தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

8.11.10

உலக அமைதிக்காக இந்தியா-அமெரிக்கா இணைந்து பாடுபடும்: மன்மோகன் சிங்

புதுதில்லி, நவ.8- உலக அமைதிக்காக இந்தியாவும் அமெரி்க்காவும் இணைந்து ஆக்கப்பூர்வமாகவும் உறுதியாகவும் பாடுபடும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் இன்று தில்லியில் செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தபோது பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
"இருதரப்பு உறவுகளை மேலும் பல்வேறு துறைகளுக்கு விரிவுபடுத்தவும், இருநாடுகளும் இணைந்து ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தானில் கூட்டாக சில திட்டப் பணிகளை மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அணுசக்தி வழங்கும் நாடுகள் குழுவில் (என்எஸ்ஜி) இந்தியா சேர அமெரிக்கா ஆதரவு தரும். தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பக் கருவிகளை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கான கட்டுப்பாடுகளை விலக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது வரவேற்கத்தக்கது." என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
"இருநாடுகளும் பரஸ்பரம் வைத்துள்ள நம்பிக்கை மேலும் வலுப்பெறுவதை உறுதிபடுத்துவதற்கான அறிவிப்புதான் இந்த கூட்டுப் பேட்டி" என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

0 கருத்துகள்: