
புதுடில்லி:"சி.பி.ஐ.,யை மத்திய அரசு தவறாக பயன்படுத்துகிறது' என, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி குற்றம் சாட்டியுள்ளார்.பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில், பா.ஜ.,வின் பார்லிமென்ட் குழுக் கூட்டம் நடந்தது.
இதில், அக்கட்சியின் மூத்த தலைவர் அத்வானி கலந்து கொண்டு பேசினார்.அப்போது அவர் கூறியதாவது:பயங்கரவாத செயல்களில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினருக்கு தொடர்பு உள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது. இந்த விவகாரத்தில், சி.பி.ஐ.,யை மத்திய அரசு தவறாக கையாளுகிறது. இந்த அரசு தான், ஊழல்களில் அதிகமாக ஈடுபட்டுள்ளது. காமன்வெல்த் விளையாட்டு போட்டியில், ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் ஊழல் நடந்துள்ளது.இதில், டில்லி அரசு, மத்திய அமைச்சர்கள், விளையாட்டு துறை அமைச்சர், நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் உள்ளிட்டோர் அனைவருக்கும் இந்த ஊழலில் தொடர்புள்ளது.
இது தவிர, ஸ்பெக்ட்ரம் ஊழல், ஆதர்ஷ் வீடு ஒதுக்கீட்டில் ஊழல் என்று ஏராளமான ஊழல்கள் நடந்துள்ளன. இந்த ஊழல் விவகாரங்களை விசாரிக்க பயன்படுத்தாமல், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினர் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பழி சுமத்துவதற்கு பயன்படுத்துகின்றனர்.அசோக் சவானையும், சுரேஷ் கல்மாடியையும் பதவி நீக்கம் செய்வது மட்டும் போதாது. ஊழல் குறித்து, விரிவான நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்.இவ்வாறு அத்வானி கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக