தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

21.9.11

ஆஸ்திரேலியாவில் விநாயகரை கேலி செய்து நாடகம் இந்துக்கள் கண்டனம்


ஆஸ்திரேலியாவில் ஒரு நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த நாடகத்தில் இந்து கடவுளான விநாயகரை கேலிசெய்வது போல காட்சி அமைக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
விநாயகரை கைது செய்து அவரிடம் நாஜி உளவுத்துறை விசாரணை நடத்துவது போல காட்சி வடிவமைக்கப்படுள்ளது.
விநாயகரை நாஜி உளவுப்படை கைது செய்து துன்புறுத்துவது போன்ற காட்சி பொருத்தமற்றது என அமெரிக்கவாழ் இந்து சமூகநல ஆர்வலர் ராஜன் சேத் ஆட்சேபம் தெரிவித்தார்.
விநாயகர் கோயில்களிலும், வீடுகளிலும் வழிபட்டுவரும் கடவுள். அந்த கடவுளை தியேட்டர்களிலும்,
மேடைகளிலும் கேலிப் பொருளாக்கி இருக்கக்கூடாது என அவர் கூறினார். இதுபோன்று பலரும் இந்த காட்சிக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் விநாயகர் மட்டும் கேலி செய்யப்படவில்லை. இதற்கு முன்பாக லஷ்மி கடவுளின் உருவப்படத்தை சிட்னியில் நடைபெற்ற ஃபேஷன் நிகழ்ச்சி ஒன்றில் நிர்வாண உடையில் சித்தரித்திருந்தனர். இதை எதிர்த்து பல்வேறு நாடுகளில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. அதன்பிறகு அந்த ஆஸ்திரேலிய நீச்சல் உடை நிறுவனம் மன்னிப்பு கேட்டது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: