‘தமிழீழ விடுதலையும்
ஐ.நா.நிபுணர் குழு அறிக்கையும்’ என்ற தலைப்பில், சென்னை, தியாகராயர் நகர், வெங்கடநாராயணா சாலையில் உள்ள செ.தெ.நாயகம் பள்ளியில் இன்று மாலை 5 மணி முதல் கருத்தரங்கம் நடைபெறுகிறது.
ஐ.நா.நிபுணர் குழு அறிக்கையும்’ என்ற தலைப்பில், சென்னை, தியாகராயர் நகர், வெங்கடநாராயணா சாலையில் உள்ள செ.தெ.நாயகம் பள்ளியில் இன்று மாலை 5 மணி முதல் கருத்தரங்கம் நடைபெறுகிறது.
இக்கருத்தரங்கில் ஐ.நா.அறிக்கையும் ஊடகங்களும் என்று தலைப்பில் மூத்த இதழாளர் டி.எஸ்.எஸ்.மணியும், ஐ.நா.அறிக்கையின் சாராம்சங்கள் – சாதகமும், பாதகமும் என்று தலைப்பில் இதழாளர் பிரியா தம்பி, மனித உரிமைப் போராளிகள் பாண்டிமாதேவி, அருள் எழிலன் ஆகியோரும், ஐ.நா.அறிக்கையும், இந்தியாவும் என்று தலைப்பில் ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணியாளர் எம்.ஜி.தேவசகாயம், எழுத்தாளர் இராசேந்திர சோழன் ஆகியோரும், ஐ.நா.அறிக்கையும், மனித உரிமைப் போரும் என்ற தலைப்பில் பேராசிரியர் பால் நியூமெனும், சர்வதேச அரசியல் சதியில் சிக்கும் தமிழீழ விடுதலை என்ற தலைப்பில் இதழாளர் கா.அய்யநாதன், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஆகியோரும் பேசுகின்றனர்.
மே 17 இயக்கம் இந்தக் கருத்தரங்கை ஏற்பாடு செய்து நடத்துகிறது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக