விரிவான விசாரணை நடத்த வேண்டி இருப்பதால் மூவரையும் 5 நாட்கள் தங்கள் காவலில் அனுப்ப அனுமதிக்க வேண்டும் என்று சிபிஐ கோரியது.

மேலும் சிபிஐ தாக்கல் செய்த கைது அறிக்கையில், ராசாவின் நடவடிக்கைகளால் நாட்டுக்கு ரூ. 22,000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. யூனிடெக், ஸ்வான் ஆகிய நிறுவனங்களுக்கு ஆதரவாக கடைசி நேரத்தில் விதிகளை மாற்றி ஸ்பெக்ட்ரத்தை ஒதுக்கினார் ராசா. இந்த இரு நிறுவனங்களுக்கு ஆதரவாக அவர் செயல்பட்டார்.

இதில் ஸ்வான் நிறுவனம் ரூ. 530 கோடி மட்டுமே கொடுத்து ஸ்பெக்ட்ரத்தை வாங்கியது. ஆனால், இதில் 40 சதவீத பங்குகளை மட்டுமே ரூ. 4,200 கோடிக்கு விற்றுள்ளது. இதனால் இதில் பெரும் முறைகேடு நடந்துள்ளது உறுதியாகிறது.

ராசா மீது இந்திய தண்டனைச் சட்டம் 120பி, 13(1), 13(1டி) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மேலும் ராசா வெளியில் இருந்தால், விசாரணைக்கு இடையூராக இருப்பார் என்று சிபிஐ தெரிவித்துள்ளது.

இதை ராசாவின் வழக்கறிஞர் எதிர்த்தார். ராசாவை கைது செய்ததே தவறு என்று அவர் வாதிட்டார்.அவர் வாதாடுகளையில், ஸ்பெக்ட்ரம் அலைவரிசைக்கான கட்டணத்தை நிர்ணயித்தது ராசா அல்ல. அவர் ஓடி ஒளிந்துவிடாமல் விசாரணைக்கு ஆஜாராகி வருகிறார். ஆனால், முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவதாகக் கூறி அவரை சிபிஐ கைது செய்ததாகக் கூறுவது சரியல்ல என்றார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சைனி 30 நிமிடங்களில் தீர்ப்பளிப்பதாக அறிவித்தார். பின்னர் தீர்ப்பளித்த நீதிபதி, ராசாவை 5 நாட்கள் சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தார்.

இதையடுத்து ராசா உள்ளிட்ட 3 பேரையும் சிபிஐ தனது தலைமையகத்துக்கு அழைத்துச் சென்றது. 5 நாள் விசாரணைக்குப் பின் வரும் திங்கள்கிழமை மூவரும் மீண்டும் இதே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவர்.

இதற்கிடையே ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக விரிவான விசாரணையை சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிரப்படுத்தி உள்ளனர். சுப்ரீம் கோர்ட்டில் இது தொடர்பான வழக்கு விசாரணை வரும் 10ம் தேதி வர உள்ளது. அன்று சி.பி.ஐ. அதிகாரிகள், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளனர். அதற்கு இன்னும் ஒரு வாரமே கால அவகாசம் உள்ளது.

இந்த நிலையில் ஸ்பெக்ட்ரம் தொடர்பாக தனியாக விசாரணை நடத்தி வரும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகளுக்கு, சி.பி.ஐ. நேற்று திடீரென அழைப்பு விடுத்தது. கைது செய்யப்பட்டுள்ள ராசா உள்ளிட்ட 3 பேரிடமும் ஒருங்கிணைந்து விசாரணை நடத்தலாம் என்று சி.பி.ஐ. கூறியுள்ளது.

இதை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் ஏற்றுக் கொண்டனர். இதனால் இனி அடுத்தக்கட்ட விசாரணை நடக்கும் போது சி.பி.ஐ. அதிகாரிகளும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகளும் ஒன்றாக இருந்து விசாரணை நடத்துவர்.

அதேசமயம், வழக்கமாக இதுபோல கைதாகி சிறைக்கு அனுப்பப்படும் சமயத்தில் அரசியல்வாதிகளுக்கு வரும் நெஞ்சு வலி, ராசாவுக்கும் வருமா என்பதும் தெரியவில்லை. சிபிஐ விசாரணை தொடங்கப்படுவதற்கு முன்பு அவர் சென்னையில் மருத்துவமனையில் சேர்ந்து திடீரென உடல் நலப் பரிசோதனைகளை செய்து கொண்டார் என்பது நினைவிருக்கலாம்.

எகிப்தில் வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்களை தாக்கிய முபாரக் ஆதரவாளர்கள் .


எகிப்தில் அதிபர் பதவி விலக வேண்டுமென மில்லியன் கணக்கானோர் பல நாட்களாக தொடர்ந்து
வீதிகளில் மாபெரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.  அவர்களை, எகிப்து அதிபரின் ஆதரவாளர்கள் எனக் கருதப்படும்  ஆயிரக்கணக்கானோர் திடீரென கூட்டத்தினுள் புகுந்து தாக்குதல் நடத்தியதால் அங்கு கலவரம் ஏற்பட்டதாக தெரியவருகிறது.
இரு தரப்பினரும் கற்களாலும் போத்தல்கள் மற்றும் கையில் அகப்படும் பொருட்களால் தாக்கியவாறு இருந்ததாகவும் இதனால்  நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும் அல்ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.
Tahrir Square இற்கு அருகாமையில் மோதல் இடம்பெறுகின்ற இடம் போர்க்களம் போல் காட்சி தருவதாகவும் அங்கிருக்கும் சர்வதேச ஊடகங்களின் நிருபர்கள் வர்ணிக்கின்றனர். Tahrir Square க்கு அருகில் குதிரைகள் ஒட்டகங்களில் வந்த முபாரக் ஆதரவாளர்களே இந்த தாக்குதல்களுக்கு காரணமென தெரியவருகிறது.

இதுவரை 500 மேற்பட்டவர்கள் காயமடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அத்துடன் அங்கிருந்து செய்தி சேகரித்துவரும் சர்வதேச ஊடக நிருபர்களும் தாக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. முன்னர் எகிப்து நாட்டு இராணுவத்தினர் போராட்டக்காரர்களை கலைந்து செல்லுமாறு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.   (கலவரம் வீடியோ)   

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்: ராசா, 2 தொலைத் தொடர்பு ௦அதிகாரிகள் கைது - சிபிஐ அதிரடி

டெல்லி,பிப்.2:ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு ஊழல் விவகாரம் தொடர்பாக முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா, அவரது சகோதரர் கலிய பெருமாள் ஆகியோரை சிபிஐ இன்று கைது செய்தது.

ராசாவுடன் முன்னாள் தொலைத் தொடர்புத்துறைச் செயலாளர் சித்தார்த் பெகுரியா, ராசாவின் முன்னாள் தனிச் செயலாளர் சந்தோலியா ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராசா மீது சட்டவிரோத கிரிமினல் செயல்பாடு, தொலைத் தொடர்புத்துறை கொள்கைகளை மீறி சில நிறுவனங்களுக்கு சலுகை வழங்கியது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் தாக்கல் செய்துள்ளது சிபிஐ.

இந்த விவகாரம் தொடர்பாக ஆ.ராசா, நீரா ராடியா, தொலைத் தொடர்புதுறை முன்னாள் அதிகாரிகள் உள்பட பலரிடமும் சிபிஐ தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.

ராசாவிடம் கடந்த டிசம்பர் மாதம் 24ம் தேதி முதன் முதலில் விசாரணை நடத்தியது. அப்போது அவரது உறவினர்களிடமும் நண்பரிடமும் விசாரணை நடந்தது. அதற்கு முன் அவரது வீட்டிலும் அவரது உறவினர்களின் வீட்டிலும் ரெய்ட் நடத்தியது.

25ம் தேதி 2வது முறையாக விசாரணை நடத்தினர். இந்நிலையில் நிலையில் நேற்று முன்தினம் டெல்லியில் திமுக தலைவர் கருணாநிதியும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் சட்டமன்றத் தேர்தல் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சு நடத்திக் கொண்டிருந்தபோதே ராசாவிடம் சிபிஐ மீண்டும் விசாரணை நடத்தியது. சுமார் 7 மணி நேரம் தொடர்ந்து இந்த விசாரணை நடந்தது.

அதே நேரத்தில் ராசாவின் சகோதரர் கலிய பெருமாளிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் இன்று காலை முதல் ராசாவிடம் மீண்டும் சிபிஐ அதிகாரிகள் 4வது முறையாக விசாரணை நடத்தினர். டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் வைத்து இந்த விசாரணை நடந்தது.

இன்றைய விசாரணையைத் தொடர்ந்து சிபிஐ இன்று முக்கிய முடிவு எடுக்க இருப்பதாக தகவல்கள் தெரிவித்தன. அதேப்போல இன்று பிற்பகலில் ராசாவை கைது செய்தது சிபிஐ. பின்னர் அவரது சகோதரர் பெருமாளையும் கைது செய்வதாக சிபிஐ அறிவித்தது. அவர்களுடன் முன்னாள் தொலைத் தொடர்புத்துறைச் செயலாளர் பெகுரியா, ராசாவின் முன்னாள் தனிச் செயலாளர் சந்தோலியா ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஸ்பெக்ட்ரம் தொடர்பான விசாரணை அறிக்கையை சிபிஐ வரும் 10ம் தேதி உச்சநீதிமன்றத்தில் தனது தாக்கல் செய்ய வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு முறைகேடுகளால் நாட்டுக்கு ரூ.1.76 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மத்திய தலைமை தணிக்கைத்துறை குற்றம் சாட்டியுள்ளது.

ஆனால், ரூ. 22,000 கோடியளவுக்கே நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக சிபிஐ தனது முதல் தகவல் அறிக்கையில்(FIR) கூறியுள்ளது.

அதே நேரத்தில் தமிழக சட்டமன்றத் தேர்தல் தொகுதிப் பங்கீட்டில் திமுகவை நெருக்கவே இந்த நேரத்தில் சிபிஐ தனது பிடியை இறுக்குவதாகவும் பேச்சுக்கதள் எழுந்துள்ளன. இந்தக் கைது நடவடிக்கையால் திமுக அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.
thatstamil

எகிப்து:அதிபர் முபாரக்கிற்கு கட்டுப்பட ராணுவம் மறுப்பு

கெய்ரோ,பிப்.2:எகிப்து நாட்டின் அதிபராக ஹோஸ்னி முபாரக்கிற்கு எதிராக தலைநகர் கெய்ரோ மற்றும் அலெக்சாண்ட்ரியாவில் நடந்த பேரணிகளில் சுமார் 10 லட்சம் பேர் பங்கேற்றனர்.

இதில், ஏழை முதல் பணக்காரர்கள் வரை அனைவரும் பங்கேற்றனர். மாணவர்கள் மற்றும் அனைத்து தரப்பு தொழிலாளர்களும் கலந்து கொண்டனர். ஒட்டு மொத்தமாக அதிபர் முபாரக் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தினர்.

அவர்களை கட்டுப்படுத்த ராணுவத்தை முபாரக் ஏவிவிட்டார். ராணுவ டாங்கிகள், பீரங்கி வண்டிகள், தெருக்களில் நிறுத்தப்பட்டன எந்திர துப்பாக்கிகளுடன் ராணுவ வீரர்கள் ஆங்காங்கே தயாராக நின்றனர். போராட்டகாரர்களை ஒடுக்கும்படி முபாரக் ராணுவத்துக்கு உத்தரவிட்டபடி இருந்தார்.

ஆனால் முபாரக் உத்தரவுக்கு கட்டுப்பட ராணுவம் திடீரென மறுத்து உள்ளது. பொதுமக்களை சுட முடியாது என்றும் ராணுவம் கூறிவிட்டது. இது தொடர்பாக ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் "எகிப்து மக்கள் இந்த நாட்டின் சிறந்த குடிமக்கள் அவர்கள் சட்டப்பூர்வமாக போராடுகின்றனர். அவர்களுக்கு போராட உரிமை உள்ளது. எங்கள் சொந்த நாட்டு மக்களை நாங்கள் தாக்கமாட்டோம்" என்று கூறப்பட்டுள்ளது.

ராணுவமும் மக்கள் பக்கம் சாய்ந்துவிட்டதால் முபாரக்கின் நிலைமை மோசமாகி உள்ளது. அவர் எந்த நேரத்திலும் பதவி விலக வேண்டிய கட்டாய சூழ்நிலை உருவாகி உள்ளது. இதை தடுக்க போராட்டகாரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முபாரக் முயற்சித்து வருகிறார்.

இதுத் தொடர்பாக துணை அதிபர் உமர் சுலைமான் டெலிவிஷனில் தோன்றி வேண்டுகோள் விடுத்தார். அதில் அவர் கூறியதாவது: அதிபர் முபாரக் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண விரும்புகிறார். எல்லா பிரச்சினைகளையும் பேசி தீர்த்து கொள்ளலாம். அரசியல் சட்டம், சட்டவிதிகள் அனைத்தையும் மாற்றி அமைக்கலாம். பேச்சு வார்த்தைக்கு வாருங்கள் என்று அவர் கூறினார்.

