கோவை, ஜூலை. 13- சிக்னலில் நின்றிருந்த நூற்றுக்கணக்கான வாகன ஓட்டிகள் முன்னிலையில், வாலிபரை கல்லால் தாக் கொன்ற கி நண்பர்கள் நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மாநகர போலீஸ் சார்பில் சாலை சந்திப்புகளில் சிக்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து விதிமீறும் வாகன ஓட்டிகள் மீது வழக்கு தொடர்ந்து, அபராதம் வசூலிக்க, நகரின் முக்கிய ரோடுகளில் அமைந்துள்ள சிக்னல்களில், 186 நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மட்டுமல்லாது, குற்றச் செயலில் ஈடுபடுபவர்களையும் பிடிக்க, கூடுதலாக சில இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த, போலீஸ் கமிசனர் அமரேஷ் பூசாரி உத்தரவிட்டுள்ளார். கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் அனைத்தையும் கமிசனர் அலுவலக வளாகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடியே 24 மணி நேரமும் போலீசார் கண்காணித்து, நடவடிக்கை மேற்கொள்கின்றனர்.