சென்னை, பிப். 19 சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பல ஆண்டு காலம் பணியாற்றியவர் எப்.எம்.இப்ராகிம் கலிபுல்லா. இவர், தற்போது ஜம்மு-காஷ்மீர் உயர் நீதிமன்ற நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஜனாதிபதி பிறப்பித்துள்ளார்.
இவர், அடுத்த மாதம் (மார்ச்) 3-ந் தேதிக்குள் ஜம்மு-காஷ்மீர் உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்க வேண்டும் என்று ஜனாதிபதியின் அறிவிப்பாணையில் கூறப்பட்டுள்ளது