ஆனால் போராட்டகாரர்கள் சமாதானத்துக்கு தயாராக இல்லை. முபாரக் அதிபர் பதவியில் இருந்து விலகியே ஆக வேண்டும் என்று கூறி உள்ளனர். அதிபர் உத்தரவுக்கு ராணுவம் கட்டுப்பட மறுத்துவிட்ட நிலையில் எதிர்கட்சியினரும் சமாதான பேச்சு நடத்த தயாராக இல்லாததால் முபாரக் ஆட்சி எந்த நேரத்திலும் கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது

முபாரக்கின் பேச்சு ஏமாற்றுவேலை - உடனடியாக பதவி விலக எல்பராதி வலியுறுத்தல்


கெய்ரோ,பிப்.2:சர்வதேச அணுமின் முகமையின் முன்னாள் தலைவரும், நோபல் பரிசு பெற்றவருமான எல்பராதி சி.என்.என் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் முபாரக் உடனடியாக பதவி விலகவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
"முபாரக் செப்டம்பர் மாதம் பதவி விலகுகிறேன் எனக் கூறுவது ஆட்சியில் தொடர்வதற்கான தந்திரமாகும். முபாரக் உடனடியாக பதவி விலகி அடுத்த தேர்தல் வரை கேர்டேக்கரிடம்(இடைக்கால ஆட்சியாளர்) ஆட்சியை ஒப்படைக்க வேண்டும்.

முபாரக்கின் பேச்சு ஏமாற்று வேலையாகும். அவர் ஆட்சியை விட்டு போக விரும்பவில்லை. இந்த நகரத்தில் மக்களைப் பாருங்கள். அவர் எதனை விரும்புகிறார்கள் என்று. முபாரக் தொடர்ந்து தந்திர விளையாட்டை ஆடிவருகிறார். எகிப்தின் வேதனையை அதிகரிக்க அவர் விரும்புகிறார். அவர் ஆட்சியில் தொடர்வது மக்களின் கோபத்தை அதிகரிக்கச் செய்யும். யார் அவருக்கு ஆலோசனை வழங்குகின்றார்களோ அவர்கள் தவறான யோசனையையே வழங்குகின்றனர்." இவ்வாறு எல்பராதி தெரிவித்துள்ளார்.  நன்றி: பாலைவன தூதுசெய்தி:presstv

ஹுஸ்னி முபாரக்கின் ராஜினாமாச் செய்ய 50 மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை

கெய்ரோ,பிப்.2:போராட்டம் உக்கிரம் அடையும் முன்பு உடனடியாக ஹுஸ்னி முபாரக் ராஜினாமாச் செய்யவேண்டுமென எகிப்து நாட்டைச் சார்ந்த 50 மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

நீதிபீடத்தின் கண்காணிப்பில் பாராளுமன்ற அதிபர் தேர்தல்களை நடத்தவேண்டுமென கெய்ரோ இன்ஸ்ட்யூட் ஆஃப் ஹியூமன் ரைட் ஸ்டடீஸ், செண்டர் ஃபார் எக்ணாமிக்ஸ் அண்ட் சோசியல் ரைட், அரப் செண்டர் ஃபார் இண்டிபெண்டண்ட்ஸ் ஆஃப் ஜுடிஸியரி உள்பட முக்கிய மனித உரிமை அமைப்புகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளன.

புதிய அரசியல் சட்டம் உருவாக்குவதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் உட்படும் கமிஷனை உருவாக்க வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்


2.2.11

அமெரிக்கா விமானப்படை யூனிட் எகிப்தை நோக்கி செல்கிறது

வாஷிங்டன்,பிப்.2:எகிப்தின் சினாய் தீவில் பன்னாட்டு படையினருக்கும், கண்காணிப்பாளர்களுக்கும் கூடுதல் பலம் சேர்க்கும் விதமாக அமெரிக்க விமானப்படை ரெஜிமண்ட் அந்நாட்டிற்கு அனுப்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எகிப்து-இஸ்ரேல் ஒப்பந்தத்தில் நிபந்தனைகள் பேணப்படுகிறதா? என்பதை உறுதிச் செய்வதற்கான சர்வதேச அமைதிப்படைதான் எம்.எஃப்.ஒ.

அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளியான எகிப்து நாட்டு சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக் நிலைமை மக்கள் திரள் போராட்டத்தைத் தொடர்ந்து மோசமாக உள்ளது. இச்சூழலில்தான் அமெரிக்காவின் விமானப்படை யூனிட் எகிப்திற்கு செல்வது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்


எகிப்தின் மக்கள் திரள் போராட்டத்திற்கு துருக்கி, ஈரான் ஆதரவு, கவலையில் இஸ்ரேல்

அங்காரா,பிப்.2:எகிப்தின் மண்ணில் புயலாக வீசும் மக்கள் திரள் போராட்டத்தினால் முப்பது ஆண்டுகளாக சர்வாதிகார ஆட்சி நடத்திவந்த ஹுஸ்னி முபாரம் மேலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

முபாரக்கை ஆட்சியை விட்டு அகற்றியே தீருவோம் என்ற உறுதியுடன் தஹ்ரீர் சதுக்கத்தில் பெருந்திரளாக கூடியிருக்கும் லட்சக்கணக்கான எகிப்திய மக்களுக்கு துருக்கியும், ஈரானும் ஆதரவளித்துள்ளன.

எகிப்து நாட்டில் சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக்கிற்கு எதிரான மக்கள் போராட்டம் துவங்கி ஒருவாரம் கழிந்தபிறகும் மெளனம் சாதித்து வந்த துருக்கி பிரதமர் ரஜன் தய்யிப் உருதுகான் தற்போது எகிப்திய மக்களுக்கு தனது பரிபூரண ஆதரவை தெரிவித்துள்ளார்.

நாட்டின் ஸ்திரத்தன்மையும், பாதுகாப்பும் நிலைப்பெற வேண்டுமானால் மக்களின் குரலுக்கு மதிப்பளிக்க வேண்டுமென பாராளுமன்றத்தில் நடத்திய உரையில் அவர் தெரிவித்தார்.

எகிப்திற்கு நன்மையை ஏற்படுத்தும் காரியங்களை செய்யுங்கள். மக்களை திருப்தி படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள் என முபாரக்கிடம் உருதுகான் தெரிவித்துள்ளார்.

எகிப்து சுமூகமான சூழலுக்கு மாறினால் தான் கெய்ரோவுக்குச் செல்லப்போவதாக அவர் அறிவித்துள்ளார். அதேவேளையில், போராட்டம் அமைதியான வழியில் நடத்த வேண்டுமெனவும், நாட்டின் கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டுமெனவும் அவர் எகிப்து நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எகிப்திலும், துருக்கியிலும் விரைவில் சீர்திருத்தம் வரவேண்டுமென நாங்கள் விரும்புகிறோம். அத்துடன் அமைதியும், பாதுகாப்பும் தேவை. ஜனநாயக்த்திற்கான போராட்டங்களுக்கு துருக்கி என்றுமே ஆதரிக்கும் என உருதுகான் அறிவித்தார்.

எகிப்தில் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக போராடிவரும் மக்களுக்கு ஈரானும் தனது பரிபூரண ஆதரவை தெரிவித்துள்ளது. உலகில் சுதந்திரத்திற்காக போராடக் கூடியவர்களுடன் நாங்கள் இருப்போம். மகத்தான நாடான எகிப்தில் புரட்சிக்கு நாங்கள் எங்களுடைய ஆதரவை பிரகடனப்படுத்துகிறோம் என ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அலி அக்பர் ஸாலிஹி தெரிவித்துள்ளார்.

எகிப்தின் புரட்சி இஸ்லாமிய மேற்காசியா உருவாக உதவும் என நம்புவதாக ஈரான் தெரிவித்தது. அதேவேளையில் அரபுலகத்தை அதிரவைத்துள்ள போராட்டத்தில் அமெரிக்கா தலையிடுவதாக ஸாலிஹி குற்றஞ்சாட்டினார்.

பிராந்தியத்தில் மாற்றம் தேவை. மக்கள் ஆதரவு இல்லாத ஆட்சி கவிழவேண்டும். மேற்கத்திய சக்திகளின் கட்டுப்பாட்டிலுள்ள அரசுகள் கவிழ்வதற்கான நேரம் வந்துவிட்டது என்பதை நிரூபிக்கின்றனர் துனீசியா மற்றும் எகிப்து நாட்டு மக்கள் என ஸாலிஹி தெரிவித்துள்ளார்.

அதேவேளையில் எகிப்தில் ஈரானில் ஏற்பட்ட புரட்சிபோல நிகழ்ந்துவிடுமோ என்ற கவலையில் இஸ்ரேல் உள்ளது. அராஜகங்கள் நிறைந்த சூழலில் ஒரு கட்டமைக்கப்பட்ட இஸ்லாமிய சக்திக்கு நாட்டின் கட்டுப்பாட்டை தங்கள் வசம் கொண்டுவர இயலும். ஈரானில் அதுதான் நடந்தது. மற்ற சில இடங்களிலும் அதுதான் சம்பவித்தது என நேற்று முன்தினம் ஜெர்மனி சான்ஸ்லர் ஆஞ்சலா மெர்க்கலுடன் நடத்திய பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார்.

தங்களின் உற்றத் தோழனான முபாரக் தனிமைப்படுத்தப்படுவதை இஸ்ரேல் கவலையுடன் பார்க்கிறது.முபாரக்கிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்காதீர்கள் என இஸ்ரேல் அமெரிக்காவுடனும், மேற்கத்திய நாடுகளிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதற்கு அழுத்தம் கொடுக்க பல்வேறு நாடுகளில் செயல்படும் தங்களது தூதரக பிரதிநிதிகளுக்கு உத்தரவிட்டுள்ளது இஸ்ரேல்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்


1.2.11

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு-கர்நாடகத்தைச் சேர்ந்த பிரவீன் முத்தலிக் கைது

மும்பை: மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கர்நாடகத்தைச் சேர்ந்த பிரவீன் முத்தலிக் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.

மாலேகானில் கடந்த 2008ம் ஆண்டு குண்டுள் வெடித்தன. ரம்ஜான் மாதத் தொழுகையின்போது அங்குள்ள மசூதி அருகே மோட்டார் சைக்கிளில் டிபன் பாக்ஸ்களில் குண்டுகள் வைக்கப்ப்டிருந்தன. இந்த சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் இந்து தீவிரவாத அமைப்பான அபினவ் பாரத்துக்குத் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

இந்த நிலையில் தற்போது கர்நாடகத்தைச் சேர்ந்த பிரவீன் முத்தலிக் கைது செய்யப்பட்டுள்ளார். குண்டு வைத்த மூன்று பேரில் பிரவீன் முத்தலிக்கும் ஒருவர் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மற்ற இருவரான ராம்ஜி கல்சங்கரா மற்றும் சந்தீப் தாங்கே ஆகியோர் இதுவரை பிடிபடாமல் உள்ளனர்.

கைது செய்யப்பட்ட முத்தலிக் மும்பையில் உள்ள மகாராஷ்டிர சட்டவிரோத செயல் தடுப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை பிப்ரவரி 14ம் தேதி வரை போலீஸ் காவலில் அனுமதித்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். முத்தலிக்கையும் சேர்த்து இதுவரை இந்த வழக்கில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் முக்கியமானவர்கள் பெண் சாமியார் பிரக்யா சிங் தாக்கூர் மற்றும் லெப்டினென்ட் கர்னல் ஸ்ரீகாந்த் பிரசாத் புரோஹித் ஆவர்.

திட்டமிட்டபடி எகிப்தின் தலைநகரில்10 லட்சத்திற்க்கும் மேற்பட்ட மக்கள் பிரவாகம்

கெய்ரோ,பிப்.1:எகிப்து நாட்டின் சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக் பதவி விலக்கோரி பத்துலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தஹ்ரீர் சதுக்கத்தில் ஒன்றுகூடியுள்ளனர். இன்று காலை முதல் மக்கள் தஹ்ரீர் சதுக்கத்தை நோக்கி படையெடுத்து வந்தனர்.கட்டுங்கடங்காத மக்கள் கூட்டத்தினால் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது. ஹுஸ்னி முபாரக் ராஜினாமாச் செய்யும்வரை போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் பிரகடனப்படுத்தியுள்ளனர்.
                             இதைப்போன்று அலெக்ஸாண்ட்ரியாவிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே எகிப்தின் பழம்பெரும் கட்சியான, வஃப்தின் தலைமையில் முக்கிய எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து தேசிய கூட்டணிக்கு முயன்று வருகின்றனர். முபாரக்கிற்கு அதிகாரத்தில் நீடிக்க தார்மீகரீதியாக உரிமையில்லை என வஃப்த் கட்சி கூறுகிறது.

அதேவேளையில், ஹுஸ்னி முபாரக்குடன் எவ்வித பேச்சுவார்த்தைக்கும் தயாரில்லை என இஸ்லாமிய கட்சியான முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் அறிவித்துள்ளது.

போராட்டம் தீவிரமடைந்த பொழுதும், பதவி விலகமாட்டேன் என அடம்பிடிக்கிறார் முபாரக்.

செய்தி:மாத்யமம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத்,11 வது மாநில பொதுக்குழு


கோரிக்கை ஏற்காவிட்டால் தி.மு.க.,வுக்கு ஆதரவு இல்லை
சேலம்: “தமிழகத்தில், 5 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்கும் கோரிக்கையை தி.மு.க. ஏற்காவிட்டால், வரும் சட்டசபை தேர்தலில் ஆதரவு கிடையாது’ என, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முடிவு செய்துள்ளது.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின், 11வது மாநில பொதுக்குழு கூட்டம் நேற்று சேலத்தில் நடந்தது. பொதுக்குழுவில், அமைப்பின் மாநில தலைவராக ஜெயிலூல்ஆபிதீன், பொது செயலாளர் ரகமத்துல்லா, பொருளாளராக அன்வர்பாய், துணைத் தலைவராக அப்துல் ரகீம், துணை பொதுச் செயலாளராக சையத் இப்ராஹீம் மற்றும் 7 செயலாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.பொதுக்குழு முடிந்தவுடன், தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் மாநில தலைவர் ஜெயிலூல் ஆபிதின் கூறியதாவது:தமிழகத்தில் வழங்கப்பட்டுள்ள, 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதில் பல்வேறு நடைமுறை சிக்கல் உள்ளது.
இந்த பிரச்னைகளை களைய கண்காணிப்பு குழுஅமைப்பதாக, அரசு தரப்பில் உத்தரவாதம் கொடுக்கப்பட்டுள்ளது. அதை உடனடியாக செயல்படுத்த வேண்டும். அதோடு, இட ஒதுக்கீட்டை 5 முதல் 7 சதவீதம் வரை உயர்த்தி, தனி ஒதுக்கீடாக வழங்க வேண்டும். இந்த கோரிக்கையை நிறைவேற்றுவதாக, வாக்குறுதி கொடுக்கும் கட்சிக்கு வரும் சட்டசபை தேர்தலில் ஆதரவு தெரிவிக்க முடிவு செய்துள்ளோம்.கடந்த எம்.பி. தேர்தலில், தி.மு.க.,வின் வெற்றிக்கு நாங்களும் காரணம். அதனால், வரும் தேர்தலில் எங்கள் கோரிக்கையை ஏற்கும் கட்சிக்குத்தான் ஆதரவு தெரிவிப்போம். கோரிக்கையை ஏற்காவிட்டால், தி.மு.க.,வுக்கு கண்டிப்பாக ஆதரவு அளிக்க மாட்டோம்.இவ்வாறு அவர் கூறினார். இதேபோல் முஸ்லிம்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள 3.5 சதவிகிதம் இடஒதுக்கீடு முறையாக கிடைக்கவில்லை  என்றும் அதனை கண்கானிக்க அரசு குழு அமைதிடவேண்டும் என்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முதலமைச்சரிடமும் துணை முதல்வரிடமும் நீண்ட நாட்களாக கோறி வந்தது.அது தற்போது நிறைவேரியுள்ளதால் அதற்காக நன்றி தெரிவித்து கொண்டார்கள்.  

ஹோஸ்னி முபாரக்கின் மனைவி, மகன் லண்டனுக்கு ஓடியதாக தகவல்

கெய்ரோ: எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக்கின் மனைவி மற்றும் மகன் தனி விமானம் மூலம் ரகசியமாக லண்டனுக்குத் தப்பி ஓடி விட்டதாக எகிப்திலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

82 வயதாகும் முபாரக் கடந்த 30 வருடங்களாக எகிப்தை தனது பிடியில் வைத்துள்ளார். தனக்குப் பின்னர் தனது மகன் கமால் முபாரக்கை அதிபராக்க அவர் திட்டமிட்டிருந்தார். ஆனால் அதற்குள் அங்கு மக்கள் புரட்சி வெடித்துள்ளது.

முபாரக் குடும்பம், கடும் நெருக்கடிக்குள்ளாக்கியுள்ள நிலையில், தற்போது முபாரக்குக்கு எதிர்ப்பு பல மடங்காக அதிகரித்து வருவதால் நாட்ட்டை விட்டு வெளியேறத் தொடங்கியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

கமால் முபாரக் தனது மனைவி மற்றும் மகளோடு லண்னுக்கு தப்பி ஓடி விட்டதாக அக்பர் அல் அராப் என்ற எகிப்து இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

அதேபோல முபாரக்கின் மனைவியும் லண்டனுக்குப் போய் விட்டதாக தகவல்கள் கூறுகின்றன. கமால் முபாரக்கும், அவரது மனைவி, குழந்தையும், தனியார் விமானம் மூலம் லண்டனுக்குப் போய் விட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பெட்டி பெட்டியாக ஏராளமான பொருட்களை அவர்கள் எடுத்துச் சென்றதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. அவை பணமா என்ன என்பது குறித்துத் தெரியவில்லை.

வெளிநாட்டவர்கள் வெளியேற உத்தரவு

இதற்கிடையே, போராட்டம் வலுத்து வருவதைத் தொடர்ந்து எகிப்தில் தங்கியுள்ள வெளிநாட்டினர்களை வெளியேறுமாறு அவர்கள் சார்ந்த நாடுகளின் அரசுகள் கேட்டுக் கொண்டுள்ளன.

அவர்கள் பாதுகாப்புடன் வெளியேறுவதற்காக ஒவ்வொரு நாடும் சிறப்பு விமானங்களை அனுப்பி வைத்து வருகின்றன. இதனால் அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகின்றனர்.

கனடா, துருக்கி, சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து ஆகிய நாடுகள் தங்களது நாட்டவர்கள் எகிப்தில் இருக்க வேண்டாம் என எச்சரிக்கை அறிவுரையை பிறப்பித்துள்ளன. இவர்களை தங்களது விமானங்கள் மூலம் எந்தவிதக் கட்டணமும் இன்றி சொந்த நாட்டுக்கு அழைக்கும் பணிகளைத் துரிதப்படுத்தியுள்ளன.

எகிப்திலிருந்து நாடு திரும்பும் இந்தியர்களிடம் பணம் பறிக்கும் ஏர் இந்தியா

மும்பை: பற்றி எரியும் எகிப்திலிருந்து தப்பி இந்தியாவுக்கு வரும் பயணிகளிடம் பெருமளவிலான பணத்தை டிக்கெட் கட்டணமாக ஏர் இந்தியா பறிப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எகிப்தில் அதிபர் முபாரக்குக்கு எதிராக மக்கள் போராட்டம்வெடித்துள்ளது. இதனால் அங்கு பெரும் பதட்டம்நிலவுகிறது. இதையடுத்து ஒவ்வொரு நாடும் தங்களது நாட்டு குடிமக்களை பத்திரமாக அங்கிருந்து மீட்டு வருகின்றன.

பெரும்பாலான நாடுகள் இலவசமாகவே அவர்களை விமானங்கள் மூலம் அழைத்து வருகின்றன. ஆனால் இந்தியாவின் ஏர் இந்தியா நிறுவனமோ, வந்த வரைக்கும் லாபம் என்பது போல பெரும் பணத்தை தருமாறு கூறி இந்திய பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

எகிப்திலிருந்து இந்தியா வரும் ஏர் இந்தியா சிறப்பு விமானங்களில் பயணிக்க வேண்டுமானால் ரூ. 45,000 முதல் ரூ. 55,000 வரை பறிக்கிறார்களாம். இதைக் கொடுக்காவிட்டால் விமானம் ஏற முடியாது என்றும் கட் அன்ட் ரைட்டாக சொல்கிறார்களாம்.

அங்கிருந்து மும்பைக்கு வந்து சேர்ந்த பயணிகள் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு இது.

ஆனால் இதை நியாயப்படுத்தியுள்ளது ஏர் இந்தியா. இது மீட்புப் பணி அல்ல என்று மத்திய அரசு எங்களுக்குத் தெரிவித்துள்ளது. மீட்புப் பணியாக இருந்தால் கட்டணம் குறைவாக இருக்கும், ஏன் கட்டணமே இல்லாமல் கூட இருக்கும். ஆனால் மீட்புப் பணியாக இதை அரசு அறிவிக்காததால், இந்தக் கட்டணத்தை செலுத்தியாக வேண்டும் என்று தெனாவெட்டாக கூறியுள்ளது ஏர் இந்தியா.

ஏர் இந்தியா மட்டுமல்லாமல், எகிப்திலிருந்து வேறு நாடுகளுக்குச் செல்ல விரும்புவோர், எகிப்து ஏர், கத்தார் ஏர்வேஸ், ஓமன் ஏர் உள்ளிட்டவற்றுக்குச் சென்றால் அவர்களும் வழக்கத்தை விட அதிக கட்டணத்தை வசூலிக்கிறார்களாம்.

இந்தக் கட்டணத்தையும் கூட ரொக்கமாக கொடுத்தால்தான் டிக்கெட் போட்டு விமானத்தில் ஏற அனுமதிக்கிறார்களாம்.

இதற்கிடையே, இதுவரை 2 சிறப்பு விமானங்களை எகிப்துக்கு இயக்கிய ஏர் இந்தியா நிறுவனம் மேலும் ஒரு சிறப்பு விமானத்தை இயக்கவுள்ளதாம். அது சரி, காசைக் கறப்பதாக இருந்தால் எத்தனை சிறப்பு விமானத்தையும் கூட இயக்கலாமே.